1.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற கலாசாரச் சீரழிவுகளைத் தட்டிக் கேட்கப் புறப்பட்டிருக்கும் மாணவர் படையின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள், வெடியரசன் என்னும் அவர்களது இணையத்தளத்தில். உங்கள் சமூகத்தில் நடக்கும் கலாசாரச் சீரழிவுகளைத் தட்டிக் கேளுங்கள், இல்லையென்றால் எங்களிடம் சொல்லுங்கள் என்ற கோஷமும் இருக்கிறது. (இவர்களைவிடப் பலம்வாய்ந்த அமைப்பு ஒன்று எனது பாடசாலைக் காலத்தில் போட்ட கோஷமிது). இந்த அமைப்பினரின் முதல் நடவடிக்கையாக முறைகேடாக நடந்துகொள்ளும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு எதிரான கண்டனங்கள் அமைந்திருக்கின்றன. அப்படியாக முதலாவதாக முகமூடி கிழிக்கப்படுபவர் கொக்குவில் இந்துக் கல்லூரி உப அதிபர் திரு.மு.வேலாயுதபிள்ளை என்பவர். அவர் பற்றிய அறிக்கை ஒன்றை மாணவர் படை வெளியிட்டிருக்கிறது.
வேலாயுதபிள்ளை மீதான குற்றச்சாட்டுகள் எவ்வளவு உண்மையானவை என்பது உறுதிப்படுத்தப்பட முடியவில்லை. அதேவேளை ‘அங்க இப்பிடியாம், அவர் அப்பிடியாம்' என்கிற கதையோடு மட்டும் நின்றுவிடாமல் ‘இன்னார் இன்ன தவறு செய்கிறார்' என்று நேரடியாக வெளிக்கொணர்வது நல்ல முயற்சியே. ஆனாலும், அதே நபரை உடல் ரீதியாகத் துன்பம் செய்யாமல் வேறு வழிகளில் திருத்த முயல்வது நலம் என்பது என்னுடைய அபிப்பிராயம். இந்த எச்சரிக்கைக் கடிதம் அந்த நம்பிக்கையைத் தரவில்லை என்பதையும் இங்கு குறித்துச் சொல்லியாகவேண்டும் (சிறு தண்டனைக்குள்ளாகிறார்?????).
இப்படியான போராட்டங்களில் மாணவர்கள் இறங்குவது வரவேற்கத்தக்கதே. இவர்களின் கலாசாரம் மீதான அக்கறை நவம்பர் 16 2005 தினேஷ் என்ற இளைஞனுக்கு நடந்த கொடூரம் போன்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு வழிகோலக்கூடாது. ‘பெண்களைத் தெய்வங்களாக மதிக்கும் யாழ்ப்பாணக் கலாசாரம்' என்கிற போலிப் போர்வையிலிருந்து இவர்கள் வெளிவந்து, பெண்களுக்கான சம உரிமை தொடர்பான போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும். பெண்களை பாலியல் குறியீடுகளுடன் கிண்டலடிக்கும் நண்பனைத் தட்டிக் கேட்க வேண்டும். சாதீயத்துக்கு எதிரான முழுமூச்சிலான முன்னெடுப்புகள் வேண்டும். இந்தக் குழுமங்களில் பெண்களுக்கும் முடிவெடுக்கும் உரிமை வழங்கப்பட்டு அவர்களும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். தனிப்பட்ட பகைமைகளைத் தீர்க்கும் வழியாக இந்த மாணவர்படை பயன்படுத்தப்படக் கூடாது. தண்டனை என்பது ‘உடல்ரீதியான தாக்குதல்' என்ற வடிவத்தை ஒருபோதும் எடுக்கக்கூடாது. இவர்களுக்கான மக்கள் ஆதரவு என்பது இனிமேல் இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே இருக்கும். பல்கலைக் கழகத்தைச் சுற்றியிருக்கும் ‘பியர்' கடைகளை மூட முடியாமல் கள்ளச் சாராய ஒழிப்பைக் கைவிட்ட எம்.பி. போல் இவர்களும் ஆகாமலிருக்க வேண்டும் என்பது இவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள்.
2.
