tag:blogger.com,1999:blog-18503429515244390442024-03-13T07:12:50.093-04:00இன்னாத கூறல்Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger156125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-17325204451725648162014-01-12T12:34:00.001-05:002014-01-13T21:11:29.390-05:00அடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்1.<br />
<div style="text-align: justify;">
நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ? அப்படித்தான்
எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல்
சாத்தியமற்றதெனக்கு. நான் என்கதை பேசும் ஒரு பெண்; கவனியுங்கள். இத்தால்
நான் பெறும் எனக்கான சலுகைகளை மிகச்சிறியளவிலேயே ”பயன்படுத்துகிறேன்”
என்பதையும் கவனியுங்கள். நான் என்கதை பேசும் ஒரு பெண்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான்
ஈர்த்துக்கொண்ட இளைஞர்களில் நான் ஈர்ப்புகொண்ட இளைஞன் அவன். என் எண்ணங்கள்
யாவும் அவன்மீதேயிருந்தன. இவ்வீர்ப்புத்துய்த்த உச்சவின்பத்தை நான்
உணர்ந்திடவில்லை. நான் அவனல்லாத மற்றோருடன் சரசமொழி பேசியிருந்தேன். நான்
அவனை இரசித்தபடியிருக்கவே விரும்பினேன், மகிழ்விக்க அல்ல. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தூரத்தேயிருந்து
இரசித்திருக்கிற மனத்தூய்மையிலேயே முதற்காதல்கள் மலர்வதாய் எனக்குத்
தோன்றுகிறது. முதற்காதலின் சொல்லொணா இனிமை மகிழ்விப்பதற்கான உந்துதலை
முளையிலேயே கருக்கிவிடுகிறது. அவனும் என்னையே இரசித்திருந்தான்,
மற்றாடவர்களுக்கு முரணாக, தளைப்பட்ட உள்ளொளியோடு. எனக்கும்
அவனுக்குமிடையில் தீவிரமான ஏதோவொன்று ஊடாடிக்கொண்டிருந்தது. சிலநேரங்களில்
என் வனப்புகளை வரவேற்கும் மற்றவர்களிலிருந்து அவன் வேறுபட்டுத்தெரியவில்லை.
இருந்தும், ஒரு தீராச்சஞ்சலமாக அவனைப் பற்றியதான எண்ணங்களை என்னால்
சொல்லில் வடிக்கமுடியாமலிருந்தது. என்னைப் பற்றியவையையும் அவ்வாறே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாங்கள்
தேவாலயத்திலிருந்து வெளிவந்தோம். நான் என்னுடைய வேகத்தைக் குறைத்து
மிகவும் மெதுவாக நடந்துகொண்டிருந்ததாக ஞாபகம். நான் விட்டுச்செல்லும்
அவ்விடத்தையெண்ணி என் மனம் துயர்கொண்டிருந்தது. இன்னவென்று அறுதியிட்டுச்
சொல்லமுடியாத ஏதோவொன்றை இழந்ததாக என் இதயம் அழுதது. அது எதை இழந்ததென்று
இதயத்துக்குத் தெரிந்துமிருக்கலாம். ஏனென்றால், அவ்விடம்விட்டுவிலகும்போது
நான் விட்டு விலகிச் செல்கிற அவனைப் பார்க்கவென நான் அடிக்கடி
திரும்பியபடியிருந்தேன். அவனும் என் போலவே என்பதை நான் அறிந்திருக்கவில்லை.
நான், என்கதை பேசும் ஒரு பெண்.</div>
<div style="text-align: justify;">
(La vie de Marianne- Life of Marianne, Pierre de Marivaux)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2.</div>
<div style="text-align: justify;">
அடேலை
அவள் வயது வாட்டியபடியிருக்கிறது. தோழிகள் எப்போதும் ஆண்களைப் பற்றிப்
பேசுகிறார்கள். அவள்பால் ஈர்க்கப்பட்ட அவனோடு சேரச்சொல்லி
தூண்டப்படுகிறாள். இருவரின் இசைரசனை பற்றிய ஒரு உரையாடலின் இறுதியில் “நான்
இரசிப்பவையை நீ கேட்க நீயும் நானும் இணைந்திருக்க வேண்டும்” என்கிறான்
அவன். அந்த இணைப்பில் ஏதோ ஒன்று இல்லாதிருப்பதாக உணர்கிற அடேல், அவனை
நீங்குகிறாள். அவனுடன் முதன் முதலில் வெளியே சென்ற, “எப்படி, நேற்றைக்கு
அவனோடு களித்திருந்தாயா?” என்று தோழிகள் கிண்டல் செய்த அந்த நாளில் அவள்
பார்த்த நீல நிறத்தில் தலைக்கு வர்ணம் பூசியிருந்த அந்தப் பெண் தன்னைப்
பாதித்திருப்பதை உணர்ந்துகொள்வதில் அடேலுக்குப் பெருஞ்சிக்கலேதுமில்லை.
அவன் போன பின்னான நாளொன்றில் ஒரு சிறுகணத் தடுமாற்றத்தில் இவள் ஒருத்தியை
முத்தமிட, அடுத்த நாள் அவளோ “அக்கணம் நடந்ததை நீ பெரிதாக
எடுத்துக்கொள்ளாதே. அது அப்போதே முடிந்தது” என்று இவளைப் புறக்கணித்துப்
போகையில் வழிகிற கண்ணீரின் வழி அடேல் தன் தேவையுணர்கிறாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடேல்
எம்மா என்ற அந்த நீலச்சிகைப் பெண்ணை தன் தோழனோடு போன Gay Bar தந்த
அசூயையிலிருந்து மீளமுயன்று தவறிப்போய் நுழைந்த ஒரு Lesbian Bar உள்ளே
மீண்டும் சந்திக்கிறாள். உரையாடிக்கொள்கிறார்கள். </div>
<div style="text-align: justify;">
“நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய், எம்மா?”</div>
<div style="text-align: justify;">
“நீயே சொல்”</div>
<div style="text-align: justify;">
“நீ ஒரு சிகையலங்காரம் செய்பவளா?”</div>
<div style="text-align: justify;">
என்பதாக
நீள்கிற அந்த உரையாடல் அவர்களிடையே ஏதோவொன்றை விதைத்துச் செல்கிறது.
நான்காம் வருட நுண்கலை மாணவியான எம்மா இன்னொரு பொழுதில் அடேலின்
பாடசாலைக்கு வந்து அடேலை “அருகாமையிலிருந்தேன். ஆதலால் உன்னுடன் சேர்ந்து
மதுவருந்தலாமென நினைத்தேன்” என்கிறாள். தன் சகாக்களைப் புறக்கணித்து அன்றைய
மாலையை எம்மாவுடன் கழிக்கிறாள் அடேல். அடுத்தநாள் தன் சகாக்களால்
பழிக்கப்பட்டாலும் எம்மா மீது தீராக்காதல் கொள்கிறாள் அடேல். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எம்மாவினதும்
அடேலினதும் கொண்டாட்டமும், குழப்பமுமான காதல் வாழ்க்கை
சுற்றியிருக்கிறவர்களினால் சோதனைக்குள்ளாகிறது. எம்மாவின் குடும்பம்
இருவரையும் அவர்களின் தனிப்பட்ட அடையாளங்களுடன் ஏற்றுக்கொள்கிறது. அவள்
வாழ்க்கையின் பெரும்பேறாகக் கருதும் எம்மாவை “என்னுடைய நண்பி” என்றே
அடேலால் அவளது குடும்பத்துக்குள் அழைத்துவரமுடிகிறது. எம்மா இன்னொரு பெண்
நண்பியுடன் காண்பிக்கும் நெருக்கம் (அடேலின் பார்வையில்) தன்னுடைய சக ஆசான்
ஒருவனுடன் அடேலை இணையத்தூண்டுகிறது. அந்த இன்னொரு பெண் நண்பியுடன்
சாதாரணமான நட்பிலிருக்கும் எம்மா அடேல் தன்னை ஏமாற்றுவதைக்
கண்டுகொள்கிறாள். அந்த சகாவின் வாகனத்திலிருந்து இறங்கிவரும் அடேல் எம்மா
வாசலில் இறுகிய முகத்தோடிருப்பதைக் காண்கிறாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>என்னுடைய நண்பர்களோடு குடிக்கப்போயிருந்தேன் எம்மா. ஏன் வேலை முடிந்ததும் என்னை நீ அழைக்கவில்லை? <b>உன்னை யாராவாது கொண்டுவந்து இறக்கிவிட்டுப்போகிறார்களா அடேல்?</b> ம். <b>யாரது?</b> என்னுடன் வேலைபார்க்கும் ஒரு பெண். <b>ஒரு பெண், ஆ?</b> ஆம். <b>எதற்காகப் பொய்யான முகவரியில் இறக்கிவிட்டாள்?</b> நான் ஒரு பெண்ணுடன் வாழ்வதை அவள் தெரிந்துகொள்ள வேண்டாமென்பதாக நான் நினைக்கிறேன். <b>உண்மையாகவா?</b> நான் ஏன் உன்னுடன் இரகசியம் பேசிக்கொண்டிருக்கிறேன்? </i>(மெல்லிய புன்னகை)<i> <b>ஆக, ஒரு லெஸ்பியனாயிருப்பது உனக்கு வெட்கம் தருவதாயிருக்கிறது?</b> அப்படியில்லை, ஆனால் என் சகாக்களுக்கு அதைச் சொல்லவேண்டியதில்லைத்தானே? பிறகு அவர்கள் புறங்கூற ஆரம்பிப்பார்கள் அல்லவா? <b>ஆ</b>. நான் இதுகுறித்து வெட்கமடைவதாக நீ நினைக்கிறாயா?<b> யாரவன்?</b> யார்? <b>உன்னை இறக்கிவிட்டுப் போனவன்?</b> ஒரு சகா. <b>என்னை முட்டாளென்கிறாயா? நான் அதைப் பார்க்கவில்லையென்கிறாயா?</b> சொன்னேனே எம்மா, அவன் ஒரு சகா. <b>நான் அவனைப் பார்த்தேன்</b>. ஆம், நாங்கள் ஒன்றாகப் பணிசெய்கிறோம். விரும்பினால் வந்து பார். அவன் இன்னொரு வகுப்பின் ஆசான். <b>எப்போதிருந்து அவனைத் தெரியும் உனக்கு?</b> ஏன், அங்கே பணிபுரிகிற காலத்திலிருந்தே தெரியும். ஏன்? <b>உண்மையாகவா? ஏனடி பொய் சொல்கிறாய்?</b> இல்லையே. <b>பின்னர் ஏனடி அழுகிறாய்?</b> நான் அழவில்லையே?<b> </b></i><b><i>பிறகேனிந்தக் கண்ணீர்? </i></b><i>நான் களைத்திருக்கிறேன். </i><b><i>நான் முட்டாளில்லை அடேல். எப்போதிருந்து நீ அவனோடு படுத்துவருகிறாய்? </i></b><i>இல்லை எம்மா. நான் அவனோடு படுத்ததில்லை. </i><b><i>எப்போதிருந்தடி நீ பொய் சொல்லத்தொடங்கினாய்? </i></b><i>எம்மா, நான் அவனோடு படுத்ததில்லை.</i><b><i> “......”</i></b><i> குடிபோதையில் ஒருமுறை முத்தமிட்டோம் எம்மா. அவ்வளவுதான். </i><b><i>பிறகேன் அழுகிறாய்? </i></b><i>நான் வருத்தப்படுகிறேன். </i><b><i>புழுகாதே புழுவே. </i></b><i>நான் சத்தியம்செய்கிறேன். </i><b><i>எப்போதிருந்தடி அவனோடு படுக்கிறாய்? </i></b><i>இல்லை எம்மா.....</i><b><i>சொல்லடி...
எத்தனை தரமடி அவனோடு புணர்ந்திருக்கிறாய்? சொல்லடி..... எப்போதிருந்து
என்னிடமே பொய் சொல்ல ஆரம்பித்தாய்? எப்போதிருந்தடி என்னை ஒரு முட்டாளென
நினைத்தாய்? </i></b><i>நான் அப்படி நினைத்ததேயில்லை எம்மா. </i><b><i>வெளியே போடி... ஒரு புழுகி என்னோடிருக்க வேண்டியதில்லை. உன்னுடைய பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு இப்போதே வெளியே போடி. </i></b><i>“....”</i><b><i> தொலைந்து போ. </i></b><i>இரண்டு மூன்று முறை அவனோடு புணர்ந்திருக்கிறேன் எம்மா. எனக்குச் சரியாக ஞாபகமில்லை. </i><b><i>இரண்டு மூன்று தடவையா??? </i></b><i>நான்
உனக்குச் சொல்லவில்லை எம்மா. என்னால் அதை உனக்கு விளங்கப்படுத்த
முடியாதென்பது எனக்குத் தெரியும். நான் செய்வது முட்டாள்தனம் என்பதும்
எனக்குத் தெரியும். நான் தனிமைப்பட்டிருந்தேன் எம்மா. </i><b><i>அவனோடு காதல்வயப்பட்டிருக்கிறாயா? </i></b><i>இல்லவே
இல்லை எம்மா. நான் தனிமைப்பட்டிருந்ததாய் உணர்ந்தேன். நான் உன்னைக்
காயப்படுத்த என்றைக்குமே எண்ணியதில்லை...... என்னை மன்னித்துவிடு... அவன்
வெறும் சகா மட்டுமே. அவனோடு படுத்தது ஒரு முட்டாள்தனமான தவறு. </i><b><i>“....” </i></b><i>நான் சத்தியம் செய்கிறேன் எம்மா. நான் உன்னைக் காயப்படுத்த என்றுமே முனையவில்லை. நான் சத்தியம் செய்கிறேன். </i><b><i>அடேல்.... அடேல் நிறுத்து. பொறு..... நீ என்னைக் காயப்படுத்திவிட்டாயடி. இது இவ்வளவுதான். </i></b><i>“இல்லவே இல்லை... நான் சத்தியம் செய்கிறேன். நான் வேண்டுமென்றே அதைச் செய்யவில்லை. அதற்கெனக்குக் காரணமுமில்லை. </i><b><i>நீ
ஒரு வேசையடி... ஆம், நீ ஒரு வேசை. நீ புணரப்பட விரும்புபவள். இல்லையா?
அவனுடைய வாகனத்துக்குள் அவனை ஊம்பிய வாயால் என்னை முத்தமிட்டிருக்கிறாய்
இல்லையா?. என்ன துணிவடி உனக்கு. எப்படியடி நீ என்னை முத்தமிடலாம்? எப்படித்
தொடலாம்? எப்படியடி நீ என்னை நேருக்கு நேர் பார்க்கலாம்? நீ பொய்
சொல்பவள். நீ அசிங்கம். </i></b><i>என்னை மன்னித்துவிடு. </i><b><i>நீ ஒரு வேசையடி. </i></b><i>எனக்கு எப்படி மன்னிப்புக் கேட்பதென்றே தெரியவில்லை எம்மா. </i><b><i>உனக்கு
மன்னிப்பே இல்லையடி. ஆம்... உனக்கு மன்னிப்பேயில்லை. உன்னை என்
வாழ்க்கையில் இனிமேல் பார்க்கவே விரும்பவில்லை. உன்னுடைய பொருட்களை
எடுத்துக்கொண்டு என் மனையைவிட்டும் என்னைவிட்டும் போ... போய்விடு. </i></b><i>உன்னை
நான் எதற்குமே காயப்படுத்த விரும்பவில்லை எம்மா. என்னைப் பேசவிடு. அவன்
என் வாழ்வில் ஒன்றுமேயில்லை. எனக்கு எல்லாம் நீதான்... என்னைப் பேசவிடு
எம்மா. ஒ</i><b><i>ரு வேசைக்கு என் வாழ்விலும், வீட்டிலும் இடமில்லையடி. போடி வெளியே... போ... போ... போய்விடு.</i></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
3.</div>
<div style="text-align: justify;">
அடேலின்
வாழ்க்கை அவளது வேலையோடு நகரத்தொடங்குகிறது. தன்னிடம் கற்கும்
குழந்தைகளோடான நெருக்கம் அவளுக்கு மகிழ்வைத்தருவதாயிருக்கிறது. ஆனாலும்
அவளின் மனதின் ஆழத்தில் எம்மா என்கிற வடு உறுத்திக்கொண்டேயிருக்கிறது.
அவளது மாலைகள் எம்மாவுடன் கழித்த பூங்கா இருக்கைகளில், தனிமையில்,
கண்ணீரில் கரைந்துபோயின. எம்மா அவளை முழுதும் ஆட்கொண்டிருந்தாள்.
இந்நிலையில் அவளது எம்மாவை, “நீ ஒரு சிகையலங்காரம் செய்பவளா?” என்று
கேட்கவைத்த நீலவண்ணத் தலைமுடியில்லாத எம்மாவை, நீலம் கலந்து அவளை ஓவியமாய்
வரைந்த எம்மாவை, நீல உடையணிந்த அடேல் மீளவும் சந்திக்கிறாள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>நீண்டகாலமாயிற்றல்லவா எம்மா? அமர்ந்துகொள். <b>”.......” </b>ஏதாவது அருந்துகிறாயா? <b>நிச்சயமாக. </b>நான் ஒரு கிண்ணம் மது அருந்திக்கொண்டிருந்தேன். <b>ஓ..... </b>நீயும் ருசித்துப் பார் எம்மா, உனக்கும் பிடிக்கும். <b>இல்லை... பரவாயில்லை. </b>நான் உன்னுடைய சிற்றப்பாவை அழைத்திருந்தேன். அவர் உனக்குப் பிடிக்குமென்று சொன்னார். </i>(சிரிப்பு)<i> சொல்லு, உனக்கு என்ன வேண்டும். <b>ம்ம்ம்ம்... எனக்கு ஒரு கோப்பி போதுமானது. </b>நன்றாயிருக்கிறாயா? <b>ஆம்.. நீ.. நீ எப்படியிருக்கிறாய் அடேல்?</b> இருக்கிறேன் எம்மா. <b>உன்னுடைய தலையை நீ புதுவிதமாக வாரியிருக்கிறாய், நன்றாயிருக்கிறது. </b></i>(சிரிப்பு) <i>ஆனால், இந்தச் சிகையலங்காரம் என்னை வயது முதிர்ந்தவளாகக் காட்டிகிறது. <b>அப்படியெல்லாமில்லை, நீ இளமையாகவே தென்படுகிறாய். </b>நான்
ஒரு சிறுமியாயில்லாமல் ஒரு பெண்ணாக என்னைக் காட்டிக்கொள்ள முயல்கிறேன்.
