பம்பலப்பிட்டிக் கடற்கரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பாலவண்ணன் சிவகுமார் என்கிற இளைஞன் பலவந்தமாகக் கடலுக்குள் தள்ளப்பட்டு, கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு சாகடிக்கப்பட்டிருக்கிறார். இன்னும் சரியான மொழியில் சொல்வதென்றால் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தில் ஒரு காவல்துறை அதிகாரியும் சம்பந்தப்பட்டிருக்கிறார். (இது முழுமையாக காவல்துறை மட்டுமே செய்த சம்பவம் என்பதாக மிக வேகமாகத் திரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது).
14 comments:
Good Post. As mentioned in Bible if people wait just for a second, to let the first stone (or beating) come from a person who did not do any sin then these kind of behaviors in Tamil (and all) communities will go away.
Mohan
True Mohan.... I guess the whole system operating all around the world is just erratic.I have no idea how this is going to change. (And I know... I'm going to get bashed for this view-point)
அருமையான பார்வை. எனது மனதில் ஓடியவையும் இவைதான். அந்த இந்துக்கல்லூரி சம்பவம் போல இன்னும் எத்தனையோ நடந்திருக்கிறது. ஆறறிவு படைத்த எந்த ஒரு மனிதனாலும் முடியாத காரியங்கள் இவை.
//அந்த மரணத்தில் ஏதாவது அரசியல் இருந்தால் கண்டுகொள்ளப்படுவோம். இல்லாவிட்டால் உலகில் நாள்தோறும் நிகழும் மரணக்கணக்கில் ஒன்றாக எழுதிவைக்கப்படுவோம்.//
'அரசியல் நடாத்தமுடிந்தால்' என்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
வேடிக்கை பார்த்தவர்களும் எனச் சொல்ல நினைத்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள். மதம், இனத்துக்கப்பாற்பட்ட மிருக வெறி இது.
இறந்தவர் மட்டுமில்லை அங்கு அப்போதிருந்த அனைவருமே மன நலம் பாதிக்கப்பட்டவர்களே. உண்மை கிருத்திகன். நீங்கள் குறிப்பிட்ட சம்பவங்கள், அவற்றுக்கான நீதி எங்கே? இறந்தவன் தமிழன். சாகடித்தவன் சிங்களவன். இதற்கான நீதி எங்கே? உலகம் மிகக் கேவலமான பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. அது மட்டும் எந்த விதப் பிரச்சினையும், போராட்டங்களும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எப்போது நாம் விழிப்போம்? இதை அரசியலாக்கலாம். போராடலாம். உண்மைகள் திரிக்கப் படலாம். எல்லாம் செய்யலாம். ஆனால் அங்கு அப்போதிருந்த எல்லோரும் பதில் சொல்ல வேண்டும். அனைவரும் தண்டிக்கப் படவேண்டும். ஏதாவதொரு வகையில். இது சிங்கள தமிழ் படுகொலை என்பதைவிட ஒரு மனிதப் படுகொலை என்ற வகையில் உற்று நோக்கப் பட வேண்டும்.
///அரசியல் நடாத்தமுடிந்தால்' என்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.///
உண்மை சுபாங்கன்... அப்படி எழுதியிருந்தால் இன்னும் வலிமையாக இருக்குமோ என்றுதான் யோசிக்கிறேன்
பாலா...
வீடியோவைப் பார்த்தீர்களா... ஒரு ஐம்பது பேராவது வேடிக்கை பார்த்தார்கள். ஒருவர்கூட தடுத்து நிறுத்த முயலவில்லை.
///மதம், இனத்துக்கப்பாற்பட்ட மிருக வெறி இது///
பயமாய் இருக்கிறது பாலா.... ஒரு மார்க்கெட்டுக்குள் என்னை ஒருவன் உற்றுப் பார்த்தால்கூட பயமாய் இருக்கிறது.
மயூரா...
///ஆனால் அங்கு அப்போதிருந்த எல்லோரும் பதில் சொல்ல வேண்டும். அனைவரும் தண்டிக்கப் படவேண்டும். ஏதாவதொரு வகையில்///
அந்தத் தண்டனை குறித்துத்தான் எனக்குள் குழப்பம் இருக்கிறது. எப்படித் தண்டித்தால் இப்படியான சம்பவங்கள் குறையும் என்பது என் சிற்றறிவுக்குப் புலப்படவில்லை. மரணதண்டனையை மனதார எதிர்க்கிறேன். ஆனால் மரணதண்டனைக்கு நிகராக, இந்த மனிதர்கள் மறுமுறை பிறந்து வருபவர்கள் போல் ஒரு உணர்வு வரக்கூடிய தண்டனைதான் தேவை
///இது சிங்கள தமிழ் படுகொலை என்பதைவிட ஒரு மனிதப் படுகொலை என்ற வகையில் உற்று நோக்கப் பட வேண்டும்.///
நிச்சயமாக
கிருத்திகன் ஒண்டும் சொல்லுறதுக்கில்லை...
:(
அருமையான அலசல். என்ன செய்தாலும் போனது ஒரு உயிர் ....மீள் வரவா போகிறது. எல்லாமே இருட்டடிப்பு செய்யபட்டு அந்த கொலைஞ்ன் மீண்டும் வெளியே வந்து விடுவான். குரூரமான் செயல்.
சிவகுமாரைக் கொன்ற சிங்களனும், தினேஷைக் கொன்ற தமிழனும், பெஸ்ட் பேக்கரியில் வைத்து தாண்டவம் ஆடிய காவிகளும், முஸ்லிம் நாடொன்றில் கடையில் பாண் திருடிய ஐந்து வயதுச் சிறுவனின் கைகளை வாகனத்தால் நசுக்கி முடமாக்கிய மதபிதாவும் ஒரே ஜாதி என்றே சொல்வேன். அத்தனை பேரும் மனம் பிறழ்ந்தவர்கள்,
I differ with you in this "செத்துப்போன சிவகுமாரைப் போலவே" statement.... above mentioned are pasycho pathic animals
...Sivakumar was not......
வெத்துவேட்டு...
நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது.
ஆழமான, சிந்திக்கத் தூண்டுகின்ற கருத்துக்கள்.
//அடியாழத்தில் ஒளிந்திருக்கக்கூடிய ஒரு கேவலமான மனித மன இயல்பை நாங்கள் மழுப்ப முயல்கிறோம்.
உண்மை
புரிதலுக்கு நன்றி பால்குடி
Post a Comment