Friday 9 October 2009

தமிழ் சினிமா-பத்திரிகையாளர்கள்-கற்பு

புவனேஸ்வரியைக் கைது செய்தது பெரிய பகிடியாகப் போய்விட்டது போல் இருக்கிறது. கேடுகெட்ட இரு துறையைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்கிறார்கள். எத்தனையோ பிரச்சினைகளுக்கு உடனடியாக ஒரு தீர்வு காணமுடியாத தலைவர் ஒருவர் வேக வேகமாகப் பிரச்சினைகளை முடித்து வைக்கிறார். தமிழக அரசியல் அரங்கில் சமீபத்திய இந்தப் பரபரப்பு பற்றிய என்னுடைய கண்ணோட்டம் இங்கே.

சினிமாத் துறை

சினிமாத் துறையில் இருக்கும் ஆண்கள்/பெண்களின் நடத்தை பற்றி விமர்சிக்க எனக்கு ஒன்றும் அருகதை இல்லை. ஏனென்றால் இவர்கள் யாருமே எனக்கு தனி மனிதனாக அல்லது மனுஷியாக அறிமுகம் இல்லாதவர்கள். இருந்தும் இவர்கள் மீது சில குற்றச்சாட்டுகள் உண்டு.

என்னதான் நாங்கள் எல்லாம் புனிதர்கள் என்பதாக இவர்கள் வேஷம் போட்டாலும் யாரும் நம்பப்போவதில்லை. இதே புனிதர்கள் தமிழ் நாட்டுப் பெண்களின் கற்பு பற்றிக் குஷ்பு சொன்னபோது குஷ்புவின் பக்கம் நின்றார்கள். இப்போது பக்கம் மாறி நிற்கிறார்கள். உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் குன்றிமணிகள், எங்கள் வீட்டுப் பெண்களெல்லாம் குப்பைகளா? குஷ்பு சொன்ன கருத்து சரி பிழை என்ற வாதத்துக்கு நான் வரவில்லை. அவர் சொன்ன விஷயம் இன்றைய மத்தியதர, உயர் மட்டக் குடும்பங்களில் நடக்கிறது என்பது உண்மைதான். ஆனால் ஒரு சராசரி தமிழ்ப் பெண்ணின் மனம் பாடுபட்டிருக்கும்தானே? உயர்தர வர்க்கங்களில் சர்வ சாதாரணமாக நடக்கும் அப்படியான அத்து மீறல்களை வைத்துத் தமிழ் நாட்டுப் பெண்கள் எல்லோரையும் எப்படி மதிப்பிடலாம் குஷ்பு? ஏதோ ஒரு மூலையில் இருக்கும் அப்பா அம்மா காட்டியவனுக்குக் கழுத்தை நீட்டிய பொன்னம்மாவிற்கு எப்படி இருந்திருக்கும்? அப்போது என்ன செய்தார்கள் இந்தப் புனிதர்கள்? கண்டித்த தங்கர் பச்சானைக் கூப்பிட்டு மன்னிப்புக் கேட்க வைத்தார்கள்.

இந்தப் பெரிய மனிதர்கள் திடீரென நடிகைகளைப் பத்தினித் தெய்வங்களாகக் காட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது. இவர்களில் எவனாவது ஒரு நடிகைக்கு நல்ல மாதிரி ஒரு வேஷம் கொடுத்திருப்பானா. 15 வயதில் நடிக்க வந்துவிட்டாராம் ஸ்ரீப்ரியா. அப்போதே அவரின் அப்பா வயதுள்ள நடிகருக்கு ஜோடியாகப் போட்டு, அவரது மார்பை zoom பண்ணிப் படம் பிடித்து இவர்கள் போட்டுவைத்த விதைதான் இன்றைக்கு சர்வசாதாரணமாக அவரை விபசாரி என்று ஒருவன் கூறும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது என்பது ஸ்ரீப்ரியாவுக்குப் புரியவில்லையா அல்லது புரியாதமாதிரி நடிக்கிறார்களா? சிறு பிள்ளை படம் நடிப்பது தவறு, இல்லை என்ற வாதம் வேண்டாம், அதே சிறு பிள்ளையைப் பாலியல் ரீதியாகச் சித்தரித்த இந்தப் பெரிய மனிதர்களை விட, செய்தி போட்ட பத்திரிகைக்காரன் ஒன்றும் கெட்டவனில்லை. பேத்தி வயதுப் பெண்களோடு சோடி கட்டும் பல ஈனப் பிறவிகள் இருந்த சபையில் ஸ்ரீப்ரியா பாவித்த வார்த்தை அந்தப் பத்திரிகையாளனை மட்டுமல்ல, அந்த ஈனப் பிறவிகளையும்தான் சுடும். (இங்கே நான் சொல்லும் ஈனப் பிறவிகள் என்ற வார்த்தைக்கு யாருமே விதிவிலக்கு அல்ல, ஸ்ரீப்ரியாவின் ஆரம்பகாலக் கதாநாயகன் தொடக்கம், கோபப்பட்ட கதாநாயகன் வரை).