என்னுடைய சிகையை மாற்றுவதன் மூலம் என்னை முதிர்ந்தவளாக இச்சமூகத்தில்
நிலைநாட்டலாம் என்றெண்ணினேன். அது பிழையாகிவிட்டது. <b>இல்லையே. உனக்கிது அழகாயிருக்கிறது. வயதும் முதிர்ச்சியும் நாம் நினைப்பதைவிட வேகமாகவே எம்மால் எய்தப்பெறுகின்றன. </b>உண்மையாகவா? <b>நான் ஒருவர் தன்னை முதிர்ந்தவராகக் காட்டிக்கொள்ளச் செய்கிற எத்தனங்களை விரும்புவதில்லை. </b></i>(பெருமூச்சும் சிறு புன்னகையும்) <i>உன்னுடைய ஓவியக் கண்காட்சிகளெல்லாம் எப்படி? <b>நன்றாய்த்தான் போகின்றது. </b>இன்னும் சொல்லு. <b>அவற்றை ஒருங்கிணைப்பதில் நிறைய இடர்கள். பத்திரிகையாளர்கள்.... பத்த்திரிகைகள்... ம்ம். </b>வெற்றிக்கான
விலை எம்மா. உன்னைப் பற்றி உன்னுடைய ரசிகர்கள் இணையத்தளங்களில் எழுதுவதை
நான் வாசிப்பதுண்டு. உன்னுடைய புதிய ஓவியங்களை நான் பார்ப்பதுமுண்டு. <b>உண்மையாகவா? </b>ஆம். </i>அவை என்னை<i>
வசீகரிப்பவை. புதியவை ஆனால் பழையவை....ம்ம்ம் எம்மா, என்னால் சரியாக
விளக்கமுடிவதில்லை. என்னிடம் பணம் சேர்ந்ததும் அவற்றில் ஒன்றை நான்
வாங்கவேண்டும். <b>ஏ... உனக்கு நான் ஒன்றைத் தருவேன் அடேல். </b>இல்லை எம்மா, நான் உனக்குத் தரவேண்டும். <b>சீச்சீ... </b>இல்லை.
அது எனக்கு முக்கியம். என்னையே தரவேண்டும் உனக்கு.
“.............................” சேச்சே... அது ஒரு பகடி. மிக மோசமான பகடி.
இருந்தாலும் பகடி. <b>சிரிப்பூட்டுகிறாய் நீ..... உன்னுடைய வாழ்க்கை பற்றிச் சொல் அடேல். </b>இப்போதும்
குழந்தைகளோடுதான் என் வாழ்வு. இப்போது முதல் வகுப்பு மாணவர்களோடு என்
நேரம் கழிகிறது. நான் இன்னும் ஆரம்பநிலையிலிருந்தாலும் மிகப்
பெருமிதமடைகிறேன். என் குழந்தைகள் சிறப்பானவர்கள். விடுமுறைக்காலங்களில்
இயலாத குழந்தைகளுக்கு உதவும் ஒரு குழுவுடன் இயங்குகிறேன். அவர்கள் எனக்கு
மிக நெருக்கமானவர்கள். அவர்களுக்கு உதவுவ்து பெரும் நிம்மதி
தருவதாயிருக்கிறது. என் நேரத்தில் பெரும்பகுதி என் மாணவர்களோடேயே கரைகிறது.
<b>உனக்கென்று நேரம் ஒதுக்குவதில்லையா நீ? வெளியே போவதில்லையா? </b>போகிறேன்.
என் சகாக்களுடனும் அவர்களின் குழந்தைகளுடனும். ஆனாலும்.... நான் இன்னும்
தனியாகத்தான் என் வீட்டுக்குப் போகிறேன். நான் தனித்திருக்கிறேன். <b>காதலன்?காதலி? </b>இல்லை. சில முட்டாள்தனமான அரைகுறை உறவுகள் இருந்ததுண்டு. நிரந்தரமாய் எதுவுமேயில்லை.<b> நீண்ட உறவொன்று சிக்கலானது என்றெனக்குத் தெரியும். </b>இன்னும் நீ அந்தப் பெண்ணோடு தான் இருக்கிறாயா? <b>லிஸ்? </b>ஆம். <b>ஆம். </b>சந்தோசமாயிருக்கிறாயா? <b>ஆம். </b>அவள் நல்ல பெண்தானே? <b>ஆம். </b>அவள் உனக்கு இரவில் நீ வீடுவரும்போது சமைத்துத் தருவதையும் காலையில் மலர்கள் தருவதையும் என்னால் எண்ணிப்பார்க்கமுடிகிறது. <b>அது
அவள் பாணி. அவளது குழந்தைக்கும் எனக்கும் நிறைய ஒத்துப்போகும்.
மூன்றுவயதாகும் அக்குழந்தையும் நானும் செய்கிற கோமாளித்தனங்களுக்காக லிஸ்
எங்களைத் திட்டுவதுண்டு. </b>உண்மையாகவா? <b>இருக்காதா? ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் என்றால் சும்மாவா? </b></i>(மௌனம்... புன்னகை) <i>அப்போ உடலளவில் எப்படி? திருப்தியாயிருக்கிறாயா? <b>ம்ம்ம்ம்... அது. </b>சிறப்பாயில்லையா? <b>ம்ம்ம் </b>புதுமையாயில்லையா?....<span _mce_type="bookmark" id="_end"><b>ம்ம்ம்... அது வந்து... உன்னுடன் இருந்த மாதிரியில்லை அடேல். </b></span></i><span _mce_type="bookmark" id="_end"><span _mce_type="bookmark" id="_start">(நீண்ட மௌனம்) <i>எம்மா,
இந்நாட்களில் உன் இன்மையை நான் உணர்கிறேன். இருவரும் ஒருவரையொருவர்
தீண்டுமின்பத்துக்காக ஏங்கியிருக்கிறேன். ஒருவரைப் பார்க்காமலிருப்பதையும்,
என்மூச்சும் உன் மூச்சும் கலக்காமலிருப்பதையும் எண்ணி நொந்து
போயிருக்கிறேன். எனக்கு எப்பொதும் நீ வேண்டும். நீ மட்டுமே வேண்டும் எம்மா.
என்னை உன்னைத் தீண்டவிடு எம்மா....<b>நிறுத்து அடேல். </b>இல்லை எம்மா... நான் வேண்டாம் என்று சொல்லாதே. உன்னால் அது முடியாதென எனக்குத் தெரியும். என்னை, என் யோனியைத் தொடு எம்மா... வா. <b>இல்லை அடேல். என்னால் அது முடியாது. </b>நீ என்னை மன்னிக்கவே மாட்டாயா எம்மா? <b>இல்லை அடேல். உன்னை நான் எப்போதோ மன்னித்துவிட்டேன். </b>அப்படியானால் ஏன்? என்னை இனிமேல் பார்க்கவே மாட்டாயா எம்மா? <b>மாட்டேன். </b>அப்படியானால் நீ என்னை மன்னிக்கவெயில்லை. <b>இல்லையில்லை. நான் மன்னித்துவிட்டேன். </b>அப்படியானால் என்மீது உனக்கு இப்போது காதலில்லையா எம்மா? <b>இல்லை
அடேல். உனக்கே தெரியும் நான் லிஸ்சுடன் வாழ்வது. அளவுகடந்த மென்மையான
அன்பு எனக்கு என்றுமே என்மீது இருக்கும் அடேல். ஆனால், என்னால் உன்னைக்
காதலிக்க முடியாது. </b></i></span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
4.</div>
<div style="text-align: justify;">
இதமான
நீலவண்ண ஆடையணிந்து எம்மாவின் ஓவியக் கண்காட்சிக்குப் போகிற அடேல்
லிஸ்சைக் காண்கிறாள். எம்மாவுக்கும் லிஸ்சுக்குமான நெருக்கத்தைக்
காண்கிறாள். அவள் வாழ்வின் ஒரே காதல் அடிபடக் காரணமான பழைய சகாவையும்
காண்கிறாள். எம்மாவின் தூரிகை ஓவியமாய் இதமான நீலவண்ணக் கலவையோடு தன்னைக்
காண்கிறாள். அந்த ஓவியக் கண்காட்சிச் சாலையை விலகி நடக்கத் தொடங்குகிறாள்.
Marianne தேவாலயத்தை விட்டு விலகியது போலன்று தன் நடையின் வேகத்தைக்
கூட்டி நடக்கத் தொடங்குகிறாள். ஆனாலும், அவள் விட்டுச்செல்லும்
அவ்விடத்தையெண்ணி அவள் மனம் துயர்கொண்டிருந்தது. இன்னவென்று அறுதியிட்டுச்
சொல்லமுடியாத ஏதோவொன்றை இழந்ததாக அவள் இதயம் அழுதது. அது எதை இழந்ததென்று
அவ்விதயம் அறிந்தேயிருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
5. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-S2QxNhgJQQs/UtLSCAfa1uI/AAAAAAAACnw/obMLf3JxN7Y/s1600/La_Vie_d%27Ad%C3%A8le_(movie_poster).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-S2QxNhgJQQs/UtLSCAfa1uI/AAAAAAAACnw/obMLf3JxN7Y/s1600/La_Vie_d'Ad%C3%A8le_(movie_poster).jpg" height="320" width="240" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2013 Cannes திரைப்பட விழாவில் Palme D'Or
விருது பெற்ற Blue is the Warmest Colour என்கிற படம் அடேல் என்கிற இளம்
பெண்ணின் வாழ்வில் வந்துபோகிற அவளின் ஒரே காதல் பற்றிய படம். தெருவில்
நான்குபேரைப் போட்டு மாட்டை அடிக்கிறமாதிரி ஒருவன் அடிப்பதைப் பார்த்து
உதட்டைச் சுழித்து, கிறங்கிய குரலில் “யோவ், உன்னை எனக்குப்
பிடிச்சிருக்கய்யா” என்று வசனம் பேசி அடுத்த கணமே வெளிநாட்டில் அறுபது
பேரோடு ஆடுவது “காதல்” என்று காட்டப்பட்ட படங்களைப் பார்த்துக்காதல்
செய்பவர்களை இப்படம் ஈர்க்காது. ஒருபால் ஈர்ப்புடையவர்களை “ஒருபால்
புணர்ச்சியாளர்கள்” என்று எழுதுகிற சமூகத்திடம் இப்படம் எடுபடாது. உதாரணம்,
ஒரு பால் ஈர்ப்புக் குற்றம் என்று நீதிமன்றம் சொல்ல அதற்கு எதிராகப்
பேசுகிறேன் என்று “ஒரு பால் புணர்ச்சியளர்கள்” என்று எழுதும் முற்றுமறிந்த
மூதறிஞர் அ.மார்க்ஸ் வாழும் சமூகத்தைச் சொல்லலாம்.ஒரு தமிழ்ப்பெண் ஒரு
ஆபிரிக்க அமெரிக்கரோடு காதல்வயப்பட்டமையைக் குற்றமாயும் அதை அவர்
பொதுவாழ்க்கையின் களங்கமாயும் பார்க்கிற படித்தசமூகமும் இன்னொரு உதாரணம்.
புதிதாகக் கட்டிய பாடசாலைத் தங்கும் விடுதிக்குப் பக்கத்தில் வீடொன்று
வந்தால் காதலும் வரும் அதனால் களங்கமும் வரும் என்கிற மேதைச் சமூகத்தையும்
சொல்லலாம். இவர்களைவிடுத்து காதல் என்கிற இயல்பான அந்த மானுட யதார்த்தத்தை,
அது தரும் சுகத்தை, சேராக்காதல் தரும் வலியைக் கொஞ்சமாவது
உணர்ந்தவர்களுக்கு இப்படம் ஒரு நல்ல அனுபவம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சினிமா ஒரு காட்சியூடகம். உரையாடல்கள் தேவைக்கேற்றபடி பயன்படுத்தப்பட வேண்டும். திரையில் ஒரு பாத்திரம் தன் நண்பனுக்கு செல்பேசவேண்டுமென்றால் செல்பேசியை வெளியே எடுத்துக் காதில் வைத்துப் பேச ஆரம்பித்தாலே போதுமானது. “எங்க, மச்சானைக் காணோம். எதுக்கும் என் செல்லை எடுத்துக் கூப்பிட்டுறுவோம்” என்ற வசனம் இக்காட்சியில் வருவது ஏதோ விளையாட்டுப்போட்டியை நேரடி வர்ணனை செய்வது போல இருக்கும். இப்படியான காட்சிகளுக்கு உரையாடல் எழுத ஒரு வசனகர்த்தா வெட்கப்படவேண்டும். Abdellatif Kechiche இன் Blue is the Warmest Colour கூர்மையான உரையாடல்களின் கொண்டாட்டம். அதுவும் கொஞ்சமாவது இலக்கியப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு (குறிப்பாக பிரெஞ்சு இலக்கியம்) இவ்வுரையாடல்கள் மிக நெருக்கமானதாயிருக்கும். காட்சியூடகம் ஒன்றில் உரையாடல்கள் எவ்வளவு நேர்த்தியாகப் பயன்படுத்தப்படலாம் என்பதற்கு இந்தப் படம் நல்ல எடுத்துக்காட்டு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தில் மிகவும் அப்பட்டமான சில காட்சிகள் இருக்கின்றன. அக்காட்சிகள் வேண்டாதவர்கள் தணிக்கை செய்யப்பட்ட பதிப்புகளைப் பார்க்கலாம். அடேலும் எம்மாவும் காதல் செய்கிற ஒரு காட்சி கிட்டத்தட்ட ஏழெட்டு நிமிடம் திரையில் ஓடும். ஒலகப்பட ரசிகர்கள் “அட்லீ” “லியா” என்று அடேலையும் எம்மாவையும் சொல்கிறார்கள். அடேலாக நடித்தவர் Adele Exarchopoulos, எம்மாவாக நடித்தவர் Lea Seydoux. அந்தளவுக்குக் காட்சிகள் அவர்களைக் கதையோடு ஒன்றாமல் செய்திருக்கின்றன என்றால் பாருங்கள். குடும்பத்தோடெல்லாம் பார்க்கமுடியாத படம் இது. ஆனாலும், காதலிப்பவர்களும் காதலித்தவர்களும் தவறவிடமுடியாத காதலுக்கேயான படம் இது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-18973392598688880222012-12-23T20:22:00.000-05:002012-12-23T20:22:49.059-05:00பாலா சாஹேப்புக்கான அஞ்சலிகள்<div style="text-align: justify;">
சமூக வலைத்தளங்களில் பால் தாக்கரேக்கு தமிழ்த் தேசியர் சிலர் வரைந்த அஞ்சலிக்குறிப்புகளை முன்வைத்து</div>
<div style="text-align: justify;">
__________________________________________________________________________________</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
86 வயதான பாலாசாஹேப் கேஷவ் தாக்கரே கடந்த நவம்பர் 17ம் திகதி மாரடைப்பால் இறந்து போனார். அவரது இறப்பை முன்னிட்டுப் பல தரப்புகளிட்மிருந்தும் பல வகையான வெளிப்பாடுகளைக் காணக்கூடியதாயிருந்தது. சமூக வலைத்தளங்களில் அவர் தொடர்பில் தமிழ்த்தேசியர் சிலர் வெளியிட்ட இரங்கற் குறிப்புகளை ஆய்ந்து பார்க்கவேண்டிய தேவை தமிழ்த்தேசியம் தொடர்பிலான அக்கறை உடையவர்களுக்கு இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தாக்கரே தன்னுடைய பொதுவாழ்வை ஒரு பத்திரிகைக் கேலிச்சித்திர வரைகலைஞராகவே தொடங்கினார். மராத்தி மொழி பேசும் மக்களின் மாநிலமாக மகாராஷ்டிரா உருவாவதற்காக முன்னின்று உழைத்தவர்களில் ஒருவரான கேஷவ் சீதாராம் தாக்கரே என்பாரின் மகனான பால் தாக்கரே, தனது பொது வாழ்க்கையின் ஆரம்பம் முதலே “மகாராஷ்டிரம் மராத்தியர்க்கே” என்கிற கொள்கையை உடையவராகவும், ஒன்றிணைந்த இந்தியா அல்லது இந்திய இறையாண்மை எனப்படுகிற வரையறைகளைக் கேள்விக்குள்ளாக்குகிறவராயுமே இருந்தார். 1966 இல் இவர் “சிவ சேனா” அமைப்பைத் தொடங்கும்போது அமைப்பின் மூலமந்திரமாக இருந்தது “தென்னிந்திய, குஜராத்திய மற்றும் மார்வாடி வந்தேறிகளிடமிருந்து மராத்தியத்தைப் பாதுகாத்தல்” என்பதாகவே இருந்தது. அவரது எதிரிகள் பட்டியலில் இஸ்லாமியர்களையும் இணைத்ததன் மூலம் இந்துத்துவத்தின் கோரமுகத்துக்கான அடையாளமாக “சிவனின் சேனையை” மாற்றினார் என்றே சொல்லலாம். (இந்து மதம் என்கிற அடையாளத்துக்குள் தனித்தனி மதங்களாக இருந்த மற்ற மதங்கள் இணைக்கப்பட்டு, அவற்றின் நற்குணங்கள் நாறடிக்கப்பட்ட வரலாறு இந்தப் பத்திக்கு அவசியமில்லை. சிவசேனையை ஒரு இந்துத்துவப் பாசிச அமைப்பாக அடையாளப்படுத்துவதே இப்பத்தியின் பேசுபொருளுக்கு அமைவானது).</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தியாவில் இந்து-முஸ்லீம் உறவுகளில் இருந்துவந்த நெருடலை பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து மிகப்பெரும் விரிசலாக்கிய பெருமை ஆர்.எஸ்.எஸ் கரசேவகர்கள் மற்றும் சிவசேனாவையே சாரும். அவ்வேளை தனது பத்திரிகையில் முஸ்லிம்களுக்கு வெளிப்படையான சவாலை விடுத்ததோடு மட்டுமல்லாமல் 1993 ல் மும்பை (அப்போதைய பம்பாய்) கலவரத்தின் போதான பல படுகொலைகளை தாக்கரேயும் அவரது குடும்பமும் முன்னின்று ஒருங்கிணைத்ததாக இந்திய நடுவண் அரசு அமைத்த “பம்பாய் (மும்பை) கலவரங்களுக்கான விசாரணைக் குழு” குறிப்பிட்டிருக்கிறது. அதே ஆண்டு பெப்ரவரி மாதம் தன்னுடைய மகன்கள் மற்றும் அமைப்பினரின் செய்கைக்காகத் தான் பெருமைப்படுவதாகவும், தாங்கள் மட்டும் இல்லையென்றால் முஸ்லிம்களை அடக்கியிருக்கமுடியாது எனவும் தாக்கரே கூறினார். அதாவது, இக்கலவரங்களுக்கெல்லாம் காரணகர்த்தாக்கள் முஸ்லிம்கள் என்பதான பொய்யை தாக்கரேயும், பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கியமான தலைவர்களும் உரத்துக் கூறினார்கள். அந்தப் பொய்யை 1995 இல் வெளிவந்த “பம்பாய்” என்கிற மணிரத்னத்தின் பன்மொழித் திரைப்படத்தில் ஆரம்பித்து இந்தியாவின் வெகுசன ஊடகங்கள் திரும்பத் திரும்பச் சொல்லி, அதையே உண்மை என்பது போல் நிறுவினார்கள். 