சென்ற வார இறுதியில் விஜய் ரி.வி.யில் அனுஹாசனோடு ஆண்ட்ரியா மற்றும் ஜி.வி. பிரகாஷ்குமார் கோப்பி குடித்தார்கள். மாலை நேரம் வந்தால் பாடலில் ‘காதல் இங்கே ஓய்ந்தது?' என்கிற வரியை ‘காடல் என்கே வாய்ந்தது' என்பது மாதிரி பிழை பிழையாகப் பாடி ஒரு நாள் முழுக்க ஒலிப்பதிவு செய்தோம் என்று பெருமையாகச் சொன்னார் ஆண்ட்ரியா, அதற்கு ஒத்து ஊதினார் ஜி.வி. கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் இருவரிடமும் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஓரளவுக்காவது செயற்கைத்தனம் இல்லாமல் பேசியது Season-1 ல் வந்த மணிவண்ணனும், இரண்டொருமுறை வந்த ஜெயராமும் மட்டுமே. மற்றபடி மேல்தட்டு மக்களுக்கான நுனி நாக்கு ஆங்கில நிகழ்ச்சியாகவே இது தெரிகிறது. ஜி.வி., ஆண்ட்ரியா பங்குகொண்ட நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்தது 'ஆயிரத்தில் ஒருவன்' இருவருக்கும் தொடர்புடைய படம் என்பதால். அங்கேதான் ஜி.வி. ஒரு பெரிய குண்டைத் தூக்கிப்போட்டார்.
‘உன்மேல ஆசதான்' பாடல் ஏலவே யுவன் சங்கர் ராஜா போட்டுக் கொடுத்த மெட்டு என்பது கிட்டத்தட்ட குழந்தைக்கும் தெரியும். செல்வராகவனோடு சண்டை போட்ட பின் யுவன் சங்கர் ராஜா அந்த மெட்டை சர்வம் படத்தில் ‘அடடா வா அசத்தலாம்' என்று பாவித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஜி.வி. சொல்கிறார் ‘உன்மேல ஆசதான்' பாடலுக்கான காட்சிகளை ஏலவே செல்வராகவன் படமாக்கியிருந்தாராம். அந்தக் காட்சிகளுக்கு தான் மூன்று மணிநேரத்தில் இசையமைத்தாராம். யுவன் சங்கர் ராஜா சுட்டுத்தான் பாட்டுப் போடுகிறார், ஜி.வி. சுட்டால் என்ன?, அல்லது இருவரும் ஒரே loops பயன்படுத்தியிருக்கலாம் போன்ற சப்பைக் கட்டுகள் இங்கே எடுபடாது. ஒரே Loops பயன்பட்டிருந்தால் ஒலிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்திருக்கும், மெட்டுமா? ‘ஏற்கனவே யுவன் போட்ட மெட்டுக்கு செல்வா காட்சிகளை எடுத்து வைத்திருந்தார். பின்னர் அதே மெட்டை வைத்து முழுமையாக வேறொரு பாடலை உருவாக்கினேன்' என்று சொல்லக்கூடிய குறைந்தபட்ச நேர்மைகூட தமிழ் சினிமாக் கலைஞர்களிடம் இல்லை.
3.
சமீபத்தில் அரைவாசி வாசித்து முடித்த ஒரு புத்தகம் ஜே.ஜே. சில குறிப்புகள். பலரால் கொண்டாடப்படும் இந்தப் புத்தகம் சராசரி வாசகனான எனக்கு புரிவது மிகவும் கடினமாக இருக்கிறது. இதை மூடிவைத்துவிட்டு கொற்றவையைத் திறந்தாலும்கூட, பயங்கரமான வாசிப்பனுபவமும் இலக்கிய ரசனையும் உள்ளவர்களால் மட்டுமே இலகுவாக கிரகிக்ககூடிய ஒரு படைப்பாகவே இருக்கிறது (ஜே.ஜே. வை விட இலகுவான நடை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்). அதாவது முற்போக்கு, பிற்போக்கு இலக்கியங்கள் குறித்த குழுமத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே கிரகிக்ககூடியதாக இருப்பதுதான் கொடுமை. அதைப் பிழையென்று சொல்லமுடியாது. எல்லோருக்கும் விளங்கத்தக்கதாக படைப்புகள் வந்தாகவேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. சிலவேளை இன்னுமொரு நான்கு ஐந்து வருடங்களின் பின் இந்தப் புத்தகங்கள் மீதான என்னுடைய கண்ணோட்டம் வேறாக இருக்கலாம். அதற்காக என்னால் புரிந்து கொள்ளமுடியாத புத்தகம் ஒன்றை சிலாகிக்க நான் தயாராயில்லை. பேசாமல் குருநாதரின் புத்தகங்களை வாசித்துச் சிரித்துவிட்டுப் போகலாம்.
இப்போதைக்குத் தரமான இலக்கியவாதிகளாக கணிக்கப்படுபவர்களுக்கு இரு குணவியல்புகள் இருக்கின்றன. ஒன்று, பெரும்பாலானவர்களுக்குப் புரிபடாமல் எழுதுவது. மற்றது தன்னைத் தவிர எழுதுபவன் எல்லோரையும் மட்டமான மொழியில் திட்டுவது.
நன்றி: நண்பன் செல்லம்மா. வெடியரசன் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொண்ட காரணத்துக்காக.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற கலாசாரச் சீரழிவுகளைத் தட்டிக் கேட்கப் புறப்பட்டிருக்கும் மாணவர் படையின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள், வெடியரசன் என்னும் அவர்களது இணையத்தளத்தில். உங்கள் சமூகத்தில் நடக்கும் கலாசாரச் சீரழிவுகளைத் தட்டிக் கேளுங்கள், இல்லையென்றால் எங்களிடம் சொல்லுங்கள் என்ற கோஷமும் இருக்கிறது. (இவர்களைவிடப் பலம்வாய்ந்த அமைப்பு ஒன்று எனது பாடசாலைக் காலத்தில் போட்ட கோஷமிது). இந்த அமைப்பினரின் முதல் நடவடிக்கையாக முறைகேடாக நடந்துகொள்ளும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு எதிரான கண்டனங்கள் அமைந்திருக்கின்றன. அப்படியாக முதலாவதாக முகமூடி கிழிக்கப்படுபவர் கொக்குவில் இந்துக் கல்லூரி உப அதிபர் திரு.மு.வேலாயுதபிள்ளை என்பவர். அவர் பற்றிய அறிக்கை ஒன்றை மாணவர் படை வெளியிட்டிருக்கிறது.
வேலாயுதபிள்ளை மீதான குற்றச்சாட்டுகள் எவ்வளவு உண்மையானவை என்பது உறுதிப்படுத்தப்பட முடியவில்லை. அதேவேளை ‘அங்க இப்பிடியாம், அவர் அப்பிடியாம்' என்கிற கதையோடு மட்டும் நின்றுவிடாமல் ‘இன்னார் இன்ன தவறு செய்கிறார்' என்று நேரடியாக வெளிக்கொணர்வது நல்ல முயற்சியே. ஆனாலும், அதே நபரை உடல் ரீதியாகத் துன்பம் செய்யாமல் வேறு வழிகளில் திருத்த முயல்வது நலம் என்பது என்னுடைய அபிப்பிராயம். இந்த எச்சரிக்கைக் கடிதம் அந்த நம்பிக்கையைத் தரவில்லை என்பதையும் இங்கு குறித்துச் சொல்லியாகவேண்டும் (சிறு தண்டனைக்குள்ளாகிறார்?????).இப்படியான போராட்டங்களில் மாணவர்கள் இறங்குவது வரவேற்கத்தக்கதே. இவர்களின் கலாசாரம் மீதான அக்கறை நவம்பர் 16 2005 தினேஷ் என்ற இளைஞனுக்கு நடந்த கொடூரம் போன்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு வழிகோலக்கூடாது. ‘பெண்களைத் தெய்வங்களாக மதிக்கும் யாழ்ப்பாணக் கலாசாரம்' என்கிற போலிப் போர்வையிலிருந்து இவர்கள் வெளிவந்து, பெண்களுக்கான சம உரிமை தொடர்பான போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும். பெண்களை பாலியல் குறியீடுகளுடன் கிண்டலடிக்கும் நண்பனைத் தட்டிக் கேட்க வேண்டும். சாதீயத்துக்கு எதிரான முழுமூச்சிலான முன்னெடுப்புகள் வேண்டும். இந்தக் குழுமங்களில் பெண்களுக்கும் முடிவெடுக்கும் உரிமை வழங்கப்பட்டு அவர்களும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். தனிப்பட்ட பகைமைகளைத் தீர்க்கும் வழியாக இந்த மாணவர்படை பயன்படுத்தப்படக் கூடாது. தண்டனை என்பது ‘உடல்ரீதியான தாக்குதல்' என்ற வடிவத்தை ஒருபோதும் எடுக்கக்கூடாது. இவர்களுக்கான மக்கள் ஆதரவு என்பது இனிமேல் இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே இருக்கும். பல்கலைக் கழகத்தைச் சுற்றியிருக்கும் ‘பியர்' கடைகளை மூட முடியாமல் கள்ளச் சாராய ஒழிப்பைக் கைவிட்ட எம்.பி. போல் இவர்களும் ஆகாமலிருக்க வேண்டும் என்பது இவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள்.
2.