திரையுலகில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் யாரும் அறியாததல்ல. 'நாங்கள் அவளுங்களை என்னவும் செய்யலாம், நீங்கள் கண்டுக்கப்பிடாது' என்கிற மாதிரித்தான் கூச்சல் போடுகிறார்கள் இவர்கள். இதெல்லாத்தையும் விடக் கேவலம், இதைவிட எத்தனையோ பெரிய பிரச்சினைகளில் எல்லாம் இவ்வளவு வேகமாக இந்த மகான்கள் செயற்படவில்லை. தன் இனத்துக்காக முழங்கி சிறைக்குப் போன சீமானை இந்த மகான்கள் கண்டுகொள்ளவில்லை. பாரதிராசாவின் அலுவலகம் தாக்கப்பட்டது பிரச்சினையாகக் கொள்ளப்படவில்லை. அதைவிடுங்கள், உங்கள் உள்வீட்டில் இருந்துதானே வந்தாள அந்தப் பெண் புவனேஸ்வரி, அவளைப் பற்றிய கதை ஏதும் இல்லை. உங்கள் வீட்டுப் பெண்கள் என்றதும் கொதித்துப் போய் வந்து கத்துகிறீர்கள். ஸ்ரீப்ரியா, மஞ்சுளா, சீதா, நளினி, ஷகீலா என்று எல்லார் போலவும் அவளும் பெண்ணே. அவள் உட்பட அத்தனைத் திரைத்துறைப் பெண்கள் மீதும் விழுந்த இந்தப் பழிக்கும், அவள் போலவே தடுமாறிப்போன அத்தனை பெண்களின் நிலைக்கும், முழுப் பொறுப்பு நீங்கள்தான் உத்தமராசாக்களே.

பல காலம் இந்தியாவில் இருந்துவிட்டு ஊர் வந்த எங்கள் நண்பன் ஒருவன் சொன்னான். ‘அடப் போடா அவளுங்களை எல்லாம் யார் மதிக்கிறானுவ. வந்தாலே தேவடியான்னுட்டு போய்ட்டு இருப்போம்' என்று சொன்னான். அந்தத் தேவடியா பட்டம் அவர்களுக்குக் கிடைக்க முழுக்க முழுக்கக் காரணம், இந்த சினிமா உத்தமர்களே. இந்தக் கூத்தை எல்லாம் பார்த்து எனக்கு கொஞ்சம் சுடுகிறது. இந்த மகா கேவலர்களின் சித்தரிப்புகளைக் காசு கொடுத்துப் பார்த்து இன்றுவரை அவர்களை ஊக்கப்படுத்திய நாங்களும் ஒரு வகையில் குற்றவாளிகள்தான். தெரிந்தோ தெரியாமலோ அப்படி வக்கிரமாக அந்தப் பெண்களை நாங்களும்தான் ரசித்திருக்கிறோம்....சீ த்தூ.... (எனக்கு நானே துப்பிக் கொள்கிறேன்)

பத்திரிகைகள்

பத்திரிகா தர்மம் என்று ஒன்று இன்றைக்கு இல்லவே இல்லை. இந்தப் பிரச்சினை வர முன்னரே எனக்குப் பத்திரிகைகள் மீதான வெறுப்பு உச்சத்தை அடைந்திருந்தது. அதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அவைகளையும் பட்டியலிடுவோம்.

