Friday 30 October 2009

வாழ்த்துகிறோம்

அருண்மொழிவர்மன் என்று பதிவுல்கத்தில் அறியப்பட்ட, சுதன் என்று நண்பர்கள் வட்டத்தில் அழைக்கப்படும் சகோதரன் சுதர்ஷன் ஸ்ரீநிவாசன் அவர்கள், நிகழும் விரோதிவருடம் ஐப்பசித்திங்கள் 16ம் நாள் (02/11/2009) திங்கட்கிழமை சதுர்த்தசி திதியும், அச்சுவினி நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய 11:15 முதல் 12:45 (கனேடிய நேரப்படி 02/11/2009 01:45-03:15) வரையான மகரலக்கின சுபமுகூர்த்த வேளையில் அவர் உள்ளம் திருடிய சகோதரி மதனிகாவுடன் இல்லற பந்தத்தில், கொழும்பு மயூராபதி தேவஸ்தான கல்யாண மண்டபத்தில் இணைகிறார். இணைகின்ற காதல் கிளிகளை நேரில் வாழ்த்த முடியாதவர்கள் இங்கே வாழ்த்துங்கள் அல்லது சுதர்ஷனின் மின்னஞ்சலில் (sutharshan@hotmail.com) அல்லது facebook இல் நேரடியாக வாழ்த்துங்கள்.

நான் வாழ்ந்து காட்டிய தம்பதிகளைச் சுட்டி அவர்களைப் போல் வாழ்க என்றெல்லாம் வாழ்த்தப்போவதில்லை. ஒரு காலத்தில் ‘சுதர்ஷன்-மதனிகா போல் வாழ்க' என்று இன்னொரு தம்பதியை நாங்கள் வாழ்த்தும் வண்ணம் வாழ்ந்து காட்ட வாழ்த்துகிறேன்.


என்றென்றும் அன்புடன் (அவரது பாணிதான்...)
கிருத்திகன்

5 comments:

கானா பிரபா said...

நண்பனின் அடுத்த கட்ட வாழ்வு சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகின்றேன்.


அண்ணோய் கீத்

உந்த றேடியோ பெட்டியை ஏதாவது வழியில் நிப்பாட்டினால் நல்லம் உங்கட பதிவு வாசிக்கேக்க வாசிப்பின்ர ஓட்டத்தைத் தடுக்குதணை

பழமைபேசி said...

நண்பருக்கு வாழ்த்துகள்!

Unknown said...

வாழ்த்துக்களை சேர்ப்பிக்கிறேன் கானா பிரபா அப்புச்சி (என்னை அண்ணோய் ஆக்கினியள் எல்லோ.. அதுக்குதான்) மற்றும் பழமை பேசி..

அப்புச்சி...
றேடியோப் பெட்டி விரும்பினால் மட்டும்தான் கேட்கும் என்று நினைத்திருந்தேன்... இப்போது நீக்கிவிட்டேன்.

Anonymous said...

wish him all the best

கிடுகுவேலி said...

நண்பனுக்கு இங்கேயும் வாழ்த்துவதில் பெருமையடைகிறேன். இல்லறம் என்ற இன்ப பந்தத்துள் இனிதாய் வாழட்டும்.