சென்ற வார இறுதியில் விஜய் ரி.வி.யில் அனுஹாசனோடு ஆண்ட்ரியா மற்றும் ஜி.வி. பிரகாஷ்குமார் கோப்பி குடித்தார்கள். மாலை நேரம் வந்தால் பாடலில் ‘காதல் இங்கே ஓய்ந்தது?' என்கிற வரியை ‘காடல் என்கே வாய்ந்தது' என்பது மாதிரி பிழை பிழையாகப் பாடி ஒரு நாள் முழுக்க ஒலிப்பதிவு செய்தோம் என்று பெருமையாகச் சொன்னார் ஆண்ட்ரியா, அதற்கு ஒத்து ஊதினார் ஜி.வி. கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் இருவரிடமும் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஓரளவுக்காவது செயற்கைத்தனம் இல்லாமல் பேசியது Season-1 ல் வந்த மணிவண்ணனும், இரண்டொருமுறை வந்த ஜெயராமும் மட்டுமே. மற்றபடி மேல்தட்டு மக்களுக்கான நுனி நாக்கு ஆங்கில நிகழ்ச்சியாகவே இது தெரிகிறது. ஜி.வி., ஆண்ட்ரியா பங்குகொண்ட நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்தது 'ஆயிரத்தில் ஒருவன்' இருவருக்கும் தொடர்புடைய படம் என்பதால். அங்கேதான் ஜி.வி. ஒரு பெரிய குண்டைத் தூக்கிப்போட்டார்.
‘உன்மேல ஆசதான்' பாடல் ஏலவே யுவன் சங்கர் ராஜா போட்டுக் கொடுத்த மெட்டு என்பது கிட்டத்தட்ட குழந்தைக்கும் தெரியும். செல்வராகவனோடு சண்டை போட்ட பின் யுவன் சங்கர் ராஜா அந்த மெட்டை சர்வம் படத்தில் ‘அடடா வா அசத்தலாம்' என்று பாவித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஜி.வி. சொல்கிறார் ‘உன்மேல ஆசதான்' பாடலுக்கான காட்சிகளை ஏலவே செல்வராகவன் படமாக்கியிருந்தாராம். அந்தக் காட்சிகளுக்கு தான் மூன்று மணிநேரத்தில் இசையமைத்தாராம். யுவன் சங்கர் ராஜா சுட்டுத்தான் பாட்டுப் போடுகிறார், ஜி.வி. சுட்டால் என்ன?, அல்லது இருவரும் ஒரே loops பயன்படுத்தியிருக்கலாம் போன்ற சப்பைக் கட்டுகள் இங்கே எடுபடாது. ஒரே Loops பயன்பட்டிருந்தால் ஒலிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்திருக்கும், மெட்டுமா? ‘ஏற்கனவே யுவன் போட்ட மெட்டுக்கு செல்வா காட்சிகளை எடுத்து வைத்திருந்தார். பின்னர் அதே மெட்டை வைத்து முழுமையாக வேறொரு பாடலை உருவாக்கினேன்' என்று சொல்லக்கூடிய குறைந்தபட்ச நேர்மைகூட தமிழ் சினிமாக் கலைஞர்களிடம் இல்லை.3.
சமீபத்தில் அரைவாசி வாசித்து முடித்த ஒரு புத்தகம் ஜே.ஜே. சில குறிப்புகள். பலரால் கொண்டாடப்படும் இந்தப் புத்தகம் சராசரி வாசகனான எனக்கு புரிவது மிகவும் கடினமாக இருக்கிறது. இதை மூடிவைத்துவிட்டு கொற்றவையைத் திறந்தாலும்கூட, பயங்கரமான வாசிப்பனுபவமும் இலக்கிய ரசனையும் உள்ளவர்களால் மட்டுமே இலகுவாக கிரகிக்ககூடிய ஒரு படைப்பாகவே இருக்கிறது (ஜே.ஜே. வை விட இலகுவான நடை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்). அதாவது முற்போக்கு, பிற்போக்கு இலக்கியங்கள் குறித்த குழுமத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே கிரகிக்ககூடியதாக இருப்பதுதான் கொடுமை. அதைப் பிழையென்று சொல்லமுடியாது. எல்லோருக்கும் விளங்கத்தக்கதாக படைப்புகள் வந்தாகவேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. சிலவேளை இன்னுமொரு நான்கு ஐந்து வருடங்களின் பின் இந்தப் புத்தகங்கள் மீதான என்னுடைய கண்ணோட்டம் வேறாக இருக்கலாம். அதற்காக என்னால் புரிந்து கொள்ளமுடியாத புத்தகம் ஒன்றை சிலாகிக்க நான் தயாராயில்லை. பேசாமல் குருநாதரின் புத்தகங்களை வாசித்துச் சிரித்துவிட்டுப் போகலாம்.
இப்போதைக்குத் தரமான இலக்கியவாதிகளாக கணிக்கப்படுபவர்களுக்கு இரு குணவியல்புகள் இருக்கின்றன. ஒன்று, பெரும்பாலானவர்களுக்குப் புரிபடாமல் எழுதுவது. மற்றது தன்னைத் தவிர எழுதுபவன் எல்லோரையும் மட்டமான மொழியில் திட்டுவது.
நன்றி: நண்பன் செல்லம்மா. வெடியரசன் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொண்ட காரணத்துக்காக.