இந்தக் கிசு கிசுவைப் படியுங்கள் தமிழ் நாட்டுப் பத்திரிகை ஒன்றிலிருந்து தின முரசு எடுத்துப் போட்ட செய்தி இது. ‘அறையைப் பூட்டிக் கொண்டு வாரிசு நடிகரும் மஜ்னுவின் காதலியும் டிஸ்கசன் செய்தார்கள். உதடுகள் சந்தித்து உரையாடிக் கொண்டன. மஜ்னுவின் காதலியின் கைகள் வாரிசு நடிகரின் அடர்ந்த மார்பின் ரோமங்களை ஆராய்ச்சி செய்தன. அதற்கிடையில் இவர்களுக்குப் 'பால'மான அந்த இயக்குனர் சிவபூசைக் கரடி மாதிரி வந்து காரியத்தைக் கெடுத்தார்'. யாரென்று குழம்ப வேண்டாம். சூர்யா, லைலா, பாலா. நந்தா சமயத்தில் வந்த கிசு கிசு இது. சூர்யாவும் லைலாவும் அப்படியே இருந்தார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், கைகள் ரோமங்களை ஆராய்வதெல்லாம் எழுதியவனுக்கு எப்படித் தெரியும். அவர்கள் செய்யும்போது நீ என்ன விளக்கா பிடித்தாய்? (ஆனால் இதையெல்லாம் அந்த வயதில் வாங்கிப் படிக்கும்போது சுவையாக இருந்தது)

இதைவிட மோசமாக என்னைக் காயப்படுத்தியது, இவர்கள் செய்த பிண வியாபாரம். அதிலும் மிகக் கேவலமாக பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று படம் ஒன்றைப்போட்டு எங்களின் சனங்களின் அவலத்தைக் காசாக்கியபோது, வாங்கி அடுக்கி வைத்திருந்த சில இந்தியப் பத்திரிகைகளைத் தொடவே மனமில்லாமல் போய்விட்டது. இன்றைக்கும் தொடாமல் வைத்திருக்கிற பத்திரிகைகள் அதிகம். கொடுத்த காசைக் குப்பையில் எறிய மனம் வரவில்லை எனக்கு. (என்ன இப்போதெல்லாம் அந்தக் காசை மிச்சம் பிடித்து எம்மவர் வெளியிடும் புத்தகங்களை வாங்கக்கூடியதாய் இருக்கிறது).

இதே சினிமா நடிக, நடிகைகளை உயர்த்திவிட்டதும் இவர்கள்தான். சினிமாப் பேட்டி இல்லாமல் எந்தப் பத்திரிகையும் வந்ததில்லை. சீர்திருத்தவாதிகளின் பார்வையில் பச்சைப் பார்ப்பானும், எழுத்து விபாசாரியுமான சுஜாதா, அறிவியலுக்கு, உலக நடப்புக்கு, பொருளாதாரத்துக்கு இடம் கொடுங்கள் என்று கத்திக் கத்திப் பார்த்து ஓய்ந்து செத்தும் போய்விட்டார். இன்றைக்கு சினிமாவையும், கேடு கெட்ட அரசியலையும் நம்பியே பத்திரிகைகள் வருகின்றன என்பதே உண்மை. அறிவியலுக்கு ஒரு பக்கம் ஒதுக்க முடியாத பத்திரிகைகள் ‘தமிழனுக்கு அறிவியலில் நோபல் பரிசு' என்று பீற்றுகின்றன. (எனக்குத் தேசியம் இல்லை என்று சொல்லி மூஞ்சையில் சாணி அப்பிவிட்டார் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்). எப்படித்தான் இப்படி எல்லாம் எழுதுகிறார்கள் வெட்கம் இல்லாமல்?

இப்படியாக சண்டை போட்டுக் கொள்கிற இரு பக்கமும் நியாயமில்லை. இரு தரப்புமே ஒருவரை நம்பி மற்றவர் என்று இருப்பவர்கள். இன்றைக்குச் சண்டை போட்டுவிட்டு ‘இது வரை யாரும் சொல்லாத கதையை எடுக்கிறோம்' என்று ஒரு நடிகரின் பேட்டியை எடுத்து இவர்கள் வெளியிடுவார்கள். நாளைக்கே இரு தரப்பும் சேர்ந்து கலைஞருக்கு விழா எடுப்பார்கள். இதையே சாட்டாக வைத்து சரத்குமார் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தாலும் இணைவார். தொலைக்காட்சி என்று ஒரு ஊடகம் இருப்பதாகவே தெரியவில்லை இந்த விசயத்தில்... என்னவோ, இன்றைக்கொரு பூனைக்கண் புவனேஸ்வரி, நாளைக்கொரு நாய்வால் நாகம்மை என்று தமிழக அரசியல் சூடாகத்தான் நடக்கிறது..... உப்புச்சப்பிலாத விஷயங்களுக்காக.....

