Saturday 29 January 2011

சதீஸ் கொலை/மரணம் தொடர்பில்... (இற்றைப்படுத்தப்பட்டது)

முன்னைய பத்தியில் சதீஸ் கொலை செய்யப்பட்டார் என ஆரம்பகட்டத்தில் இரண்டு மூன்று இணையத்தளங்களில் வந்த செய்திகளின் அடிப்படையிலேயே எழுதினேன். யாழ் இணையத்தில் ஈழநாதம் மற்றும் தமிழ்த்தாய் ஆகிய இணையத்தளங்களை மேற்கோள்காட்டி இதைப்பற்றி எழுதியிருந்தார்கள். தமிழ்த்தாய் இணையத்தளத்தில் செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது.
Picture
Picture
ஈழநாதம் செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது:
Picture
ஆனால் இப்போது உதயன் வெளிவிட்டிருக்கிற செய்தி இந்த இரு செய்திகளுக்கும் முற்றிலும் மாறானதாக இருக்கிறது. சதீசின் சாவு ஒரு வீதி விபத்தே என்று சட்ட மருத்துவப் பரிசோதனைகளில் தெரியவந்தது என்று உதயன் இணையப்பதிப்பில் செய்திவெளிவிடப்பட்டிருக்கிறது. குழப்பங்களின் எல்லையில் நான் நின்றுகொண்டிருக்கிறேன் இப்போது என்பதை மட்டுமே உறுதிப்படுத்தமுடிகிறது என்னால்.

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, சதீஸ் எப்படி இறந்தார் என்பதை விட, அவர் இறப்பு தொடர்பில் இருக்கிற சில கருத்துக்கள் பிழையென்ற என்னுடைய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதே போல் ஆனைவிழுந்தானுக்கும் வல்லிபுரத்துக்கும் இடைப்பட்ட ஆள்நடமாட்டமற்ற இடத்தில் இப்படியான மோசமான விபத்துக்கான சாத்தியங்கள் பற்றிய கேள்விகளும் மனதைவிட்டு அகல மறுக்கின்றன. அவரது மரணத்துக்கான காரணங்கள் தொடர்பில் தவறாக நான் வாசிப்போரை வழிநடத்தியிருந்தால் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

No comments: