Sunday 31 October 2010

I am a Tamil Queer

CTBC வானொலி விளம்பரம், அதன் பின்பான சர்ச்சைகளை முன்வைத்து

"Toronto mayoral campaign ends on a hateful note" என்ற Globe and Mail தலையங்கம் சாலப்பொருந்தும், Canadian Tamil Broadcasting Corporation எனப்படும் CTBC வானொலியில் ஒலிபரப்பான 35 செக்கன்கள் நீடிக்கும் விளம்பரம் கிளப்பிய சர்ச்சைகளை ஒரு வசனத்தில் அடக்க. ரொரொன்ரோவின் நகரபிதாவைத் தெரிவு செய்வது தொடர்பில் நடந்த தேர்தல் சம்பந்தமான நிகழ்வுகளில் ஆகக்கூடிய கசப்புணர்வையும், இலங்கைத் தமிழர்கள்பால் கனேடிய மத்தியதர வகுப்பு பொது உரையாடற் தளங்களில் வெறுப்பை உமிழ்வதற்கு அடுத்த காரணத்தையும் இந்த விளம்பரம் ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் Globe and Mail செய்தியின் பின்னூட்டல்களில் அதிகம் வரவேற்பைப் பெற்றிருக்கிற பின்னூட்டம் பின்வருமாறு அமைந்திருக்கிறது:

This is another example of why the effects of Canada multiculturalism and immigration policies must be studied regarding how they affect gays/lesbians and women already living here. Frankly, I don't want a country ruled by superstitions imported from the third world.

மேற்படி பின்னூட்டத்தை 124 பேர் ஆதரித்திருக்கிறார்கள். 34,296,000 பேரை வெறும் 124 பேர் பிரதிநிதித்துவப் படுத்தமாட்டார்கள் என்று உதறித்தள்ளினால், “புள்ளிவிபரவியல்” என்கிற கோட்பாடு கிலுகிலுத்துப் போகும். இதுபற்றி எந்தவிதமான அக்கறையுமின்றி நாங்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

சர்ச்சையின் பின்னணி
2003 ம் வருடமே தற்போதைய நகரபிதா டேவிட் மில்லர் (நவம்பர் 30 வரை அவரே) மூன்றாம் முறையாக நகரபிதாத் தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவித்திருந்த நேரத்தில் இருந்தே 2010 டிசம்பர் 1ல் நகரபிதாவாகப் பதவியேற்கப் பலர் போட்டிபோட்டார்கள். ஜனவரி 4, 2010 தொடங்கி செப்டெம்பர் 10ம் திகதி வரைக்கும் வேட்பு மனுக்கள் இந்தப் பதவிக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டன. நகரபிதா பதவிக்கு மொத்தம் 40 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்கள். அதில் 13 பேர் தம்முடைய விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். அதில் முக்கியமானவர் ரொரொன்ரோ மாநகரப் போக்குவரத்துச் சபையின் அவைத்தலைவராக இருந்த அடம் ஜியாம்ப்ரோன் முக்கியமானவர். ஆரம்பக் கணிப்புகளில் இரண்டாம் நிலையில் இருந்த இவர், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டு தன்னுடைய வேட்பு மனுவை மீளப் பெற்றுக்கொண்டார். சேரா தொம்சன் மற்றும் ரோக்கோ ரொஸ்ஸி ஆகிய இருவரும் மீளளிப்பு நாட்களின் பின்னதாக தங்களின் பிரசாரத்தை இடைநிறுத்தி போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்கள். இறுதியில் உதிரி வேட்பாளர்கள் தவிர்க்கப்பட்டு இந்த நகரபிதா தேர்தல் களம் மும்முனைப் போட்டியாக மாறியது. 

தொடர்ந்து வாசிக்க...