32 comments:

அப்பாவி தமிழன் said...

நிதர்சனமான உண்மை நண்பா ....இதே வருத்தம் தான் எனக்கும் ஏற்பட்டது ஈழ மக்கள் கொல்லப்படுவதை எதிர்த்து பல துயரங்களை அனுபவித்த சீமான் மற்றும் பாரதிராஜா போன்றோரை இந்த நாய்கள் எட்டியும் பார்க்கவில்லை ..இப்போ பத்திரிகைல செய்தி போட்ட உடனே போராட்டம் பண்றானுக ..அப்போ இதே பத்திரிகைகள் தான் சீமான் கைது பத்தி போட்டாங்க..அப்போ எங்கடா போச்சு உங்க நடிகர் சங்கம் .

///இதைவிட மோசமாக என்னைக் காயப்படுத்தியது, இவர்கள் செய்த பிண வியாபாரம்///// மறுக்க முடியாத உண்மை , அனைவரும் வேதனையின் உச்சியில் இருந்த நேரத்தில் நம் மக்களின் உணர்வுகளையே விற்றுக் காசாக்கிவர்கள் . இது மட்டுமா நடிகர் சங்கம் போராட்டம் செய்த போது நடிகர் அஜித் மற்றும் அர்ஜுன் ஐப் பற்றி வதந்தி கெளப்பி பணம் பார்த்தார்கள் .

தொடர்ந்து எழுதுங்கள் நண்பா

RAGUNATHAN said...

இந்த கருமத்துக்குதான் நான் வாரப் பத்திரிகைகளையே வாங்குவதில்லை.... :)
நல்ல பதிவு நண்பரே :)

அருண்மொழிவர்மன் said...

நன்றாக இருக்கிறது. அதிலும் கடைசிப் பந்தி அற்புதம்..

திரை உலகினருக்கும் பொறுப்பில்லாத்தனம் இருப்பது வழமைதான். திரை அரங்கினுள் தமது தலைவர்களை தேடிக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் அவர்கள் பொறுப்பில்லாமல் இருக்கின்றார்களே என்ற கவலை எழும். ஆனால் பத்திரிகையாளார்கல் எந்த பொறுப்புணர்வுமில்லாமல் செய்யும் கோமாளித்தனத்தைத்தான் பார்க்க பார்க்க கோபம் வருகின்றது..

இந்தக் கட்டுரை பற்றி கதைக்க நிறைய இருக்கின்றது...

பின்னொருமுறை கதைப்போமே

நரேஷ் said...

பதிவுடன் முழுக்க உடன்படுகிறேன்....

நாட்டுல எத்தனையோ பிரச்சனை ருக்கையில் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பது வெட்டி வேலை....

Unknown said...

உண்மைதான் அப்பாவி...
அதிலும் தலைவரின் மரணச் செய்தியால் மக்கள் அழுத நேரம் படம் ஒன்று போட்டதே நக்கீரன்.. அதுதான் ஊடக விபசாரம் என்பதற்கான வரைவிலக்கணம்

Unknown said...

ரகுநாதன்...
வெறுப்படித்தே வாங்கவிடாமல் செய்கிறார்கள். கொஞ்சக் காலத்தில் விற்பனை இல்லாமல் மஞ்சள் பத்திரிகைகளாக மாற்றிவிடுவார்கள் (விகடன், குமுதம் உட்பட)

Unknown said...

சுஜாதா பத்தியைத்தானே சொல்கிறீர்கள் அருண்மொழிவர்மன்...

நேரில் பேசுவோம்

Unknown said...

நன்றி நரேஷ்

venkat said...

\\சிறு பிள்ளையைப் பாலியல் ரீதியாகச் சித்தரித்த இந்தப் பெரிய மனிதர்களை விட, செய்தி போட்ட பத்திரிகைக்காரன் ஒன்றும் கெட்டவனில்லை\\

supper

Anonymous said...

please see this link also in this connection

http://tamilniruban.blogspot.com/

Anonymous said...

see this link also

http://tamilniruban.blogspot.com/

Anonymous said...

see thsi link also

http://tamilniruban.blogspot.com/

Anonymous said...

excellent well said, how can chief minister of Tamil nadu got time to spend his valuable time inthis matter.
may be he was also victim those days these matters

shiva kumar said...

உண்மை நண்பா இதே வருத்தம் தான் எனக்கும் சீமான் மற்றும் பாரதிராஜா போன்றோரை இந்த நாய்கள் எட்டியும் பார்க்கவில்லை அப்போ இதே பத்திரிகைகள் தான் சீமான் கைது பத்தி போட்டாங்க.
//15 வயதில் நடிக்க வந்துவிட்டாராம் ஸ்ரீப்ரியா. அப்போதே அவரின் அப்பா வயதுள்ள நடிகருக்கு ஜோடியாகப் போட்டு, அவரது மார்பை zoom பண்ணிப் படம் பிடித்து இவர்கள் போட்டுவைத்த விதைதான் இன்றைக்கு சர்வசாதாரணமாக அவரை விபசாரி என்று ஒருவன் கூறும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது என்பது ஸ்ரீப்ரியாவுக்குப் புரியவில்லையா அல்லது புரியாதமாதிரி நடிக்கிறார்களா?//
நல்ல பதிவு நண்பரே ,,
தொடர்ந்து எழுதுங்கள் நண்பா

Chittoor Murugesan said...

தூள் தலைவா !
நான் சொல்ல நினைச்சதை எல்லாம் அப்படியே வச்சிருக்கிங்க டாப்பு

வந்தியத்தேவன் said...

நடிகர், நடிகைகள் படங்களை வைத்து விபச்சாரம் மன்னிக்கவும் வியாபாரம் செய்யும் குமுதம், விகடன் இரண்டிலும் இந்த விடயத்தில் அடக்கியே வாசிக்கின்றார்கள். கேடுகெட்டவர்கள் இவர்கள் இருவரும்.

பொன் மாலை பொழுது said...

// ‘தமிழனுக்கு அறிவியலில் நோபல் பரிசு' என்று பீற்றுகின்றன. (எனக்குத் தேசியம் இல்லை என்று சொல்லி மூஞ்சையில் சாணி அப்பிவிட்டார் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்). எப்படித்தான் இப்படி எல்லாம் எழுதுகிறார்கள் வெட்கம் இல்லாமல்? //.

Hats off ! சவுக்கால் விளாசியதை போன்ற வார்த்தைகள். இவர்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறி நாறிய மட்டைகள்தான். அதனால்தான் அரசியல் செல்வாக்கும். நாம் ஏன் இவர்களை சினிமா மற்றும் கேவலமான பத்திரிக்கைகள் இவைகளை புறந்தள்ளக்கூடாது??

Unknown said...

தமிழ் நிருபன்... உங்கள் கடைக்கு வருகிறேன்

Unknown said...

நன்றி சிவக்குமார்... கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுக்கும் சேர்த்து

Unknown said...

நன்றி சித்தூர் எஸ். முருகேசன் அண்ணை

Unknown said...

வந்தியண்ணா... அது விபசாரம்தான். ஏன் வியாபாரம் என்றெல்லாம் சொல்கிறீர்கள்.

Unknown said...

நன்றி மாணிக்கம்..
சிலவேளைகளில் இவர்களுக்குப் பிறக்கும் போதே ரோச நரம்பில் ஏதாவது பிசகோ என்று நினைப்பதுண்டு.. எல்லாம் நாங்கள் குடுக்கிற இடம்

புரட்சிகர தமிழ்தேசியன் said...

நாம் சிறிது சிந்தித்து பார்க்க வேண்டும்..

தோழர் முத்துகுமார் எழுச்சியை அடக்க தமிழ் ஈன தலைவரவரால்
பயன்படுத்தபட்டது.. வக்கீல்கள் - போலீசு தகறாரு.. அதில் நடத்தபட்ட நாடகம்(மெரினா கடற்கரையில் அதியுன்னதம்)

அதே போல் முட்கம்பி வேலிகளுக்குள் இருக்கும் மக்களை மீட்க தமிழகதில் எழுத்துள்ள அலையை தடுக்க திரையுலக-பத்திரிகையாளர் மோதல் இன்று நடத்த படும் நாடகம்( இலங்கைகான விசிட்)

கூட்டி கழித்து பார்த்தல் நாம் தான் பேக்குகள்..ஆனால் அதையும் தாண்டி சிந்திக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது அப்போதுதான் முத்து வடுகரிடம் இருந்து விடுதலை அடைவோம்

Unknown said...

புரட்சிகர தமிழ்த்தேசியன்..
அவரையும் அவர்தம் பரிவாரங்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய மக்கள் காசுக்கு வழிபோகும்போது அவர்கள் ஆட்டம் தொடரும்தானே??

Anonymous said...

I was shocked at the initial part of this post. When I read the whole, I understood what you were trying to say. Considering the nature of this silly issue, I think you should avoid these kind of posts.

Unknown said...

Anonymous Friend..
Yeah.. it's a silly issue, but I just wanted to express my anger. And further, I like people showing their identity when making such good comments, like the one you made.

Mohan said...

Kiruthikan

We can narrate an incident many ways. For example "sexual abuse of a girl" can be narrated in such a way that whoever reads feels sorry for that girl. I was shocked by your words on Sripriya's first movie. Other than that don't give importance to any Media entertainers (especially Tamil Cinema people). They are for entertaining us, we should not feel angry, it is worthless. Have fun.

Mohan

Unknown said...

Mohan,
In a way yeah... my words were a bit explicit. But I differ from this view of yours
///They are for entertaining us, we should not feel angry, it is worthless. Have fun///
Remember, these fellows are coming straight to your living room these days. I don't see any reason to ignore them just with the label of 'Entertainers'.

Mohan said...

Kiruthikan

This is just my opinion, don't take it as advice. I respect your views and freedom. What I tried to say in my earlier comment was "Spend time in writing post like மனித உருவில் மிருகங்களாய் நாம். Spending time to write about ஸ்ரீப்ரியா etc are waste of time. When they come to our living room, We have remote in our hand either change channel or turn off or laugh at them to have fun.

Mohan

Unknown said...

///What I tried to say in my earlier comment was "Spend time in writing post like மனித உருவில் மிருகங்களாய் நாம். Spending time to write about ஸ்ரீப்ரியா etc are waste of time///

Yeah Mohan... You make sense. I'll certainly take this into consideration in the future. Thanks for being so nice.

///This is just my opinion, don't take it as advice. I respect your views and freedom. ///
Mate you are juz too good... Mail me. Wanna be personal friends wid you.

Anonymous said...

//குஷ்பு சொன்ன கருத்து சரி பிழை என்ற வாதத்துக்கு நான் வரவில்லை. அவர் சொன்ன விஷயம் இன்றைய மத்தியதர, உயர் மட்டக் குடும்பங்களில் நடக்கிறது என்பது உண்மைதான்.//

உங்களின் குடும்பதிலுமா?

உலகில் மனித முண்ணேறத்துகான விடையம் நிறைய இருக்கின்றது அதைபற்றி எழுதுங்கோ.

Gajendiran Perumal said...

உங்கள் கருத்தோடு நூறு சதவீதம் நான் உடன்படுகிறேன்! தமிழ் நாட்டின் கலாசார சீரழிவிற்கு காரணம் இந்த மானங்கெட்ட சினிமா கூத்தாடிகளும்,விபசாரிகளும்தான் காரணம். வெளியில் அவளுங்க பேசும்போது என்னமோ இவிங்க கண்ணகிக்கு தங்கச்சி மாதிரி சீன் போடுவளுங்க. ஒவ்வொரு ராத்திரியும் ஒருத்தன் கூட இருப்பாளுங்க. இவளுங்களுக்கு கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்யும் மானங்கெட்டவனுங்கள முதல்ல அடிக்கணும். இவளுங்களுக்கு சொறி நாய்க்கு கொடுக்கிற மரியாதையை கூட கொடுக்க கூடாது. பேசும்போது மட்டும் கற்புக்கரசி மாதிரியும் ராமன் மாதிரியும் பேசுனவனுங்க!! இதெல்லம் ஒரு பொழப்பு ..த்தூ!!