1992 டிசம்பர் 6 வரைக்கும் நெருடல்கள் இருந்தாலும் ஒன்றாக வாழ்ந்த சமூகங்களுக்கிடையே பெரும்பிளவை ஏற்படுத்திய சம்பவத்துக்கான முதல் அடியை எடுத்து வைத்தது இந்துக்கள் என்கிற உண்மையை தாக்கரேயின் வழியில் வெகுசன ஊடகங்களில் மறைத்தவர்களில் தமிழ் மக்களுக்கு நன்கே அறிமுகமான மணிரத்னம் மற்றும் கமலஹாசன் மிகமுக்கியமானர்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தாக்கரே முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, மராத்தியர் அல்லாத மற்றவர்களுக்கும் பெரும் தலைவலியாக இருந்தார். தென்னிந்தியர், குஜராத்திகள், மார்வாடிகள் மற்றும் வட இந்தியர்கள் மீதும் தாக்கரே வெறுப்பை உமிழ்ந்தார். முக்கியமாக பீகாரிகளைக் குறித்து “ஒரு பீகாரி நூறு வியாதிகளுக்கு சமன்” என்ற அப்பட்டமான சாதிவெறுப்பை வெளிக்காட்டியவர் தாக்கரே. எதற்கெடுத்தாலும் கடையடைப்பு, வன்முறை, அடிதடி, கொலை என்பதாகவே பாதை வகுத்துக்கொண்ட தாக்கரே “செத்தும் கெடுத்தவர்” என்றால் மிகையாகாது. அவரது சாவை முன்னிட்டு மும்பையின் சிவசேனா கோரிய கடையடைப்பை சமூகவலைத்தளத்தில் கண்டித்த ஒரு பெண்ணும், அக்கண்டனத்துக்குத் தனது விருப்பைத் தெரிவித்த பெண்ணும் சிவசேனாவின் அழுத்தத்தின் காரணமாகக் காவற்துறைய்னரால் கைதுசெய்யப்பட்டனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படியான பால் தாக்கரேயை ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றின் பிரதிநிதிகளான இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியம் பேசக்கூடிய ஒரு சிலரும், அவர்களுக்குச் சார்பாக இந்தியாவில் தமிழ்த் தேசியம் பேசக்கூடிய இன்னும் சிலரும் என்ன காரணத்துக்காக ஆதரிக்கிறார்கள்? தாக்கரே ஒரு பேட்டியில் பின்வருமாறு கூறுகிறார், “ விடுதலைப் புலிகளின் கம்பீரமான போராட்ட முறைகளுக்காக அவர்கள் குறித்துப் பெருமையடைகிறேன். அவர்கள் மீதான தடையை இந்திய நடுவண் அரசு நீக்கவேண்டும்”. இந்த ஒரே ஒரு பிரகடனத்துக்காக பால் தாக்கரேயை ஆதரித்து, அவரது மரணத்துக்கான அஞ்சலிகளை எம்மவர் செலுத்துவது குறித்து தமிழ்த் தேசியம் சரியான பாதையில் முன்னகர்த்தப்படவேண்டும் என்ற அக்கறையுள்ளோர் விசனம் கொள்வதில் வியப்பேதுமில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தாக்கரேயின் “மண்ணின் மைந்தர்” கோசத்துக்கும், தமிழ்த் தேசியர்கள் முன்வைக்கும் “தனி நாடு” என்ற கோரிக்கைக்குமான நுணுக்கமான வித்தியாசங்களைப் பெரும்பான்மைத் தமிழ்த் தேசியர்கள் கவனத்தில் கொள்ளாமலிருப்பது பெருந்துயரம் எனலாம். இந்த நுணுக்கமான பார்வையின்மை தமிழ்த் தேசியத்தைத் தொடர்ந்தும் ஒரு சவலைப் பிள்ளையாக வைத்திருக்கிறது. இலங்கை வாழ் தமிழர்களின் “தனி ஈழம்” என்கிற கோரிக்கை தாக்கரேயின் “மண்ணின் மைந்தர்கள்” கோரிக்கைக்குச் சமாந்தரமானதல்ல. ஈழத் தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையானது சிங்கள அரசியல்வாதிகளின் இனவாதப் போக்கு மற்றும் ஒடுக்குமுறைக்கெதிரான ஒரு பாதுகாப்புப் பொறிமுறையாக எழுந்தது என்பதை நாம் இங்கே நினைவிற் கொள்ளவேண்டும். “இலங்கை வாழ் தமிழர்களுக்கு தென்னிந்தியாவில் இருக்கிற தமிழ் பேசும் பெருங்கூட்டத்தோடான தொடர்பிருப்பதால் இந்தியர்கள் இலங்கையில் செல்வாக்குச் செலுத்தக் காரணிகளாகிவிடுவர்” என்றும், “சிங்களர்க்கான மேம்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் கல்வியுரிமை” என்கிற கோசங்களை முன்வைத்து சிங்கள இனவாத சக்திகள் மேற்கொண்ட அடக்குமுறைக்கு எதிரான தமிழ் மக்களின் எதிர்வினையாக எழுந்த தமிழ்த் தேசியவாதம் இன்றைக்குப் பல்வேறு தரப்புகளால் “பிற்போக்கானது” என முத்திரை குத்தப்படுவதற்கு இப்படியான நுணுக்கமான பார்வைகள் இல்லாதிருப்பதும், புறக்கணிக்கப்படுவதுமே காரணங்களாகும். இல்லாத “பூச்சாண்டி” ஒன்றைக் காட்டி இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஊட்டி சிங்கள அரசியல்வாதிகள் குளிர்காய்ந்ததுக்கும் சிவசேனாவின் “மண்ணின் மைந்தர்கள்’ கோசத்துக்கும் எந்த வித்தியாசமுமில்லை என்பதை உணரவேண்டியது அவசியம். இதேவேளை கிட்டத்தட்ட இதே போன்ற பிரசாரம் (இல்லாத பூச்சாண்டி) தமிழ்த்தேசியர்களாலும் முன்னெடுக்கப்பட்டது என மனோரஞ்சன் போன்ற தம்மைச் சாதீயத்துக்கு எதிரானவர்களாகக் காட்டிக்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டுவருவதையும் இங்கே சுட்டிக்காட்டவேண்டும். அதாவது, பெரும்பான்மைச் சிங்களர்களால் தமிழர்களுக்கு எந்தவிதமான அநீதியும் இழைக்கப்படவில்லையாம், தலித் மக்களின் எழுச்சியை அடக்க வெள்ளாளர்கள் இந்த இன முரண்பாடுகளை வளர்த்தார்களாம். இது மனோரஞ்சனின் அரிய கண்டுபிடிப்பு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கைச் சிங்கள அரசியல்வாதிகள் செய்ததைத்தான் சிவசேனாவும் செய்தது. மகாராஷ்டிராவில் இல்லாத பிரச்சினை ஒன்றை இருப்பதாகக் காட்டி நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்தார்கள் தாக்கரே முதலானவர்கள். முக்கியமாக மராத்திய மக்களின் வளங்கள் மற்றும் மராத்தியர்களின் உழைப்பைச் சுரண்டிய பன்னாட்டு மற்றும் உள்நாட்டுப் பெருமுதலாளிகள் மீதும், மகாராஷ்டிரப் பண்பாடுகளைக் குழிதோண்டிப் புதைப்பதில் முன்னின்ற திரைப்பட முதலாளிகள் மீதும் சிவசேனா மிதமான போக்கையே கடைப்பிடித்தது. அவர்களுக்கெதிராக அறிக்கைகளைப் பிரசுரித்தார்கள், சில வேளைகளில் “பொலிவூட்” படங்களுக்கெதிராகக் கலகம் செய்தார்கள். ஆனாலும், சிவசேனாவால் நேரடியாகத் தாக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களும் பஞ்சம் பிழைக்கவந்த ஏழைக் கூலிகளுமே. தென்னிந்தியர்கள் மற்றும் பிகாரிகள் மீதே இவர்கள் மோசமான வன்முறைகளைப் பிரயோகித்தார்கள். அதிலும், பிகாரித் தலித்துக்கள் மீது பெரும் கவனம் செலுத்தினார்கள் சிவசேனா அமைப்பினர், காரணம், எல்லாவிதமான அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, திருப்பி அடிக்காத குழுமமாக அந்த மக்கள் இருந்தமையே ஆகும். பெரும்பான்மை ஒன்றைச் சிறுபான்மையாகவும், சிறுபான்மை ஒன்றை பூதாகரமான அச்சுறுத்தும் பெரும்பான்மையாகவும் சித்தரித்து, அச்சிறுபான்மை மீதான எல்லாவகையான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளையும் பிரயோகித்ததில் சிவசேனாவுக்கும், சிங்கள அரசியல்வாதிகட்கும் எந்த வித்தியாசமுமே இல்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ்த் தேசியர்களான நாங்களும் இதே மாதிரியான ஒரு நிலைப்பாட்டை 1990 களில் முஸ்லிம்களை இரண்டு மணிநேரத்தில் வெளியேறச் சொன்னதன் மூலம் எடுத்திருந்தோம். அது ஒரு பிழையான அரசியல் முடிவு என்பதைப் பிற்காலத்தில் தமிழ்த் தேசியத் தலைமை ஒப்புக்கொண்டதை இவ்விடத்தில் குறிப்பிட்டாகவேண்டும். “எங்கள் தலைமை அப்படி மானம் கெட்டுப் போகவில்லை” என்று தமிழ்த் தேசியர்களும் “உங்கள் தலைமை அவ்வளவு விரிந்த மனம் கொண்டதல்ல” என முஸ்லிம்களும் இன்றைக்கும் அடிபட்டுக்கொண்டிருந்தாலும் உண்மை என்பது என்றாவது தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் என்பதில் எனக்குப் பெரும் நம்பிக்கையுண்டு. ஒரு பிழையான அரசியல் நிலைப்பாடு எனத் தமிழ்த் தேசியத் தலைமை ஒப்புக்க்கொண்டது போன்ற அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட பால் தாக்கரேயைத் தமிழ்த் தேசியர் ஆதரிப்பதென்பது தமிழ் தேசியத்துக்கான சாவுமணி என்பதை நாம் விளங்கிக்கொள்ளுவது அவசியமாகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் அரசியலில் மும்முரமாகச் செயற்பட்டு வரும் நாம் தமிழர் அமைப்பும் பால் தாக்கரே வழியிற் செல்வதுக்கான அத்தனை பிரயத்தனங்களையும் செய்துவருகிறது. தாக்கரேயின் “மண்ணின் மைந்தர் கொள்கைக்காக” அவரை ஆதரிப்பதாக அந்த அமைப்பின் இணையப் பாசறைப் பொறுப்பாளர் பாக்கியராசன் சேதுராமலிங்கம் தாக்கரேக்கான அஞ்சலியில் குறிப்பிடுகிறார். இது தமிழர் தேசியத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்கான அதிசிறந்த முன்னெடுப்பு என்பதைத் தமிழ்த் தேசியர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். தமிழ்த் தேசியர்கள் தம்மிடையே புரையோடியுள்ள இவ்வாறான கசடுகளைக் களைந்துகொள்ளாதவரையில் தமிழின் முன்னணி முற்போக்கர்கள் “சிங்கள இனவாதத்தைவிடத் தமிழ்த் தேசியவாதம் மோசமானது” என நிறுவி அடக்குமுறையாளர்களுக்குப் பிடியெடுத்துக் கொடுப்பர். ஈழத் தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் எங்கள் கண்முன்னரேயே குழிதோண்டிப் புதைக்கப்படும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: center;">
*_____*</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பி.கு: இவ்வரைபானது நவம்பர் 30, 2012 அன்று செயற்பாட்டாளர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பத்திரிகைக்காக எழுதப்பட்டது. அவர் பத்திரிகை தொடங்கும் திட்டத்தைக் கைவிட்ட காரணத்தால் (?) டிசம்பர் 23, 2012 அன்று திருத்தப்பட்டது</div>
<br />
<br />Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-35516201110086740832011-11-26T06:58:00.001-05:002011-11-26T07:00:57.974-05:00தமிழ் விக்கி ஊடகப் போட்டி: எழுத்து மட்டுமே அறிவன்று<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-jbkckAjDqsI/TtDUT43AYJI/AAAAAAAACDM/-Us8IxSSPss/s1600/TWMC_Logo.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="http://1.bp.blogspot.com/-jbkckAjDqsI/TtDUT43AYJI/AAAAAAAACDM/-Us8IxSSPss/s400/TWMC_Logo.png" width="400" /></a></div>
தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இதில் பங்கேற்போர்
தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள்,
அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப்
பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும்.
இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில்
முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், மூன்றாம்
பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25
டாலர் வீதம் இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இவை தவிர தொடர்ச்சியாகப்
பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்று சிறப்புப் பரிசுகளும், தமிழர்
தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப்
பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.<br />
<br />
போட்டி நவம்பர் 15, 2011 முதல் பெப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் <a class="external free" href="http://ta.wikipedia.org/wiki/contest">http://ta.wikipedia.org/wiki/contest</a>
என்ற இணையமுகவரிக்குச் சென்று முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தகுந்த பதில்களைப் பெறலாம்.<br />
<br />
குறிப்பு:பரிசுத்தொகை வெற்றிபெறுபவரின் நாட்டின் நாணய அலகுக்கு மாற்றப்படும்.Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-42389876245450418782011-11-18T16:59:00.001-05:002011-11-18T18:56:02.447-05:00சமூக மாற்றத்துக்கான கல்வி- மேட்டிமைப்படுத்தலுக்கான கல்வி: முரண்கள்<div style="text-align: justify;">
சமூக ஏற்றத்தாழ்வுகளையும் கொடுமைகளையும் இல்லாமல் அழித்தொழிக்க சிறந்த ஒரே ஒரு ஆயுதமாகப் பார்க்கக்கூடியது கல்வி. கனடாவில் நடைபெற்ற குமார் மூர்த்தியின் பத்தாவது ஆண்டு நினைவு விழா அன்று பேராசிரியர் சின்னத்தம்பி அவர்கள் ‘கல்வியும் சமூகநீதியும்’ என்கிற பெயரில் ஆற்றியிருந்த சிறப்புரை இதுபற்றிய சிந்தனையைக் கிளறிவிட்டிருந்தது. சின்னத்தம்பி அவர்களின் உரையானது பெரும்பாலும் உயர்கல்வியைச் சம்பந்தமானதாகவே இருந்தது. இருந்தபோதும், எனது அனுபவத்தில் எங்களுடைய சமூகத்தில் சமூக நீதிக்கு உதவவேண்டிய கல்வியில் ஆரம்பநிலைகளிலேயே கோளாறுகள் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னுடைய இளமைப்பருவத்தின் வளர் ஆக்கம் நாடக்கூடிய காலப்பகுதி யாழ்ப்பாணத்திலேயே கழிந்தது. வடமராட்சியில் பருத்தித்துறைப் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய ஹாட்லிக் கல்லூரியில் ஆறாம் வகுப்புத் தொடக்கம் பதின்மூன்றாம் வகுப்பு வரை படித்தேன். வடமராட்சியில் ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்பதென்பது பெரும் பேறாகவே கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. ஹாட்லிக்கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி என்றவாறே “பெரிய பள்ளிக்கூட” வரிசை அமைந்திருந்தது. அதே போல் மகளிர் கல்லூரிகளுக்கும் பருத்தித் துறை மெதடிஸ்த மிசன் பெண்கள் கல்லூரி, வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி, வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி என்பதாக அந்த வரிசை அமைந்திருந்தது. இங்கே உச்சாணிக்கொப்பாக இருக்கிற ஹாட்லிக் கல்லூரி, மெதடிஸ்த மிசன் பெண்கள் கல்லூரி மற்றும் வட இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றிலும், யாழ்ப்பாணத்தின் ஏனைய “பெரிய” பாடசாலைகளான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரி, சென்.பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி போன்ற பாடசாலைகளிலும் என்னைப் பொறுத்தவரை இன்றுவரைக்கும் சமூகநீதி நோக்கிய கல்வியும், சமூகநீதி தொடர்பான பார்வையும் இருந்ததில்லை என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். அதற்கான காரணங்களை வருகிற பகுதிகளில் ஆராய்வோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப் பாடசாலைகளில் தமது பிள்ளைகள் கல்வி கற்பதை பெருமையாகக் கருதுகிற மனப்பாங்கு எங்கள் பிரதேச மக்களிடம் இருக்கிறது. அதற்குக் காரணம், இந்தப் பாடசாலைகளில் தரத்தில் மிகவும் உயர்ந்த கல்வி கிடைப்பதாக கட்டமைக்கப்பட்ட விம்பமேயாகும். இதை ஒரு விம்பம் என்று எப்படிக் குறிப்பிடமுடியும் என்று இங்கே கேள்வியெழுப்பல் அவசியமாகிறது. தனியார் பாடசாலைகள் அதிகளவு செல்வாக்குச் செலுத்துகிற நாடுகளில் (இந்தியா) கல்வித்தரம் பற்றிய பிரச்சினைகள் இருக்கும். ஆனால், ஒரே பாடத்திட்டம் அமுலில் இருக்கக்கூடிய இலங்கைப் பாடசாலைகளான ஹாட்லிக் கல்லூரிக்கும், நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்துக்கும் கல்வித் தரத்தில் அப்படிப் பெரிதாக என்ன வித்தியாசத்தை எம்மால் எடுத்துச் சொல்லிவிட முடியும்? நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் வாழ்ந்த நான் தினமும் 20 கிலோ மீற்றர்கள் பயணம் செய்து ஹாட்லிக்கல்லூரிக்குச் சென்றதும், ஹாட்லிக் கல்லூரி இருக்கிற பிரதேசத்தில் இருக்கிற என் வயதொத்த இன்னொரு மாணவர் அதே இருபது கிலோ மீற்றர்கள் பயணம் செய்து நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்துக்குப் படிக்க வந்ததும் மிகவும் முரண்பாடான கேள்விகளைத் தோற்றுவிப்பது தவிர்க்கமுடியாதது. மேலும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தை விட ஹாட்லிக் கல்லூரியில் படித்தால் எனது பிள்ளைக்கு தரமான கல்வி கிடைக்கும் என பெற்றோர்கள் நம்புவதற்கு ஏதாவது வலுவான காரணம் இருக்கமுடியுமா என்று கேட்டால், காரணம் இருக்கிறது என்றே சொல்லலாம். ஹாட்லிக் கல்லூரியில் மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான “மேல்தட்டு” பாடசாலைகளில் இதற்கான திட்டமிடலும், செயற்பாடுகளும் கனகச்சிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதை சமூக அக்கறையோடு உற்று நோக்குகிற யாருமே விளங்கிக்கொள்ளலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப் பாடசாலைகள் பெரும்பாலும் ஆறாவது வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பதில் ஒத்த நடைமுறைகளையே பயன்படுத்துகிறார்கள். தற்போதைய நிலமையில் எந்தப் பாடசாலைகள் யார் யாரை தமது பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பதை இவர்கள் பயன்படுத்திய அதே நடைமுறையை உத்தியோகபூர்வமாக்கியிருக்கிறது கல்வித் திணைக்களம். இன்றைய நிலையில் இப்பாடசாலைகளில் ஆறாம் வகுப்பில் சேர்கிற மாணவர்கள் அவர்களது ஐந்தம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சை மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்தப் பரீட்சை ஒரு மாணவனின் எதிர்காலத்தைக் கல்வியியல் ரீதியாகத் தீர்மானிக்காவிட்டாலும், சமூகவியல் ரீதியாகத் தீர்மானிப்பதில் ஓரளவுக்காவது செல்வாக்குச் செலுத்துகிறது. அதாவது, இலகுவாக நல்ல பெறுதிகளைப் பெறக்கூடிய மாணவர்களை நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ளுதல் அல்லது பெறுபேறுகளைப் பெற முடியாதவர்களை வெளியே தள்ளிவிடல் என்பது காலம் காலமாக இத்தகைய பாடசாலைகளில் நடைபெற்று வருகிறது. அதன் பின் இப்படியான பாடசாலைகளில் திறமைக்குப் புறம்பாக ஏற்றுக்கொள்ளப்படுபவர்கள் சமூகத்தில் மேன்மையான நிலையில் இருக்கக்கூடிய மக்களின் பிள்ளைகள். இப்போது யாழ்ப்பாணத்தில் சில பாடசாலைகளின் அனுமதிகிடைப்பது பெற்றோர் கொடுக்கக்கூடிய நன்கொடையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இப்படி வடிகட்டி எடுக்கப்படுகிற மாணவர்கள், எப்படியாவது முட்டிமோதி சமூகத்தில் நல்லநிலைக்கு, செல்வாக்குள்ளவர்களாக வருகிறார்கள். அதிலும் முக்கியமாக, கல்வித்துறையில் இம்மாணவர்கள் சேவையாற்ற வரும்போதுதான் சமூகநீதிக்கான கல்வி பற்றிய கோட்பாடுகள் ஆட்டம்கண்டு போகின்றன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேற்படி பாடசாலைகளுக்கு வலுவான பழைய மாணவர் சங்கங்கள் உண்டு. மேலும், கோட்டக் கல்வித் திணைக்களம், வலயக் கல்வித் திணைக்களம் போன்ற கல்வி நிருவாகவியல் சார்ந்த தளங்களிலும் இப்பாடசாலைகளின் பழைய மாணவர்கள் இருக்கிறார்கள் அல்லது அந்தத் தளங்களில் இருப்பவர்கள் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடிய தளங்களில் பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். இங்கேதான் சமநிலை முற்றாகக் குழம்பிப் போகிறது. நல்ல பெறுபேறுகளைப் பெறக்கூடியவர்கள் என வடிகட்டப்பட்ட இந்த மாணவர்களுக்கு, நல்ல ஆசிரியர்கள், நல்ல திட்டங்கள் போன்ற எல்லாமே நல்லதாகக் கிடைக்க ஆரம்பிக்கிறது. அப்படிக் கிடைக்கத் தொடங்கியதும் அவர்கள் தருகிற பெறுபேறுகளும் நல்லவையாகவே இருக்கின்றன. இதன் மூலம் இப்பாடசாலைகளின் மேட்டிமைத்தனம் மேலும் மேலும் நிரூபணமாகி வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்தப் பாடசாலைகளில் அடித்தட்டைச் சேர்ந்த சிறிய தொகையேயான மாணவர்கள் ‘நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்குமாங்கே பொசியுமாம்’ என்பது போல பயனடைகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தபோதும் இப்படியான கல்விமுறையானது திரும்பத்திரும்ப ஒரு மேட்டிமைச் சமூகத்தைக் கட்டியெழுப்புவதிலேயெ முன்னிற்கிறது என்பது வெட்ட வெளிச்சம். இதை உடைப்பதில் பெரும் தடையாக இருப்பது இந்தப் பாடசாலைகள் தம்மைச் சுற்றி எழுப்பிவைத்திருக்கிற ஒளிவட்டமும், இந்தப் பாடசாலைகளில் கற்று வெளியேறுகிற மாணவர்களின் மத்தியிலே இயல்பாகவே விதைக்கப்படும் மேட்டிமைத்தனமுமே என்பதை மறுப்பதற்கில்லை. மேலும், பாடசாலைகளுக்கு வளங்களை ஒதுக்குவதில், முக்கியமாக பாடசாலைகளின் முக்கிய வளமான ஆசிரியர்களை ஒதுக்கும்போது கல்வித் திணைக்களம் நியாயமற்ற முறையில் நடந்துகொள்வது கண்கூடு. நண்பர் ஒருவர் ஒருமுறை பேசும்போது “வடமராட்சி கிழக்கில இருக்கிறவனுக்கு எல்லாம் என்னத்துக்கு நல்ல வாத்திமார். அவங்களைத் தூக்கி எங்கட பள்ளிக்கூடங்களில போட்டாத்தான் சரி. அப்பிடியெண்டாத்தான் கூடப்பேர் யூனிவேசிற்றி போவாங்கள்’ என்ற போது அதிர்ச்சியாக இருந்தது. வளங்கள் மறுக்கப்பட்ட பிரதேசங்களுக்குக் கூடிய வளங்களைக் கொடுப்பதில் உரிமைகள் மறுக்கப்பட்ட நாங்களே எவ்வளவு மோசமான மனோநிலையுடன் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்குரியதும் வெட்கப்படவேண்டியதுமான ஒரு செயலே. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்றைக்கு ஓரளவுக்கு இந்த நிலையில் மாற்றங்கள் தென்பட ஆரம்பித்திருப்பதற்கு முக்கிய காரணமாக தனியார் கல்வி நிறுவனங்களையே (Tuition Centers) பார்க்கலாம். யாழ்ப்பாணத்தில் அதிகளவு பணம் புரள்கிற ஒரு தொழிலாக இந்தத் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் தொழில்களைப் பார்க்கலாம். அதற்காக அந்தக் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கக்கூடிய ஆசிரியர்கள் மீது முழுமையாக நாங்கள் பழிபோட்டுவிட முடியாது. இன்றைக்குக்கூட ‘குரு-சிஷ்ய’ உறவுக்கு மேலாக ‘பெற்றோர்-பிள்ளை’ உறவு போலத் தொடர்கிற இந்தத் தனியார் கல்விநிலைய ஆசிரியர்- மாணவர் உறவைக் காணமுடியும். முழுமையான அர்ப்பணிப்போடு கற்பிக்கிற அந்த ஆசிரியர்களை இந்த சமூகநீதி தொடர்பான பார்வையின்மைக்குக் காரணமான குற்றவாளிகளாகக் காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. கல்வி சந்தைப்படுத்தப்படுவதற்கு ஏதுவாக இருந்த முழுச் சமூகமும் இந்த விடயத்தில் குற்றவாளிகளே. கல்வியின் சந்தைத் திறலைச் சரியாக உணர்ந்துகொண்ட சில தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் வந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பற்றிக்கொண்டார்கள். இந்த நிறுவனங்கள் மேற்படி மேற்றட்டுப் பாடசாலைகள் உருவாக்கிய மாயவிம்பத்தை ஓரளவுக்குச் சரிசெய்தாலும், அவை இன்னொருவகைச் சமச்சீரற்ற தன்மையை உருவாக்க ஆரம்பித்திருக்கின்றன. அதாவது, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனிலிருக்கக்கூடிய வேறுபாடுகளை இந்தத் தனியார் நிறுவனங்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தன. அதாவது நன்றாகச் சொல்லித்தரக்கூடியவராகக் கருதப்பட்ட ஆசிரியர்களை இந்நிறுவனங்கள் வடிகட்டித் தமதுடமைகளாக ஆக்கிக்கொள்ளத் தொடங்கின. இந்நிலை காரணமாக இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு இடையில் கூட மேலே சொன்ன ‘மேற்றட்டுப் பாடசாலைகள்’ மற்றும் ஏனைய பாடசாலைகளுக்கு இடையே இருந்த சமச்சீரற்ற தன்மை இக்கல்வி நிலையங்கள் மத்தியிலும் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த சமச்சீரற்ற தன்மையை மாற்றுதல் தொடர்பில் மிகச் சிலரே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக என்னோடு இதே சமூகத்தில் படித்து பொறியியலாளராக (அதாவது, எமது சமூகத்தின் மேன்மை மிகு தொழில் செய்பவராக) இருக்கிற நண்பர் ஒருவர் கல்வியின் சமூகநீதி தொடர்பான பாத்திரத்தை மறுதலிக்கக்கூடிய கல்வியியலாளர்களை நோக்கிக் காட்டமான ஒரு கேள்வியை முன்வைத்திருந்தார். 1985 ம் வருடம் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் தமிழர் பிரதேசங்களுக்கான பொறியியல் பீடம் பற்றி வைத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதில் இருக்கிற மோசமான குழிபறிப்புகள் பற்றியதாகவே அவரது கேள்வி அமைந்திருந்தது. அது தொடர்பில் அவர் எழுதிய பத்தியின் சில பகுதிகளை இங்கே தருகிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="color: #351c75; text-align: justify;">
<i>மறைந்த முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரான மாமனிதர்.பேராசிரியர் அழகையா துரைராஜாவினால் 1985 ஆம் <br />ஆண்டு சமர்ப்ப்பிக்கப்பட்ட திட்டம் இன்று 25 வருடங்களைத் தாண்டியும் <br />கோப்புக்குள்ளேயே
திட்டமாக இருந்து கொண்டிருக்க, 1999 ஆம் ஆண்டு முன்னாள் கல்வியமைச்சர்
றிச்சட் பத்திரணவினால் சம்ர்ப்பிக்கப்பட்ட உறுகுணுப் பலகலைக்கழகத்தின்
பொறியியல்ப்பீடம் இப்போது 10 வருடங்களைத் தாண்டி வெற்றிகரமனானதொரு
பொறியியல்ப்பீடமாக மொறட்டுவை,பேராதனைக்குப் பின் அணி வகுக்கத்
தொடங்கிவிட்டது. பொறியியல்ப் பீடத்தை தொடங்குவதில் இருந்த
வாதப்ப்ரிரதிவாதத்தை விடுத்து அதன் <br />அமைவிடம், கிளிநொச்சியிலா
யாழ்ப்பாணாத்திலா என்பது தொடர்பில் மேலும் காரசாரமான வாத்ப்பிரதிவாதங்கள்
இடம்பெற்றன.இது தொடர்பாக யாழ்மாவட்டப் பொறியியிலார்களுக்கிடையே பேராசிரியர்
இரட்ணஜீவன் ஹூல் தலைமியேற்று நடாத்திய கூட்டத்தில் பங்குபற்றும்
சந்தர்ப்பம் எனக்குக்கிடைத்தது.<br /> </i></div>
<div style="color: #351c75; text-align: justify;">
<i>மாணவர்,விரிவுரையாளர்களுக்கு
ஏற்படும் வசதியீனக்களை முதன்மையகாக வைத்து ஹூலின் யாழ்பாணத்தில்தான் பீடம்
அமைய வேண்டும் என்று விரும்புகிறார்(இப்போது ஹுல் நாட்டை விட்டு
வெளியேறியிருந்தாலும் அந்தக் கூட்டத்தில் இதுவே அலசப்பட்டது நீண்ட
நேரமாக).ஆனாலும் நீண்டகால அடிப்படையிலும் ஒட்டுமொத்த தமிழர் என்ற
அடிப்ப்டையிலும் நோக்கினால் பேராசிரியர் துரைராஜாவின் கனவுப்படி
கிளிநோச்சியில் ஆர்ம்பிப்பதனால் போரினால் மிகவும் சுக்குநூறாகிய
அந்தப்பிரதேசம் அபிவிருத்திடியடையக்கூடியாதாக இருக்கும்.எமது இரத்த உறவுகள்
மூன்று இலட்சம் பேர் உள்ளே இருந்தது தெரிந்திருந்தும் போருக்கு ஆணையிடச்
சொல்லிவிட்டு போர் முடிந்த பின்னும் அதைப்ப்ற்றி ஆராய்ந்து,அதன் சரி
பிழைகளைக் கதைத்து, அதன்மூலம் மிகச்சிறந்த அரசியல் அறிஞர்களாய் எங்களைக்
காட்டிகொள்வதை விடுத்து நாங்கள் எதையும் பெரிதாய் செய்துவிடவில்லை.
நான்காம் ஈழப் போரின் முழுவதையும் மூன்றாம் ஈழபோரின் பெரும்பகுதியையும்
தம் தோளிலே சிலுவையாய் சுமந்த மூன்று இலட்சம் யேசுபிரான்கள் அவர்கள்.
அவர்கள் பிரதேசத்தில் அந்தப்பல்கலை அமந்து,அது நாளை ஆயிரமாயிரம்
பொறியிலாளர்களை ஈன்று தரும் போது அந்த "அப்பாவி" சனங்களின் முகத்தில் வரும்
சந்தோசத்தைக் காணும் போது எம் முகத்தில் வரும் பாருங்கள் ஒரு பூரிப்பு
அதற்கு நிகராக ஒன்றும் இருக்காது இந்த உலகத்தில்.</i></div>
<div style="text-align: justify;">
<a href="http://vadaliyooraan.blogspot.com/2011/07/blog-post.html"><b style="color: black;">(வடலியூரான்; ஆவணி 2, 2011)</b></a><i style="color: #351c75;"><br /></i> </div>
<div style="text-align: justify;">
மேற்படி துரைராசா அவர்களின் பிரேரணை ஓரளவுக்காவது கைகூடி வருவதைத் தடுப்பதில் முன்னிற்பவர்கள் யாரென்று பார்த்தால், கல்வி மூலமாகத் தம்மை மேட்டிமைப்படுத்திக்கொண்ட கல்வியியலாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் போன்றோரே. நல்லவேளை, மேற்படி நண்பர் போன்ற பரந்துபட்ட பார்வையுள்ளவர் சிலரும், சமூகம் தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்கிற ஆர்வலர் சிலரும் இருப்பதாலேயே ஓரளவுக்காவது பாதிக்கப்பட்ட மக்கள், அடித்தட்டு மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குறைந்தபட்ச நியாயமாவது கிடைக்கிற சாத்தியக்கூறுகள் பற்றிய நம்பிக்கைகள் இன்றைக்கும் குறைவின்றி இருக்கின்றன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆயிரக்கணக்கான வருடங்களாக எம்மிடையே வாழ்கிற எமது சகோதரர்களையே முறையற்ற ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி வந்திருக்கிறோம். இந்தச் சமூக ஏற்றத்தாழ்வுகளை, ஒடுக்குமுறைகளை, வன்கொடுமைகளை இல்லாமலொழிக்கக்கூடிய வல்லமை மிகுந்த ஒரே ஆயுதம் கல்வி. சமூக மாற்றத்துக்காக மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட எமது இன விடுதலைக்காகவும் அனைவருக்குமான கல்வி அத்தியாவசியமாகிறது. இவ்வாறாக மனித நாகரிகத்தின் முக்கிய கூறான கல்வி சந்தைப் பொருளாவதையும், அது சரியான முறையில் கிடைக்கவேண்டியவர்களுக்குக் கிடைக்காமலிருப்பதையும் கண்டுகொள்ளாமல், கிடைக்கிற வரைக்கும் இலாபம் என சிந்திக்கும் திறணை, பகுத்தறிவைத் தன்னுள்ளே கொண்ட மனித குலம் சுரணையற்றிருப்பது மானுட குல வரலாற்றில் அழியாத கறை. </div>Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-10559349483032588032011-10-24T16:57:00.001-04:002011-10-30T21:42:55.403-04:00அடேலின் கைக்குட்டை-விமர்சனம் மற்றும் விசனம்<div style="text-align: justify;">
தமிழர் வகைதுறைவள நிலையத்தின் (தேடகம்) 20 ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தேடகம் மற்றும் தவநி கலையாற்றுக் குழு வழங்கிய அரங்கின் குரல் நிகழ்வு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (22-23/10/2011) அன்று Toronto Yorkwoods Library Theater அரங்கில் நடைபெற்றது. சனிக்கிழமை அமர்வுக்குச் சென்று வசந்தா டானியலின் நெறியாள்கையில் உருவான “உயிர்ப்பு” என்கிற நாட்டிய நாடகத்தையும், பா.அ.ஜயகரனின் நெறியாள்கையில் உருவான “அடேலின் கைக்குட்டை” என்கிற நாடகத்தையும் பார்க்கிற வாய்ப்புக் கிட்டியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="color: #20124d; text-align: justify;">
<u><b>“அடேலின் கைக்குட்டை”-விமர்சனம்</b></u></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அடேலின் கைக்குட்டை” என்கிற பெயரில் ஜூன் - ஓகஸ்ற் 2009 காலம் இதழிம் பா.அ.ஜயகரன் எழுதிய சிறுகதையின் நாடகவடிவத்தை பா.அ.ஜயகரன் மேடையேற்றியிருக்கிறார். மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் வந்த அந்தக் கதை போரின்போது பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறை பற்றியதாக அமைந்திருந்ததும், இலங்கையில் நடந்த கொடூரமான யுத்தத்தைத் தொடர்ந்த காலங்களில் எழுதப்பட்டதும் இக்கதையின் முக்கியத்துவத்தை அதிகரித்திருந்தன என்றே கூறலாம். விமர்சகர்/நண்பர் அருண்மொழிவர்மன் மூலம் கிடைத்த அறிமுகத்தூடாக காலம் இதழில் இக்கதையை ஏலவே வாசிக்கிற வாய்ப்பும் கிட்டியிருந்தது. கதையைக் கிட்டத்தட்ட அப்படியே அரங்கேற்றியிருந்தார்கள், (மூலச் சிறுகதையில் அடேலோடு சேர்ந்து ஆறு பெண்கள் ஆறு கைக்குட்டைகள், நாடகவடிவத்தில் அடேலதும், எலனோரதும் பெயர் பொறித்த ஒரே கைக்குட்டை) . நாடக அரங்கில் தரப்பட்ட கையேடு ஒன்றில் “அடேலின் கைக்குட்டை”க்கான அறிமுகம் பின்வருமாறு அமைந்திருந்தது:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“<i style="color: #660000;">போர்களின் போது பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறையை இவ் நாடகம் வெளிக்கொணர்கிறது. இதன் கதை மையம் 1940 களின் ஜாவா, இந்தோனீசியா. 1941-42 காலப்பகுதியில் ஜப்பான் டச்சுக்காரர்களிடமிருந்து ஜாவாவைக் கைப்பற்றுகிறது. இதன் பிற்பாடு ஜப்பானியர்களால் டச்சு, ஜாவா பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறையை இவ் நாடகம் பேசுகிறது.</i></div>
<div style="color: #660000; text-align: justify;">
<i><br /></i></div>
<div style="color: #660000; text-align: justify;">
<i>தற்போது கனடாவில் வசிக்கும் வயோதிபப் பெண் அடேலின் நினைவின் கோர்வையாக கதை சொல்லப்படுகின்றது. அடேலும் ஏனைய பெண்களும் பாலியல் தேவைகளுக்காய் பலாத்காரமாக ஜப்பானிய முகாம்களுக்கு கொண்டு வரப்படுகிறார்கள். இவர்களைப் பராமரிக்க டச்சு-ஜாவா கலப்புப் பெண்ணான எலனோர் கொண்டுவரப்படுகிறாள். டச்சுக்காரரின் பாலியல் பலாத்காரத்தால் பரம்பரை பரம்பரையாக பாலியல் தொழில் செய்யும் பின்னணி கொண்டவள் எலனோர். ஆண்களின் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இவ்விரு பெண்களின் மனப்போராட்டமாக இவ் நாடகம் நகர்கிறது.</i></div>
<div style="color: #660000; text-align: justify;">
<i><br /></i></div>
<div style="text-align: justify;">
<i style="color: #660000;">பாதிக்கப்பட்ட இப்பெண்கள் நீதி கேட்டு இன்றும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிய அரசோ இக்கொடுமைகளை மறைத்தும், மறுத்தும் வருகிறது. போர்களின் போது பெண்களின்மீது இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வேண்டி ஒலிக்கும் குரல்களில் ஒன்றாய் இவ் நாடகமும் ஓங்கி நிற்கும்</i>”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பா.அ.ஜயகரனின் முத்திரை நன்றாகவே பதிந்திருந்த இந்த நாடகத்தில் பங்குகொண்ட நடிகர்கள் சிறப்பாகத் தங்கள் பங்களிப்புகளை ஆற்றியிருந்தனர். ரொறன்ரோ நகரின் நவீன நாடகங்களின் அறிந்த முகங்களான சத்யா தில்லைநாதன், தர்ஷன் சிவகுருநாதன் போன்றவர்களின் பங்களிப்பு இருந்த நாடகத்தில் நடிகர்களின் பக்கம் பலமாகவே இருக்கும் என்பது ஐயமில்லை. அடேலாக நடித்த சத்யா தில்லைநாதனும் எலனோராக நடித்த அதீதாவும்தான் நாடகத்தின் தூண்கள். நாடகத்தில் அதிக காட்சிகளில் தோன்றிய ஆண் நடிகர்களின் முக்கிய வேலை வன்புணர்வதாகவே இருந்தபோதிலும் கிடைத்த சந்தர்ப்பங்களில் தேவையானளவு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். டச்சுப் பாதிரியாக நடித்த முத்துகிருஷ்ணனின் பங்கும் நிறைவாகவே இருந்தது. இருந்தபோதும் சத்யா தில்லைநாதன் மற்றும் அதீதா ஆகியவர்களின் முன்னால் மற்றவர்களின் நடிப்பு ‘சூரியனை விளக்கடித்துத் தேடுவது’ போன்றிருந்தது. நாடகத்தின் மிகப்பெரிய பலம் “போர்ச்சூழல்களிலெல்லாம் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைக் கேள்வியெழுப்பல்” என்கிற மைய நோக்கமே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாடகத்தின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இரண்டு காட்சிகள் இருக்கின்றன. ஒன்று, ‘புதிய பெண்கள்’ வேண்டுமென்பதால் மீண்டும் முகாமுக்கே திருப்பி அனுப்பப்படும் அடேல் (Use and Throw policy) அவர்களின் தேவாலயப் பாதிரியைச் சந்தித்து பாவமன்னிப்புக் கேட்கிறார். பாதிரியும் பாவமன்னிப்பு வழங்குகிறார். பின்னர் அடேல் தான் கன்னியாஸ்திரி ஆவதற்கு பாதிரியிடன் அனுமதி கேட்க, பாதிரி சொல்வார் “நீ கன்னியாஸ்திரி ஆவதில் ஆண்டவருக்கு விருப்பம் இல்லை போலிருக்கிறது” என்று. நிறுவனமயப்படுத்தப்பட்டுவிட்ட மதங்கள் மீதான அருமையான நக்கல் இந்தக் காட்சி. இன்னொரு காட்சியில் எலனோர் நிலத்தைச் சுத்தம் செய்வாள். அவள் சுத்தம் செய்கிற இடங்கள் கொஞ்ச நேரத்துக்கு கறுப்பாக மாறும். இது தற்செயலாக அரங்கின் ஒளி அமைப்பின் காரணமாக ஏற்பட்டதா, அல்லது நெறியாள்கையாளரான பா.அ.ஜயகரன் தெரிந்தே செய்த காட்சியமைப்பா தெரியவில்லை. சுத்தம்-கறுப்பு என்கிற இணை அமைந்த அந்தக் காட்சி நெறியாள்கையாளரால் தெரிந்தே அமைக்கப்பட்டிருக்குமாயின், நெறியாள்கை செய்த ப.அ.ஜயகரன் பாராட்டுக்குரியவரே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாடகத்தில் முரண்பாடான சில விடயங்களும் இருந்தன. நாடகத்தில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களும், வன்முறைக் காட்சிகளும்’ இருப்பதால் சிறுபிள்ளைகளை அரங்கின் கீழேயுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் விடுமாறு கேட்டுக்கொண்டார்கள். அதே போலவே வன்முறைக்காட்சிகள் நிறைய இருந்தன. ‘வேசி’ எனும் சொல் அடிக்கடி கையாளப்பட்டது. ஒரு தம்பதி நாடகத்தின் நடுவே வெளியேறினார்கள். வேறு சிலபேர் முகம் சுழித்தார்கள். பொதுமேடைகளில் இதை சிலர் ஏற்றுக்கொள்வது அவர்களைப் பொறுத்தவரை கடினமே. ஆனால் முக்கிய பிரச்சினை இதுவல்ல. கடுமையான வார்த்தைகள் மற்றும் வன்முறைக்காட்சிகள் நிறைந்த ஒரு நாடகத்தில், குழந்தைகளை அரங்கை விட்டு அப்புறப்படுத்துமாறு வேண்டுகோளோடு ஆரம்பித்த நாடகத்தில், நான்கு குழந்தைகள் நடித்திருந்தார்கள் என்பதுதான் பிரச்சினை. மேலும், அடேலை ஜப்பானிய கேணல் ஒருவர், சிப்பாய் ஒருவர், வைத்தியர் ஒருவர் வன்புணர்வதான காட்சிகள் இருந்தன. திரைமறைவுக்கு அடேலை அவர்கள் இழுத்துச் செல்வதும், அங்கிருந்தான குரல்களின் மூலமாக பார்வையாளருக்கு என்ன நடக்கிறது என்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தபோதும் மேற்படி காட்சிகளில் ஒன்றிரண்டைக் குறைத்திருக்கலாம் என்பது நாடகத்தின் பின்னர் தனியாகப் பேசிய நண்பர்கள் சிலரின் அபிப்பிராயமாக இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பா.அ.ஜயகரனின் “அடேலின் கைக்குட்டை” நாடகத்தின் கருப்பொருள் மிகவும் முக்கியமானது, அதுவும் இன்றைய காலகட்டத்தில். அவ்வகையில் கனேடிய தமிழ் மேடைநாடகச் சூழலில் இந்த நாடகத்துக்கும் ஒரு முக்கிய இடம் இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="color: #20124d; text-align: justify;">
<u><b>“அடேலின் கைக்குட்டை”-விசனம்</b></u></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாடகம் மற்றும் சிறுகதையின் கருப்பொருளில் ஒத்துப்போனாலும், கதைக் களனான ஜாவாத் தீவு மற்றும் ஜப்பானிய-டச்சு யுத்தகாலத்துடன் ஒன்றிப்போக முடியவில்லை. காரணம், நான் பிறந்த நாட்டில் என்னுடைய இனத்தைச் சேர்ந்த பெண்கள் மீது இந்த வன்முறை இன்றைக்கும் பாவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. முன்பு வன்புணர்வு செய்தார்கள், இன்றைக்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்துமாறு வற்புறுத்துகை செய்கிறார்கள். இப்படியிருக்கையில், ஓரளவாவது கருத்துச் சுதந்திரம் இருக்கிற கனேடியமண்ணில் தனது படைப்புக்களை வெளியில் கொண்டுவரும் ஒவ்வொரு படைப்பாளியும் அங்கீகரிக்கப்பட்ட அடக்குமுறையான அரச வன்முறைக்கு எதிராக உரத்துக் குரலெழுப்பவேண்டும். அதுவும் தனது கொள்கைகள் தொடர்பில் நேர்மையாகச் செயற்படுபவர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாலும், விமர்சகர்களாலும் ஒருங்கே நோக்கப்படுக் ப.அ.ஜயகரன் தான் எழுதிய சிறுகதையை நாடகமாக்கும்போதாவது கதைக் களனை மாற்றியிருக்கலாம் என்பது என்னுடைய அபிப்பிராயம். அல்லது ஆகக்குறைந்தது மண்டபத்தில் தந்த துண்டுபிரசுரத்தில் இற்றைவரை ஜாவாப் பெண்கள் மீதான வன்முறைகளை ஜப்பான் அரசு மறைத்தும் மறுத்தும் வருவதாகச் சொன்ன பா.அ.ஜயகரன், தேடகம், தவநி கலையாற்றுக் குழு இவர்கள் யாருக்கும் அந்தத் துண்டுப்பிரசுரத்திலாவது இலங்கை அரசைக் கண்டிக்கிற எண்ணம் இல்லாமலிருந்தது வருத்தத்துக்குரியது. பக்கத்து வீட்டு நிலவரம் தெரிகிறது, பக்கத்து ஊர் நிலவரம் தெரிகிறது, பக்கத்து நாட்டு நிலவரம் தெரிகிறது, ஏன் பக்கத்துக் கிரகத்து நிலவரம்கூடத் தெரிகிறது. ஆனால், வீட்டு முற்றம் எங்கள் கண்களுக்குத் தெரிவதேயில்லை. சிலவேளை சி.கா. செந்தில்வேல் போன்ற பொய்யுரைஞர்கள் யாராவது ‘புலிகளும் இப்படிப் பாலியல் வதை முகாம்கள் வைத்திருந்தார்கள்’ என்று புழுகியிருந்தால் இந்த நாடகத்தின் களம் இலங்கைத் தீவாக இருந்திருக்குமோ? வேறுபாடுகளை மறவுங்கள் என்று நான் கேட்கவில்லை. பழைய தவறுகளைத் திருத்தவேண்டாம் என்று தடுக்கவில்லை. ஆனால், மாற்றரசியல் என்றால் தனியே புலித்தூற்றல் மட்டுமல்ல, அங்கீகரிக்கப்பட்ட வன்முறையான அரசாங்க வன்முறைகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்டிருக்கிற மக்களின் சார்பாகவும் குரலை உயர்த்தவேண்டிய கடமை எமக்கிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது. இது வெறுமே ஒரு நாடக உத்தி, நாம் எம் பெண்களின் துயரையும் சேர்த்தே சொன்னோம் என்கிற கண் துடைப்பெல்லாம் வேண்டாம். இலங்கைத் தீவில் பிறந்த ஒடுக்கப்பட்ட ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு கலைஞனுக்கான அடிப்படை நேர்மையிலிருந்து பா.அ.ஜயகரன் கொஞ்சம் வழுவிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.<br />
<br />
<span style="color: red;">பிற்சேர்க்கை: சி.க.செந்தில்வேலை ‘பொய்யுரைஞர்’ என்று விளித்தது மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் பாவித்த</span><span style="color: red;"> பிழையான சொல்லாடல் என்பதாக நண்பர் ஒருவரின் சுட்டிக்காட்டலின் உணர்கிறேன். அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இணையத்தில் விடுத்த கருத்தைத் திரும்ப வாங்குவதும் மறைப்பதும் இலகு, ஆனால் நேர்மையில்லை என்பதை உணர்ந்திருப்பதால் பதிவில் மாற்றம் செய்யவில்லை</span><br />
<span style="color: red;"><br />நவம்பர் 30, 2011</span> </div>Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-2669548135856815862011-10-15T20:34:00.003-04:002011-10-15T20:35:58.545-04:00எனக்குச் சிவப்பு நிறம் பிடித்திருக்கிறதுஉந்தையும் எந்தையும் ஒரு வயிற்றுச் சோதரர்<br />
உன் தாயும் என் தாயும் தோழியர்<br />
நீயும் நானும் விளையாடித்திரிந்த செம்பாட்டுப் புழுதி<br />
என்றைக்கும் புட்டத்தில் ஒட்டியிருக்கிறது<br />
ஐந்து ரூபாய் ‘ஐஸ் பழம்’ ஒன்று இருவர் நாவிலுங்கரைந்திருக்கிறது<br />
முழங்கால் தழும்பினுள்ளே உன் எச்சில் ஒளிந்திருக்கிறது<br />
உனக்குச் சின்னதாய்ப்போன கால்சட்டை ‘சிப்’<br />
தந்த வடு என் சர்க்கரையில் உறுத்திக்கொண்டே இருக்கிறது<br />
<br />
தள்ளுவண்டியில் என்னைத் தள்ளிக்கொண்டும்<br />
எனக்குப் போட்டியாக வீரிட்டு அழுதுகொண்டும்<br />
எனக்கு முதலே உனக்கு வந்துவிட்ட பல்லைக் காட்டிக்கொண்டும்<br />
என் கையிலிருந்த பொம்மையைப் பிடுங்கியபடியும்<br />
உன்வீட்டு பொம்மையை எனக்குத் தந்தபடியும்<br />
என் தாயின் மார்பில் முகம் புதைத்துக்கொண்டும்<br />
என்னை முத்தமிட்டுக்கொண்டும்<br />
ஒரு யோகியின் முனைப்புடன் ’படலத்துக்கு’ ‘டிசைன்’ வெட்டிக்கொண்டும்<br />
வெள்ளைச் சட்டையில் பள்ளிக்கூடத்துக்கு வழிநடத்திக்கொண்டும்<br />
சைக்கிள் ‘கரியலில்’ என்னைச் சுமந்துகொண்டும்<br />
என் சைக்கிள் பாரில் இருந்து டபிள்ஸ் போட்டுக்கொண்டும்<br />
உன் பதின்மத்து துணையருகில் வெட்கச் சிரிப்போடும்<br />
<br />
என் ஞாபக அடுக்குகளில்<br />
<br />
அம்மையாய்<br />
அப்பனாய்<br />
பிள்ளையாய்<br />
சகோதரமாய்<br />
தோழமையாய்<br />
இனிய எதிரியாய்<br />
காதலாய்<br />
குருவாய்<br />
எல்லாமுமாய்<br />
நீ இருக்கிறாய்.<br />
<br />
ஆனால் நாயே... உன்னை நான் கொல்லவேண்டும்<br />
<br />
ஏனென்றால்,<br />
<br />
உனக்கு இளஞ்சிவப்பு நிறம் பிடித்திருக்கிறதுAnonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-86423773402014271002011-01-29T15:43:00.000-05:002011-01-29T15:43:28.787-05:00சதீஸ் கொலை/மரணம் தொடர்பில்... (இற்றைப்படுத்தப்பட்டது)<div id="blog-content"><div class="paragraph editable-text" style="text-align: justify;">முன்னைய <a href="http://www.kiruthikan.com/4/post/2011/01/6.html" target="_blank">பத்தியில்</a> சதீஸ் கொலை செய்யப்பட்டார் என ஆரம்பகட்டத்தில் இரண்டு மூன்று இணையத்தளங்களில் வந்த செய்திகளின் அடிப்படையிலேயே எழுதினேன். யாழ் இணையத்தில் ஈழநாதம் மற்றும் தமிழ்த்தாய் ஆகிய இணையத்தளங்களை மேற்கோள்காட்டி இதைப்பற்றி எழுதியிருந்தார்கள். தமிழ்த்தாய் இணையத்தளத்தில் செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது. </div><div><div style="text-align: left;"><a href=""><img alt="Picture" class="galleryImageBorder" src="http://www.kiruthikan.com/uploads/5/1/7/4/5174307/6230957.png?1296333531" style="border-width: 1px; margin: 0pt 10px 0pt 0pt; padding: 3px;" /></a></div></div><div><div style="text-align: left;"><a href=""><img alt="Picture" class="galleryImageBorder" src="http://www.kiruthikan.com/uploads/5/1/7/4/5174307/9103811.png?1296333671" style="border-width: 1px; margin: 0pt 10px 0pt 0pt; padding: 3px;" /></a></div></div><div class="paragraph editable-text" style="text-align: left;">ஈழநாதம் செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது:<span></span></div><div><div style="text-align: left;"><a href=""><img alt="Picture" class="galleryImageBorder" src="http://www.kiruthikan.com/uploads/5/1/7/4/5174307/4883831.png?1296333627" style="border-width: 1px; margin: 0pt; padding: 3px;" /></a></div></div><div class="paragraph editable-text" style="text-align: justify;">ஆனால் இப்போது உதயன் வெளிவிட்டிருக்கிற செய்தி இந்த இரு செய்திகளுக்கும் முற்றிலும் மாறானதாக இருக்கிறது. <a href="http://onlineuthayan.com/News_More.php?id=232#" target="_blank">சதீசின் சாவு ஒரு வீதி விபத்தே என்று சட்ட மருத்துவப் பரிசோதனைகளில் தெரியவந்தது </a>என்று உதயன் இணையப்பதிப்பில் செய்திவெளிவிடப்பட்டிருக்கிறது. குழப்பங்களின் எல்லையில் நான் நின்றுகொண்டிருக்கிறேன் இப்போது என்பதை மட்டுமே உறுதிப்படுத்தமுடிகிறது என்னால்.<br />
<br />
<span>விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, சதீஸ் எப்படி இறந்தார் என்பதை விட, அவர் இறப்பு தொடர்பில் இருக்கிற சில கருத்துக்கள் பிழையென்ற என்னுடைய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதே போல் ஆனைவிழுந்தானுக்கும் வல்லிபுரத்துக்கும் இடைப்பட்ட ஆள்நடமாட்டமற்ற இடத்தில் இப்படியான மோசமான விபத்துக்கான சாத்தியங்கள் பற்றிய கேள்விகளும் மனதைவிட்டு அகல மறுக்கின்றன. அவரது மரணத்துக்கான காரணங்கள் தொடர்பில் தவறாக நான் வாசிப்போரை வழிநடத்தியிருந்தால் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். </span></div></div>Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-15393523567490038212011-01-29T10:41:00.000-05:002011-01-29T10:41:05.761-05:00பிணம்தின்னும் சாத்திரங்கள்<div id="blog-content"><div class="paragraph editable-text" style="text-align: justify;">தெரிந்த முகங்களின் அகால மரணங்கள் இலகுவில் யாரையும் உலுக்குவதுண்டு. இந்த வருடத்தின் முதல் நாளிலும், இன்றைக்கும் எனக்குத் தெரிந்த முகங்களின் மரணங்கள் என்னை உலுக்கித்தான் இருக்கின்றன. முதல் மரணம் தவராசா கேதீஸ்வரன் என்கிற என்னுடைய வயதொத்த, என்னுடைய பாடசாலையில் படித்த (வணிகப்பிரிவோ, கலைப்பிரிவோ சரியாகத் தெரியாது), என்னுடன் பாடசாலை மாணவர் தலைவர்களில் ஒருவனாகக் கடமையாற்றிய இளைஞனுடையது. இவர் டிசம்பர் 31, 2010 இரவு கொல்லப்பட்டார். இரண்டாவது இன்று சனிக்கிழமை (சனவரி 29, 2011) கொல்லப்பட்ட இராசரத்தினம் சதீஸ் என்பவருடையது. இவரும் நான் படித்த பாடசாலையில் என்னைவிட இரண்டோ, மூன்று வகுப்புகளுக்கு முன்னால் படித்தவர். விளையாட்டுப்போட்டிகளில் என்னுடைய இல்லத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் கொல்லப்பட்டதுக்காகச் சொல்லப்படுகிற காரணங்கள் மிகவிசித்திரமாக எனக்குத் தோன்றுகின்றன.<span> இரண்டு காரணங்களும் முரண்களின் உச்சமாகப்படுகின்றன. ‘போரின் பக்கவிளைவுகள்’ என்று சொல்கிற அறிவுசீவிகள் மீது கோபத்தை ஏற்படுத்துகின்றன.</span><span></span><br />
<span></span></div><div> </div><div class="paragraph editable-text" style="text-align: justify;">முதல் கொலை கேதீஸ்வரனுடையது. இந்தவருடம் பிறந்ததும் Face Book இணைப்புகள் மூலமாகக் கிடைத்த முதல் செய்தி இது. குடத்தனை பொற்பதிப் பகுதியில் வைத்துக் கேதீஸ் கொல்லப்பட்டான். ‘கேதீஸ்’ என்னுடைய உயிர் நண்பன் என்றெல்லாம் சொல்லி ஒரு பச்சாதாப நாடகம் ஒன்றை இங்கே அரங்கேற்ற நான் முயலவில்லை. ஆனாலும், ஓரளவுக்காவது கேதீசை எனக்குத் தெரிந்திருந்தது. கேதீஸ் எங்களுடைய பாடசாலையில் ஆறாம் வகுப்புமுதல் படித்தவனில்லை. அவன் எந்தவகுப்பில் பாடசாலைக்கு வந்தான் என்பதுகூட சரியாக எனக்குத் தெரியாது. என நண்பர்கட்கும் தெரியாது. ஆனால், இடையில் வந்தவன் என்பது தெரியும். அது நன்றாகப் ஞாபகமிருத்தலுக்கான காரணங்களும் உண்டு. அவற்றில், ’கேதீஸ் உயர்தரம் படிக்கிறபோது மாணவர் தலைவனாகத் (Prefect) தெரிவுசெய்யப்பட்டபோது அவனுக்கெதிரான ஒரு எதிர்ப்பலை இருந்தது’ என்கிற காரணம்தான் மிகப்பெரியது. ஆறாம் வகுப்புமுதல் படிக்கிற நிறையப்பேர் இருக்கத்தக்கதாக இடையில் வந்தவன் எப்படி மாணவர் தலைவனாகலாம் என்று நாங்கள் எங்களுக்குள் குசுகுசுத்ததுண்டு. இப்படியான மாணவர் தலைவர்களின் தலைவனாக இருந்தவன் இப்படியான அரசியல்கள் இல்லாமல் இருந்தகாரணத்தால் அந்த எதிர்ப்பு குசுகுசுப்போடே அடங்கிப்போனது. (அவனுக்கெதிராகவும் நாங்கள் கிளர்ந்த கதை வேறு). கேதீஸ் விஞ்ஞானம் அல்லாத பிரிவில் படித்ததுதான் அவனுக்கிருந்த ஒரே தகுதி என்று நக்கல்வேறு செய்வோம். விஞ்ஞானம் படித்த எங்கள் விண்ணாணம் தெரியவந்தபோது எந்த மூஞ்சையை வைத்து நக்கல் செய்தீர்கள் என்று அவன் கேட்டிருக்கலாம், கேட்கவில்லை. இப்போது அவன்கூட விஞ்ஞானம்தான் படித்தானோ என்கிற மாதிரி ஒரு சந்தேகம் வந்து தொலைக்கிறது. ஏன் சொல்கிறேன் என்றால், கேதீசுக்கும் எனக்குமான நட்பின் நெருக்கம், இவ்வளவுதான். <br />
<br />
<span>கேதீஸ் கொலை பற்றிப் பலபேர் பல கதைகள் சொல்கிறார்கள். அவன் முன்னைநாள் போராளி என்கிறார்கள் சிலர். இல்லையில்லை அவனது அண்ணனே போராளி என்கிறார்கள் வேறு சிலர். இவன் ஒரு சூழல் பாதுகாப்புப் போராளி என்கிறார்கள் இன்னும் சிலர். ‘இலங்கையில இருந்துகொண்டு கையில கார்த்திகைப் பூவோட படம் போடுறது கொழுப்புத்தானே’ என்கிறார்கள் மற்றவர்கள். குழப்பமான இந்தக் கோணங்களில் இருந்து கேதீசை ஏன் கொன்றார்கள் என்கிற முடிவை என்னால் எட்டமுடியவில்லை. தன்னை ஏன் கொன்றார்கள் என்று கேதீசுக்குத் தெரிந்திருக்குமா, அல்லது கேதீசை ஏன் கொல்கிறோம் என்பது கொலையாளிகளுக்குத் தெரிந்திருக்குமா என்பதுகூட சந்தேகமே. </span><br />
<br />
<span></span><span>அவன் முன்னைநாள் போராளி அல்லது அவனது அண்ணன் முன்னைநாள் போராளி என்று வைத்துக்கொள்வோம். </span>புனர்வாழ்வுக்கென்றுதான் அப்படியான போராளிகளைத் திருப்பியனுப்பி இருக்கிறார்கள், கொடுஞ்சிறைகளிலிருந்து. இதுதான் அரசாங்கமும், அறிவுசீவிகளும் முன்வைக்கிற வாதம். அப்படியானால் புனர்வாழ்வுக்காகத் திருப்பி அனுப்பப்பட்ட ஒருவனோ/ அவன் சார்ந்தவர்களோ ஏன் கொல்லப்பட்டார்கள்? குழுவாகக் கொன்றால் பிரச்சினை என்று தனித்தனியாகக் கொல்கிற திட்டமா? அல்லது உண்மையிலேயே புனர்வாழ்வுக்கு என்று வெளியே வந்துவிட்டு மீண்டும் பழைய போராளிக்குணங்களை வெளிக்காட்டினார்கள் என்கிற காரணமா? அப்படிப் போராளிக் குணங்களை வெளிக்காட்டினார்கள் என்றால் நாங்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாக இது தொடர்பில் பேசவேண்டி வரும். புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான போராளிகள் மரணத்தின் எல்லைவரை போய் மீண்டவர்கள். அரசாங்கத்துக்கெதிரான சின்ன அசைவும் அவர்களுக்கு உடனடியாகத் தரக்கூடிய பரிசு பற்றித் தெளிந்தவர்கள். இதைவிடக் கேதீஸ் போல அண்மையில் மணமான ஒரு இளைஞனுக்கு வாழ்க்க தந்திருக்ககூடிய சுகமான புதிய பொறுப்புகள் பற்றிய அக்கறையும் இருந்திருக்கும். அவன் மீண்டும் ஒரு வன்முறைக்கிளர்ச்சியை நோக்கிப் போகக்கூடிய சாத்தியக்கூறுகள் குறைவு. அப்படி சாத்தியக்கூறுகள் குறைந்த ஒருவன் அந்த ஆபத்தான பாதையைத் தேர்ந்தெடுக்கிறான் என்று ஒரு விவாதத்துக்கு வைத்துக்கொண்டோமென்றால், அவன் எந்தளவுக்கு தூண்டப்பட்டிருப்பான் என்கிற கேள்வி வரும். அந்த தூண்டலுக்கான காரணம் என்ன அல்லது யார் என்கிற கேள்விகள் வரும். ’கார்த்திகைப் பூவோடு நின்று படம்போடும் கொழுப்பு’ எப்படி வந்தது என்ற கேள்வி வரும். இந்தக் கேள்விகளுக்கான பதில்களிலிருந்து பிரபாகரனை ஒழித்துவிட்டோம் என்று மார்தட்டிக்கொண்டே இலங்கை அரசு தான் சொன்னபடி தமிழ்மக்களுக்கான எந்தவொரு அடிப்படை உரிமையயும் கொடுக்கவில்லை என்பதோடு, இருந்த உரிமைகளையும் பறித்துக்கொண்டிருக்கிறது என்கிற தெளிவான முடிவுக்குத்தான் வரமுடியும். <br />
<br />
<span>இல்லாவிட்டால் செய்திஊடகங்கள் சொல்கிறபடி கேதீஸ் ஒரு சூழல் பாதுகாப்புப் போராளி என்றே வைத்துக்கொள்வோம். கேதீஸ் மணற்தலைப் பகுதியில் நடக்கிற</span> சட்டபூர்வமற்ற மணல் வியாபாரம் பற்றி அம்பலப்படுத்தியிருக்கிறான் வெறும் Face Book படங்களின் மூலம். இதற்காக கேதீஸ் கொல்லப்பட்டதாக வைத்துக்கொண்டால், இந்தக் கொலையயும் ‘போரின் பக்க விளைவு’ என்று சொல்கிற அறிவுசீவிகளைப் பார்த்து நான் சொல்லிக்கொள்வது ‘just go and fuck yourselves'. மணல் அள்ளப்படுதலும் கடல் உள்ளேறலும் இனப்பிரச்சினை அல்ல நண்பர்களே... அது ஒரு தேசத்தின் பிரச்சினை. தன்னை சிறிலங்காவின் பெருமைமிகு பிள்ளை என்று சொல்லிக்கொள்கிற இலங்கைப்பிரசைகள்கூட கவனிக்கவேண்டிய பிரச்சினை. வடமராட்சி கிழக்கில் வாழ்கிற சனங்கள் கால காலமாக அனுபவிக்கிற பெரிய பிரச்சினை. தமிழீழம் என்கிற கோரிக்கையை ஆதரிக்கிறவர்களுஞ்சரி, எதிர்க்கிறவர்களுஞ்சரி ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டிய பிரச்சினை. சுனாமியின் பின் அழுகிமிதந்துவந்த பிணங்களைச் சுமந்து சுமந்து சோர்ந்து போன மக்களின் வாழ்வு சம்பந்தமான பிரச்சினை. அந்தப் பிரச்சினையை வெளிக்கொணர்ந்த குற்றத்துக்காகத்தான் கேதீஸ்வரன் கொல்லப்பட்டான் எனில், நண்பர்களே கேளுங்கள், நாளைக்கே ஆயுதங்கள் தவிர்த்து யாவுமே செயலிழந்து போகும் அந்த நாட்டில். <br />
<br />
<span>இரண்டாவது கொலை சதீஸ் அண்ணாவுடையது. இந்த சதீசும் எங்களின் பாடசாலையிலேயே படித்தவர். சதீசை ஞாபகத்தில் வைத்திருக்கப் பெரிய காரணம் சதீசின் பென்னாம்பெரிய உடல்வாகு. விளையாட்டுப்போட்டிகளில் சதீசின் அணிநடை பிரபலம். Left-Right என்று அவர் நடக்கும்போது பின்னிருந்து பார்த்து அவரது புட்டத்துத் தசைகளின் அசைவை நாங்கள் கிண்டல் செய்வதுண்டு. பின்னர் அணிநடையை எங்களுக்குப் பழக்குகிறேன் என்று சொல்லி இவர் கொன்றை மரத்தின் கீழ்வைத்து அதே கொன்றை மரத்துக் கம்புகளால் அடித்தும் இருக்கிறார். அடித்ததும் வருகிற கோபம் ‘லெப்பைலெப்’ என்ரு சொல்லி இவர் எங்களுக்குப் புட்டத்தைக்காட்டியபடி அணிநடை செய்துகாட்டும்போது போய்விடும். இவர், பருத்தித்துறை ஆனைவிழுந்தான் பகுதியில் வைத்து ‘இனம்தெரியாதோரால்’ சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். காலையில் இந்தக் கொலை நடந்து, மதியம்வரை சடலம் வீதியிலேயே கிடந்ததாக ‘<a href="http://www.yarl.com/forum3/index.php?showtopic=81074" target="_blank">யாழ்</a>’ இணையத்தில் படித்தேன். </span><br />
<br />
<span>சதீஸ் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்குக்குப் பொறுப்பாளராக இருந்ததாகவும், சில நாட்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்பால் விமர்சனங்களை இவர் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. யாழ் இணையத்தளத்தில் இவர் ‘கொல்லப்பட்ட பொற்பதிப் பொதுமகன்’ ஒருவரின் குடும்பத்துக்கு </span>கொலையாளிகளை அடையாளம் காட்டுவேன் என்று உறுதியளித்ததாகவும் அதன்காரணமாகவே இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். சிலர் ‘ஆத்தியடி குத்தி’ எனப்படும் ஒரு நபரைப் பற்றியும் சொல்கிறார்கள். கேதீஸ் கொலைபோலவே சதீஸ் கொலைக்கும் சரியான(??!!) காரணங்கள் யாருக்குமே தெரியவில்லையாம். கொலைக்கு என்ன ‘சரியான காரணங்கள்’ இருக்கமுடியும். யாழ் இணையத்தளத்தில் ஒருவர் தெரிவித்திருந்தது போலவே ‘வேட்டை நாயொன்று செத்தது’ என்று சும்மா போவதும் சாத்தியமில்லை. ஒன்றையும் பெரிதாக நாங்கள் பிடுங்கிவிடப்போவதில்லை என்றபோதிலும் ஆகக்குறைந்தது இந்தக்கொலைகள் தொடர்பில் எம்மாலான பதிவுகளை விட்டுச்செல்லல் அவசியமாகிறது. கேதீஸ், சதீஸ் ஆகியோரின் அரசியல் பின்னணிகளைத் தாண்டி இரு இளைஞர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார்கள், அதுவும் யாரால், சொந்தச் சகோதரர்களால் என்கிற கோணத்தில் இதைப் பார்த்தாகவேண்டும். <span>’சகோதரப் படுகொலையாளி’ என்று பிரபாகரனைச் சுட்டிய அறிவுள்ளங்களே, தயவு செய்து இந்தக் கொலைகளை ‘போரின் பின் விளைவுகள்’ என்று நியாயப்படுத்தாதீர்கள். ‘இலக்கிய மாநாடு, ஒன்று கூடல், தமிழ் வளர்ப்பு’ என்றெல்லாம் குதிக்கும் கருத்தியல்களைக் கரைத்துக்குடித்து கொட்டாவி மட்டுமல்ல, குசுவும் விட்டு ஓய்ந்து போய்விட்ட புத்திமான்களே, இவை போரின் பக்கவிளைவுகள் என்றால், 70 களிலும் 80 களிலும் எங்கள் இளைஞர்கள் செய்தவை யாவுமே பல்லாண்டுகால அடக்குமுறை மற்றும் கையாலாகாத அரசியல் தலமைகளின் வயிற்றுப்போக்கு ஆகியவற்றின் பக்கவிளைவுகள்தாம். </span><br />
<br />
<span>என்னுடைய சகோதரனை ஆயுதம் தூக்கி செத்துப்போ என்று சொல்கிற தார்மீக உரிமை எனக்கில்லை. ஆனால் அவன் படுகிற அவலங்களை மறைத்து அவன் சுபீட்சமாக இருக்கிறான் என்று பொய்சொல்கிற திறமையும் எனக்கில்லை. ‘இவங்கள் செய்யிற அநியாயங்களைப் பாத்துக்கொண்டு சும்மாயிருக்கேலுமோ?’ என்று அவன் கேட்கிற கேள்விக்கு மௌனித்துப்போகிறேன். </span><br />
<br />
<span>பி.கு:</span><br />
<ol><li>கேதீஸ் கொல்லப்பட்டதன் பின்னான அரசியலைத் தவிர்த்து அவனது மரணச்செய்தியை எங்கள் பாடசாலை வட்டத்துக்குள் பகிராமல் பதுங்கியிருந்த கையாலாகாத்தனத்துக்கு வெட்கப்படுகிறேன். வெற்றிபெற்றவனை மட்டுமே உரிமை கோருகிறோம். </li>
<li>சதீஸ் கொலைய ‘ஒட்டுக்குழு உறுப்பினன் கொலை’ என்று மட்டும் பார்க்கிற மனோபாவத்தை வளர்த்துவிட்ட தலைமைகள், ஊடகங்கள் யாவரும் நாசமாய்ப் போகட்டும். </li>
</ol></div></div><div id="blog-post-separator"> </div>Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-82952099106046683242011-01-15T12:45:00.000-05:002011-01-15T12:45:33.327-05:00செருப்பாய் இருப்போம்...<div id="blog-content"><div class="paragraph editable-text" style="text-align: justify;"><span style="color: #660000; font-weight: bold; text-decoration: underline;">மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதிய வசனம் மற்றும் இன்னபிற சினிமாச் சர்ச்சைகளை முன்வைத்து.</span><br />
<br />
<span>'த்ரிஷாவின் செருப்பாக நடிக்கவும் தயார்’ என்கிறமாதிரி ஒரு எள்ளலை புலம்பெயர் தமிழர்களை நோக்கி அள்ளிவிட்டிருக்கிறார் அறிவுசீவி கமல்ஹாசன். Pre DVD Rip ல் ஒழுங்கான சத்தம், காட்சிகள் இல்லாமல் பார்த்த எனக்கே கோபம் பொத்துக்கொண்டுவந்தபோது, அறிவுசீவி கமலின் படங்களுக்கு முன்னோட்டம் பின்னோட்டம் எல்லாம் எழுதி முதல்நாள் முதல்காட்சி பார்த்தவர்கள் வயறெரிந்து சாபம் போடுவதில் பிழை ஒன்றும் இல்லைத்தான். ஆனால் இந்தக் கோபம் எதனடிப்படையில் வருகிறது என்று ஆராய்வோமானால் சில உண்மைகள் தெரியும். எந்தளவுக்கு தமிழக சினிமாவால், தமிழகத் தொலைக்காட்சிகளால் பீடிக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியவரும். இந்தக் கோபம் சிலவேளை நடிகை ஒருவருக்கு செருப்பாக நடிக்கிறேன் என்று சொல்லாமல் ‘விஜய்க்கு செருப்பாக நடிக்கத் தயார்’ ‘ரஜினிக்கு பின்பக்கம் கழுவ ரெடி’ ஏன் ‘அறிவுசீவிக்கு கொம்பு நீவிவிடுவது பாக்கியம்’ என்கிற ரீதியில் வசனம் எழுதப்பட்டிருந்தால் விசிலடித்துப் பாராட்டியும் இருப்போம். </span><br />
<br />
<span>இந்தச் சர்ச்சையின் அடிவேர் இரண்டு விடயங்களில் இருக்கிறது. ஒன்று கமல்ஹாசனின் அரசியல் தேர்வு. இரண்டாவது, இவ்வாறான எள்ளல்கள் மற்றும் ஈழத்தமிழர்களைத் தங்களின் ஒரு சந்தையாக மட்டும் பார்க்கக்கூடிய இந்தத் தமிழகச் சினிமாக்காரர்களின் மனநிலைக்கு எதிர் அரசியல் பேசக்கூடியளவுக்கு எமக்கான சினிமா எங்களிடம் இல்லாமை. இந்த இரண்டு விடயங்களின் அடிப்படையில் இந்தச் சர்ச்சையை அணுகலாம் என நினைக்கிறேன். </span><span></span><br />
<span></span></div><div> </div><span class="imgPusher" style="float: right; height: 0px;"></span><span style="clear: right; float: right; margin-top: 1px; position: relative; z-index: 10;"><a href="" title="Links active once published"><img alt="Picture" class="galleryImageBorder" src="http://www.weebly.com/uploads/5/1/7/4/5174307/3487358.jpg" style="border-width: 1px; margin: 5px 0px 10px 10px; padding: 3px;" /></a></span><div class="paragraph editable-text" style="display: block; text-align: justify;">கமல்ஹாசனிடம் இருந்துவந்த மேற்படி எள்ளல் கமலின் சமீபத்திய அரசியல் ஈடுபாடுகளைப் பார்த்து வருபவர்களுக்கு எக்காரணம் கொண்டும் பெரிய அதிர்ச்சியாக இருக்கப்போவதில்லை. அவரது ஒஹனேக்கல் பேச்சில் எனக்கு எல்லாரும் வேண்டும். ரஜனியும் வேண்டும், கும்ப்ளேவும் வேண்டும். சத்தியராஜும் வேண்டும். வைரமுத்துவும் வேண்டும் என்றும், இது நூறு கோடி மக்களின் பிரச்சினை என்றும் அவர் சொன்னதுதான் கிட்டத்தட்ட பொதுமேடை ஒன்றில் அவரது அரசியல் பூனை வெளிவந்த முதல் சந்தர்ப்பம் என்று நினைக்கிறேன். அதே போலவே, இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக நடிகர்கள் நடத்திய உண்ணாவிரதக் கண்காட்சியிலும் ‘ இது நான் தமிழன் என்பதால் பேசுவதாக என்னைக் குறுகியவட்டத்துக்குள் அடைத்துவிட வேண்டாம்’ என்ற கருத்தையும் உதிர்த்தார். இடையே ஹிட்லருக்கு எதிரான ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு அதன்பிறகு சிலவிடயங்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரிச் சொன்னார். ‘அகதிகளாக அவர்களை ஏற்கிற பெருந்தன்மை எமக்கிருந்தாலும் அவர்களுக்கென்று ஒரு தன்மானம் இருக்கிறது’ போன்ற கருத்துகள் மூலம் அவர் சொல்லவந்தது,‘நீ வேறு நாங்கள் வேறு’ என்ற ஒன்றைத்தான். அவரது ‘தமிழன்-குறுகியவட்டம்’ என்கிற பார்வை அவருக்குள்ளே அவர் ஒளித்து வைத்திருக்கக்கூடிய இந்தியத் தேசியவாத அரசியலின் அபிமானம் அல்லது தமிழ்த்தேசியவாத அரசியலின்மீதான வெறுப்பின் குறியீடே. இதேதான் அவரது பெரும் செல்வாக்கில் உருவாகிய ‘உன்னைப் போல் ஒருவன்’ படம்கூட எடுத்துச்சொன்னது. ’உன்னைப் போல் ஒருவன்’ என்ற படத்தின் மூலக்கதை வேறொருவருடையது, அதை ‘சக்ரி டோலட்டி’ என்கிற இயக்குனர் இயக்கினார், இரா. முருகன் வசனங்களை எழுதினார். இவ்வாறிருக்கையில் அது எப்படிக் கமல்ஹாசனின் அரசியல் ஆகும்? என்று கேள்வி எழலாம். மேற்படி திரைப்படத்தை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிற நோக்கத்தோடு விஜய் தொலைக்காட்சியில் இன்னொரு அறிவுசீவி கோபிநாத்துடன் சேர்ந்து அறிவுசீவி கமல்ஹாசன் செய்த சில நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சிகள் படம் பேசுகிற அதே அரசியலைத்தான் கமல்ஹாசனும் மானசீகமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டியிருந்தன. இந்த அரசியல்தேர்வு கமல்ஹாசனின் பிறப்புரிமை. அந்தப் பிறப்புரிமையின் அடிப்படையில் தமிழ்த்தேசியவாதத்தின் மிகப் பெரிய குறியீடான ஈழத்தமிழர்கள் மீதான எள்ளல் அவருக்கு இயல்பாகவே வரும். அதில் பெரியளவு ஆச்சரியம் இருக்கப்போவதில்லை. <br />
<br />
ஏற்கனவே கமல் தெனாலி என்றொரு படத்தில் நடித்திருந்தார். அதிலும் அவர் ஈழத்தமிழர்களை எள்ளல் செய்தார் என்று ஒருபுறமும், இல்லை ஈழத்தமிழர்களின் வலியைக் காட்டியிருந்தார் என்று மறுபுறமும் வாதிட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தத் ’தெனாலி சோமன்’ என்கிற பாத்திரப்படைப்பில் எனக்குப் பெரிய கோபமெல்லாம் இல்லை. இலங்கைத் தமிழர்கள் எப்போதும் இறுகிய முகத்தோடே அழுதபடிதான் இருப்பார்கள் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட நாடகத்தனம். இருந்தபோதும் அந்தப் பாத்திரம் பேசுகிற மொழி தொடர்பான விடயங்களில் நிச்சயம் கமல்ஹாசன் மெத்தனமாகவே இருந்திருக்கிறார். மிகமுக்கியமாக பி.எச்.அப்துல் ஹமீதுவின் உதவியோடு எழுதப்பட ’றேடியோ சிலோன்’ நாடகத்தமிழ் போன்ற விடயங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். அவர் அப்படிச் செய்யாமல் விட்டதுகூட ஈழத்தமிழர்கள் மீதான அவரது பார்வையின் பிரதிபலிப்பாகக் கருதப்படலாம். ’போர் விளைவுகளால் மனநிலை தவறிய இளைஞன்’ கதாபாத்திரம் போரின் விளைவுகளைக் காட்டப் பயன்படுத்தப்பட்டதா அல்லது அப்போது தமிழகச் சினிமாவுக்குக் கிடைக்க ஆரம்பித்திருந்த புதிய சந்தையைத் தட்டித் திறக்கப் பயன்படுத்தப்பட்டதா என்பது படம் எடுத்தவர்களுக்கே வெளிச்சம். எனக்குத் தெரிந்தவரை இன்றைக்கு தமிழக சினிமாவில் பங்குபெறக்கூடிய நிறையப்பேரின் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவானது நேரடியாக அவர்களின் சினிமா வியாபாரத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படவேண்டியதாகவே இருக்கிறது. <br />
<br />
தமிழக சினிமாக்களில் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஒரு குறிப்பிடக்கூடிய பங்கு புலம்பெயர் ஈழத்தமிழர்களிடம் இருந்தே கிடைக்கிறது என்பது உண்மை. இலங்கையில் இருந்தும் ஒரு பங்கு போகிற போதிலும் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கக்கூடிய வருமானத்தோடு ஒப்பிடும்போது கொஞ்சம் நலிவாகவே இருக்கும். இன்னும் கொஞ்சக்காலத்தில் நாங்கள் பதின்மங்களில் இருந்தபோது ஆரம்பமான ஒரு கெட்டபோக்குக் காரணமாக இந்த நிலமை மாறலாம். காரணம் ரஜனிகாந்தின் துதி பாட ஒரு மூவர் குழுமம் இயங்கிவருகிறது, நடிகர் விஜயை வைத்துச் சண்டை பிடிக்கிறார்கள். ஏன், ‘சச்சின்’ படமாக இருக்கவேண்டும், யாழ்ப்பாணம் மனோகரா திரையரங்கில் அபிஷேகம் செய்தார்கள். ‘ஜீ’ என்ற நடிகர் அஜீத்தின் படம் அதே திரையரங்கில் ஓடியபோது ஒரு சோகமான காட்சிக்கு விசிலடித்த நடிகர் விஜய் ரசிகர்கள் இருந்த பல்கணிக்கு குடித்துமுடித்த சோடாப்போத்தல்கள் பறந்ததும் நடந்தது. இப்போதுகூட போனவருடத்து கந்தசஷ்டிக் காலத்தில் வடமராட்சியில் ஒரு கோவிலில் சூரனும் முருகனும் ‘வாடா மாப்பிள்ளை’ பாடலுக்கு ஆடியிருக்கிறார்கள். புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஒரே பொழுதுபோக்கு சினிமாவும், தமிழகத்துத் தொலைக்காட்சிகளாகவும் ஆகியிருக்கிறது. தமிழ் வன் மற்றும் தமிழ் விசன் ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளுமே முறையே கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சியிடம் இருந்தே நிகழ்ச்சிகளை வாங்கிப்போடுகின்றன. மொத்தத்தில் தமிழக சினிமா மற்றும் சினிமா சார்ந்தியங்கும் தொலைக்காட்சிகளே இன்றைக்கு ஈழத்தமிழர்களின் பொழுதுபோக்கு அம்சங்களாக மாறிவிட்டன என்கிற உண்மையை ஒப்புக்கொண்டேயாகவேண்டும். இந்தப் பெரிய சந்தையை இன்னும் இன்னும் ஊடுருவும் முயற்சியாகத்தான் நடிகர்களின் பிரபாகரனாக ஒருமுறையாவது நடிக்கவேண்டும் என்கிற ஆசைகளையும், இயக்குனர்களின் ஈழத்தை மையமாக வைத்து ஒருபடமாவது எடுக்கவேண்டும் என்கிற இலட்சியங்களையும், பிரேம்கோபால், பிரேமினி போன்றவர்கள் ஈழத்தின் துயரசாட்சியங்களாகக் காட்டப்படுவதையும் பார்க்கமுடியும். <br />
<br />
<span></span>ஒரு சந்தை பெரும்பாலும் தேவை-வழங்கல் இரண்டின் அடிப்படையிலேயே இயங்குகிறது. தமிழக சினிமாவின் ஈழத்தமிழ் சந்தையானது முதலில் வழங்கலைவிடக் குறைந்த தேவையுடையதாகவே இருந்தது. அப்போதெல்லாம் பெரியளவில் தமிழகத்துச் சினிமாக்காரர்களுக்கு ஈழத்தமிழர்களைப் பற்றிய அக்கறை பெரிதாக இருந்திருக்கவில்லை. இங்கே எம்.ஜி.ராமச்சந்திரனின் ஈழ ஆதரவுக்கு அரசியல் காரணங்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. எம். ஜி. ராமச்சந்திரனை சினிமாக்காரனாக அல்லாமல் அரசியல்வாதியாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. கொஞ்சக் காலத்தின் பிறகு ஈழத்தமிழர் சந்தையில் தமிழகச் சினிமாவுக்கான நுகர்வோர் அதிகரிக்க தேவை வழங்கலை விஞ்சியது. இப்போது ஈழத்தமிழர் சந்தையைத் தமிழக சினிமாக்காரர்கள் இன்னும் உற்றுக் கவனித்தார்கள். இந்தச் சந்தையைத் தம்மிடம் வைத்திருப்பது தொடர்பில் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். அவர்களுக்கு ‘ஐங்கரன் International' பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இந்தச் சந்தையின் மிகப்பெரிய ஆச்சரியமாகப் பார்க்கக்கூடியது சந்தையின் தேவை-வழங்கல் விதி வழங்கிகள் மற்றும் சந்தைப்படுத்துபவர்களால் உடைக்கப்பட்டதுதான். தனியே ஈழத்தமிழ்ச் சந்தையில் மட்டுமல்லாமல் இந்தியச் சந்தைகளிலும் வழங்கிகளும் சந்தைப்படுத்திகளும் இந்த விதியை உடைத்து தேவை இல்லாத இடத்தில்கூட நுகர்வோர் இவர்களின் சந்தைப் பொருளை கூடிய விலையில் வாங்குகிற நிலமையை ஏற்படுத்தியிருப்பதென்பது வியத்தகு விடயமே. விரும்பியோ விரும்பாமலோ ஒரு பொருளை நுகர்வோர் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும் என்கிற நிலமை இப்போது கருணாநிதி மற்றும் கலாநிதி மாறன் குடும்பங்களால் தொலைக்காட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பதும் சுட்டிக்காட்டப்படவேண்டும். முக்கியமாக சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்பில் பொதுவெளியில் நடக்கிற உரையாடல்கள்கூட இந்தப்போக்கின் தொடர்ச்சியாகவே பார்க்கமுடியும். வலைத்தளங்களில் மட்டுமல்லாமல் சந்திப்புகளில்கூட எப்படியாவது நாங்கள் தமிழகச் சினிமாபற்றி உரையாடிக்கொண்டுதான் இருக்கிறோம். ஏன், இணையங்களில் கிறுக்குகிற என் போல எத்தனையோபேர் தமிழகச் சினிமாவை மட்டுமே கருப்பொருளாக வைத்து எவ்வளவுகாலம் எழுதிவந்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான மக்களால் படிக்கப்படுகிற ஆக்கங்களாக சினிமா விமர்சனங்களே இணைய எழுத்துலகில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றமையைக் கவனத்தில்கொள்ளவேண்டும். இதற்கான காரணங்களையும் தேடிப்பார்க்கவேண்டியிருக்கிறது.<br />
<br />
<span>ஈழத்தமிழர்களிடம் இருந்து இதுவரைக்கும் தமிழகச்சினிமாவை எதிர்த்து நிற்கக்கூடிய சினிமாக்கள் வரவில்லை என்பதுதான் பிரச்சினையே. சமீபத்தில் பெருமளவு கொண்டாடப்பட்ட ‘1999’ திரைப்படத்தில் எத்தனையோ நல்ல விடயங்கள் இருந்தபோதும் தமிழகச் சினிமாவின் தாக்கம் பெருமளவில் இருந்தது. ‘மரநாய்’ என்கிற ஒரு கதாபாத்திரத்தைக் கடைசிவரையில் திரையில் காட்டாமல், அந்தப் பாத்திரம் பற்றிய பயங்களை, தாக்கத்தை மனதில் விதைத்த இயக்குனர் லெனின்.எம். சிவம், கதாநாயகியைக்கூட சாதாரண காட்சிகளில் காட்டாமல் இருந்துவிட்டு இரண்டு பாடல்களில் மட்டும் ஆடவைத்துக் காட்டியிருந்தார் என்பதை </span>வருத்தத்தோடு குறிப்பிடவேண்டியிருக்கிறது. கனடாவில் நடந்த குறும்பட விழாவொன்று பற்றி டிசே தமிழன் எழுதிய ஒரு கட்டுரையில்கூட ஈழப்படைப்பாளிகளின் குறும்படங்களில் இருந்த கதைக்குறைபாடுகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஈழத்தமிழர்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பெரும்பாலும் கருத்தில் கொள்ளாமல் தமிழகச் சினிமாவின் பாதிப்பிலான படங்களை அல்லது தனியே அழுதுவடிகிற கதைகளை படமாக எடுப்பது எம்மவர் மத்தியில் இருக்கிற குறைபாடாக இருக்கிறது. யுத்தத்தின் மத்தியில் வாழ்ந்த மக்களின் மற்றைய பக்கங்கள் எழுத்தளவிலாவது இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இப்படியான நிலையில் கிட்டத்தட்ட ஈழத்தவர் வாழ்க்கையில், முக்கியமாகப் புலம்பெயர்ந்த ஈழத்தவர் வாழ்க்கையில் ஒரு அங்கமாகக் கலந்துபோய்விட்ட தமிழக சினிமாவைப் பிரித்தெடுப்பது என்பது மற்று சினிமா மற்றும் கலைகளுக்கு முன்னால் இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாகும். <br />
<br />
<span>தமிழக சினிமா தொடர்பில் ஈழத்தவரிடம் அல்லது சில விசிலடிச்சான் குஞ்சுகளிடம் இப்போது பெருகிவருகிற இன்னொரு நடைமுறை </span>சில நடிகர்களின் படங்கள் வருகிறபோது எழுப்புகிற புறக்கணிப்புக் கோசங்கள். நடிகர் விஜயின் வேட்டைக்காரன் என்ற படம் வந்தபோது அதற்கு சில நாட்களின் முன் விஜய் ராகுல் காந்தியைச் சந்தித்தார், காங்கிரசுக் கட்சியில் இணைகிறார், ஆகவே புறக்கணியுங்கள் என்கிற கோசம் முன்வைக்கப்பட்டது. அந்தப் படத்தின் இசையமைப்பாளர் பற்றியும் ஏதோ ஒரு சிக்கலை அப்போது முன்வைத்தார்கள். இப்போது விஜயின் காவலன் படத்துக்கான புறக்கணிப்புப் பிரச்சாரங்களில் நடிகை அசின் முன்னிறுத்தப்படுகிறார். காங்கிரசில் சேர்வதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தை விஜய் ‘யாழ்நகர்’ என்ற ஊரின் மீட்பராக நடித்துக் களைந்துவிட்டாராம். இன்றைக்கு வரைக்கும் இந்தப் புறக்கணிப்புகளின் மூலகாரணம் ‘அஜீத்-விஜய்’ கதாநாயக வழிபாடுதவிர வேறொன்றுமில்லை என்பது திண்ணம். இல்லாவிட்டால் இந்த இருவரின் படங்களைப் புறக்கணியுங்கள் என்று ஈழத்தோடு தொடர்புபடுத்தி அடிக்கடி கத்திக்கொண்டிருக்கமாட்டார்கள். ஏன், ‘செருப்பாக இருப்பேன்’ என்ற வசனம் எழுதிய கமல்ஹாசனுக்கு எதிராக இதுவரை எந்தவிதமான புறக்கணிப்புக் கோசமும் வந்ததில்லை. இப்படியான கோசங்கள் தனியே விஜய் மற்றும் அஜீத் படங்கள் வரும்போதே எழுப்பப்படுகின்றன என்பதிலிருந்தே இவற்றின் உண்மை நோக்கம் தெரிந்துவிடும். இது நிச்சயமாக சில விசிலடிச்சான் குஞ்சுகளின் வேலையே. புறக்கணிப்பது என்று உணர்வு பூர்வமாக முடிவெடுத்துவிட்டால் முழுமையாகப் புறக்கணிக்கவேண்டும். அப்படி இல்லாமல் இந்த அரைகுறை விளையாட்டுகள் மூலம் வழங்கிகளால் ஆளப்படுகிற ஒரு சந்தையை உடைப்பது என்பது கடினமானதே. <span>இந்தக் கோசங்களைத் தாண்டி மேற்படி படங்கள் இந்தச் சந்தையில் இலகுவில் நல்ல இலாபத்தோடு விலைபோகின்றமைக்கான காரணங்களை எடுத்தாயவேண்டியுள்ளது.</span><br />
<br />
<span>தமிழகச் சினிமா மற்றும் தொலைக்காட்சிகள் ஈழத்தமிழர் வாழ்வில் பாரிய செல்வாக்குச் செலுத்துவதற்கான பாரிய காரணம், ஏலவே சொன்னதுபோலவே எம்மிடம் மாற்று முயற்சிகள் இல்லாமல் போயிருக்கின்றமை அல்லது மாற்று முயற்சிகளுக்கான களம் இல்லாமல் போயிருக்கின்றமையே ஆகும். </span>முக்கியமாகப் புலம்பெயர் சூழலில்கூட இந்தப் பிரச்சினை படைப்பாளிகளுக்கு இருப்பது வருந்தத்தக்கது. கனடாவில் இருக்கக்கூடிய மிகமுக்கியமான சில ஈழப்படைப்பாளிகள் தமிழகப்படைப்பாளிகளின் அங்கீகாரம் தொடர்பில் கொண்டிருக்கிற கருத்துக்கள் அதிர்ச்சியூட்டுபவையாகவே இருக்கின்றன. அவர்களின் அங்கீகாரம் மேலானதொன்றாகவே பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் கனடாவில் இருக்கிற முக்கியமான ஈழக்கவிஞர் ஒருவரோடு டிசே முரண்பட்டுமிருக்கிறார். முற்றுமுழுதாக தமிழகப்படைப்பாளிகளிடமிருந்து எம்மைத் துண்டித்துக்கொள்ளவேண்டும் என்கிற வாதம் இங்கே முன்வைக்கப்படவில்லை.தீர்ப்பெழுதும் நாட்டாமைகளாக அவர்களை அவர்களோ, அவர்களை நாங்களோ கருதவேண்டியதில்லை. எங்களுக்கான வழிகளை நாம் உருவாக்கிக்கொள்ளவேண்டும். எங்கள் வழியில் நாங்கள் அவர்களை எதிர்கொள்ளவேண்டும். இல்லையெனில் கமல்ஹாசன் போன்ற குழப்பநிலை அரசியல்வாதிகளிடமிருந்து இப்படியான இழிவுகள் வந்துகொண்டேதான் இருக்கும். மேலும், இளம்தலைமுறைக்கான ஒரு கடமையாக நான் பார்ப்பது, தந்திரமான வியாபாரிகளால் தமிழகச் சினிமாக்காரர்களிடம் நாங்கள் கட்டுண்டு போயிருக்கிறோம். எங்கள் எழுத்து மொழியில்கூட அவர்களின் மொழி ஆதிக்கம் செலுத்துமளவுக்கு நாம் மாசுபட்டிருக்கிறோம், எங்களின் சுயத்தை இழந்திருக்கிறோம். ரஜனிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்கிறோம். தவிக்கிற சகோதரனுக்கு உதவுவதற்கு வைக்கிற வேண்டுகோளில்கூட விஜய் படத்துக்கு விளம்பரம் செய்கிறோம், ‘நீங்களும் காவலனாகலாம்’ என்று. மாண்டவரை நினைக்கிற ஒன்றுகூடல்கள் கூட ‘சீமான் கலந்துகொள்ளும் கூட்டம்’ என்று சீமானை முன்னிறுத்தி விளம்பரம் செய்யப்படுகின்றன. இப்படியான விடயங்களை இயலுமானவரையில் எதிர்க்கவேண்டும். பொழுதுபோக்குக்காகக் கிடைக்கிற ஒரு சந்தைப்பொருள் எங்கள் வாழ்வியலாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனம் இருக்கவேண்டும். <br />
<br />
<span>புறக்கணிப்புகளை ஆரம்பிக்கிற யாரும் நடக்கக்கூடிய விடயங்களைப் பேசுகிறார்களில்லை. என்னுடைய ஆசிரியர் ஒருவர் ‘இலங்கைப் பொருட்களைப் புறக்கணிப்போம்’ என்று தீவிர பிரச்சாரம் நடந்த காலத்தைப் பற்றி Face Book ல் சொல்லியிருந்தார். ’புறக்கணித்தால் வியாபாரம் என்னாவது?’ என்கிற மனநிலையில்தான் பலர் இருக்கிறார்கள். கனடாவில் இருக்கிற பெரிய கடைகளுக்கு ஆரம்பகாலத்து முதல் எங்கிருந்து வந்தது, அவை யாருடைய கடைகள் என்று பார்க்கவேண்டும். அவர்களே புறக்கணிப்புகளை இந்தமாதிரித்தான் எதிர்கொண்டார்கள். அதாவது, உணர்வு பூர்வமான, போராட்ட குணம் உள்ளவர்களாகக் காட்டிக்கொள்கிறவர்கள்கூட பெருவியாபாரிகளின் மனநிலையோடுதான் இருக்கிறார்கள். </span>மூலதனத்தை மீட்பது, இலாபத்தைப் பெருக்குவது போன்றவைதான் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இலாபப் பெருக்கமும், மூலதன மீட்பும் பிழையல்ல, மூலதனம் உங்கள் பணமாக இருக்கிறபோது. இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் மண்மீட்பு முதல், இனமானம் என்கிற சொல்லாடல் வரை எல்லாமே கிட்டத்தட்ட வியாபாரமயப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதே புறக்கணிப்பாளர்கள்தான் இலண்டனில் எடுக்கப்பட்ட ஒரு தமிழகச் சினிமாவில் தலைகாட்ட அலைந்து திரிந்து தலைகாட்டியும் இருக்கிறார்கள். இதே புறக்கணிப்பாளர்கள்தான் விஜயகாந்துக்கு காசில்லாமல் கனடாவில் தங்க ஏற்பாடும் செய்து கொடுத்திருக்கிறார்கள். ஈழத்துக் கலைஞர்களைக் கௌரவிக்கிற விழாவுக்கு பிரகஷ்ராஜ் வந்து போயிருக்கிறார். வடிவேலு முதற்கொண்டு கலக்கப்போவது யாரு படைவரை எல்லோரும் உழைத்துக்கொண்டு போவார்கள். சூப்பர் சிங்கர், மானாட மயிலாட போன்றவைதான் ‘கலை நிகழ்ச்சிகள்’ ஆகும். பிரேம்கோபாலும், பிரேமினியும் தமிழீழம் பெற்றுத் தருவார்கள். இப்படியாக எந்தவிதமான அடிப்படை அறமோ, ஓர்மமோ இல்லாமல் இருக்கிற எங்களை ‘செருப்பாய் இரு’ என்று ஒரு கழிசடை சொல்லும், இன்னொரு கழிசடை ‘யாழ்நகர்’ என்றெல்லாம் பொது அறிவெல்லாம் இல்லாமல் பெயரிட்டு விசரேற்றும், இன்னொரு கழிசடை உண்ணாவிரதப்பந்தலில் ‘பஞ்ச்’ பேசும். நாங்களும் ‘செருப்பாய் இருப்போம்’. <br />
<br />
<span>தமிழகச் சினிமா நல்ல பொழுதுபோக்காக இருக்கிறதா. பாருங்கள், மகிழுங்கள். தயவுசெய்து அந்த வியாபாரிகளை எங்கள் வாழ்வியலுக்குள் மூக்கை நுழைக்க விடாதீர்கள். கெட்ட அரசியல்வாதியைவிட மோசமானவர்கள் இந்தக் </span>கெட்டிக்கார வியாபாரிகள்</div><hr style="clear: both; visibility: hidden; width: 100%;" /></div><div id="blog-post-separator"> </div><a href="" id="comments" name="comments" title="Links active once published"></a><br />
<br />
<h2 id="commentAreaTitle"><br />
</h2>Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-71095757108743448212011-01-08T14:54:00.001-05:002011-01-08T14:54:43.396-05:00செரிலாக்<div id="blog-author" style="text-align: justify;"></div><div class="paragraph editable-text" style="text-align: justify;">’அப்ப என்ன மாதிரித் தம்பி. ஊரில எல்லாரும் சுகமா? அப்பா, அம்மா எல்லாரும் எப்பிடியடா இருக்கினம்? கதச்சனியே. நான் விசாரிச்சனான் எண்டு சொல்லடாப்பு’. அன்னாரை எனக்குக் கிட்டத்தட்ட 11 வருசமாகத் தெரிந்திருந்தது. திருமணவழியில் எங்கள் குடும்பத்துடன் உறவானவர். அன்னாரைப்பற்றி ‘ர்’ போட்டுக் கதைக்கிறபடியால் அவருக்கு பெரிய வயசெல்லாம் இல்லை. என்னிலும் ஒரு பதினைந்துவயது கூட இருக்கலாம். எங்களின் கிராமத்துக்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிற ஒரு ஊர்தான் அவருக்கு அடி. ‘அல்வாய்’ கிராமசேவகர் பிரிவுக்குள் கொஞ்சம் பெரிய ஊர். தகப்பனார் நல்ல உழைப்பாளி, தோட்டம் துரவு எல்லாம் இருந்தது. அந்தியோட்டிக் கல்வெட்டுகளில் விசாலமான அடைமொழிபோடுகிறவர்கள். எண்பதுகளின் கடைசியோ, தொண்ணூறுகளின் ஆரம்பமோ என்னவோ அன்னார் அங்கே வாழமுடியாத சூழ்நிலைக்கைதியாகி ஐரோப்பாவில் எல்லாம் சுற்றி கனடாவில் நிரந்தரமாகிவிட்டவர்.<br />
<br />
</div><div style="text-align: justify;">அன்னார் ஒரு தேர்ந்த அரசியல்வாதி/விமர்சகர்/நோக்குனர். அதுவும் தாயக அரசியலில் அன்னாரின் பங்கு மகத்தானது. ‘சிவாஸ் ரீகல்’ கூடத் தேவையில்லை, ‘மொல்சன் கனேடியன்’ மணமே போதும், அன்னாரின் கருத்துரைகள் கடல்தேடு நதியெனப் பெருக்கெடுக்க. அன்னாரோடு சேர்ந்திருக்கும் இன்னார்கள் எல்லாம் ‘அவரிட ஐடியா என்ன எண்டால்...’ என்று தொடங்கி ஒவ்வொரு விஷயத்திலும் இருக்ககூடிய தங்களின் கருத்துக்களைச் சொல்லுவார்கள். உதாரணமாக, கமலஹாசன் எதை நினைத்து கையடிப்பார்... மன்னியுங்கள், கமலஹாசன் எதை நினைத்து தசாவதாரம் படத்தில் மேற்படி காட்சி எடுத்தார் என தங்களின் கருத்தை இப்படிச்சொல்வார்கள், ‘கமலிட ஐடியா என்னவெண்டால்........’. சதாம் ஊசேன், ஒபாமா, ராஜபக்சே, பிரபாகரன் எல்லோருடைய மனத்துக்குள் இருந்தவை, இருக்கிறவை எல்லாவற்றையும் இங்கிருந்தபடியே எப்படியெல்லாம் படிக்கிறார்கள் என்றெல்லாம் நினைத்தால் உங்களுக்கு உடனடியாகத் தண்ணியடிக்கத் தோன்றும். <br />
<br />
அன்னாருக்குக் கிட்டத்தட்ட எல்லாப்பரப்பிலும் விஷயஞானம் உண்டெனத் தோன்றும் எனக்கு. அதிலும் அன்னாருக்கும் இன்னார்களுக்கும் இடையில் நடக்கிற விவாதங்கள் அளப்பரிய கருத்தியல்களை சர்வசாதாரணமாகத் தொட்டுச்செல்லும். பெரும்பாலும் அன்னாரின் விவாதங்கள் ‘ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்றுதான் ஆரம்பிக்கும். இடனே முதலாவது இன்னார் ‘இல்ல.. அது எப்படியெண்டால் ஒன்றும் ஒன்றும் மூன்று’. அடுத்த இன்னார் ‘ஒன்றும் ஒன்றும் ஐந்தெல்லோ’ என்பார். இது சுற்றிச் சுற்றி அன்னாரிடம் வருகிறபோது அன்னார் விகாரமாகச் சிரித்தபடி ‘ஒன்றும் ஒன்றும் மூன்று’ என்பார். உடனே முதல் இன்னார் ‘இல்லைப்பாருங்கோ.. ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்பார். இப்படியே விவாதங்கள் தொடர்ந்தபடியிருக்கும். <br />
<br />
அன்னார் அடிக்கடி ‘இந்த யூனியன் வச்சிருக்கிற கொம்பனியளில வேலைக்கே போகக்கூடாது. சும்மா யூனியன் fee எண்டு காசைப் பிடுங்கிறாங்கள். இந்தக் கொம்யூனிஸ்ட்டுகளுக்கு வேற வேலையே’ இல்லை என்பார். எனக்கு யூனியன்களின் இருத்தலுக்கும் கொம்யூனிசத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றும். கைத்தொழில் புரட்சி, அந்தப் புரட்சி இந்தப் புரட்சி என்று தொழிற்சங்கவாதிகளின் தோற்றத்துக்கு வேண்டுமானால் பொதுவுடமைவாதிகள் பெரும்பங்காற்றியிருக்கலாம். அதே போல் பொதுவுடமைவாதிகளால் தொழிற்சங்கத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வது இலகுவானதொன்றாய் இருக்கலாம். இருந்தும், சாதாரண உழைப்பாளிகளுக்கு நேர்மையான ஒரு தொழிற்சங்கத்தின் அவசியம் பற்றிப் புரிந்துகொள்வதற்கு நீ பொதுவுடமைவாதியாயிருக்கவேண்டியதில்லை, உன்னைச் சுற்றிய முதலாளிகளின் சமூகம் உன்னை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறது என்று தெரிந்திருந்தாலே போதுமானது என்பது என்னுடைய கருத்து, தொழிற்சங்கங்களைப் பற்றி. தமிழகத்துச் சினிமாவில் வருகிற காக்கிச்சட்டைபோட்ட சந்திரசேகரைப் பார்த்துவிட்டு தொழிற்சங்கங்களைப் பற்றி அன்னார் கதைக்கும்போது அவரோடு வாதம் பண்ணுவதில் பிரயோசனமிருப்பதில்லை. ஒருமுறை ரசினிகாந்தும் கவுண்டமனியும்கூட அதே உடைபோட்டு ஒரு தொழிலாளியின் கைவெட்டுப்பட்ட காரணத்துக்காக ஏதோ வேலைநிறுத்தம் எல்லாம் செய்கிறோம் என்று சொல்லி....ம்ம்ம்ம், இப்படித்தான் அறிவூட்டப்பட்டிருந்தார் அன்னார். ஒருநாள் அன்னாரை downsizing என்று சொல்லி வேலையைவிட்டுத் தூக்கிவிட்டார்கள். அன்னார் சொன்னார் ‘சே, எங்கட கொம்பனீல மட்டும் யூனியன் இருந்திருந்தால் என்ர நிலமையே வேற...’</div><br />
<div style="text-align: justify;">ஒருநாள் அன்னாரின் வீட்டுக்குப் போயிருந்தபோது தாயக நிலமை பற்றிக் கவலைப்பட்டுப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கும் கவலை இருந்தது. கடலில் மூன்று நாட்களாக ‘ஓட்டி யாரடா’ என்று சொல்லி எஞ்சின் சுடப்பட்டு, துப்பாக்கி முனையில் ஓட்டி திருப்பி அழைத்துச் செல்லப்பட ‘ஜலசமாதியை’ எதிர்பார்த்துக் காத்திருந்த உறவு சொன்ன கதைகள் எனக்குள்ளும் இருந்தன. கடல் தண்ணீரைத் தாங்கள் குடித்ததோடு மட்டுமல்லாமல் பழுதாய்ப்போன செரிலாக் மாவை கடல் தண்ணீரில் குழைத்துக் குழந்தைகளுக்கு ஊட்டியதென்பது என்னைப் பொறுத்தவரை பெரும்கொடுமையாக இருந்தது. அப்படி செரிலாக் கூடக் கிடைக்காமல் செத்த எத்தனையோ பிள்ளைகள் பற்றியெல்லாம் செய்திகள் வந்துகொண்டிருந்த காலம். அன்னார் மும்முரமாக வீதிகளில் போராடிக்கொண்டிருந்தார். அன்றைக்கும் போர் முடிந்துவந்துதான் பேசிக்கொண்டிருந்தோம். ரீ.வி.ப் பெட்டியில் திவ்யதர்ஷிணி பேசிக்கொண்டிருந்தார். அன்னார் உச்சுக்கொட்டிக்கொண்டே சொன்னார், ‘இந்த மோட்டுச் சனங்களாலதான் எல்லாப் பிரச்சினையும். உவை என்னத்துக்குப் பாதுகாப்பு வலயத்துக்கு வாறம் எண்டு தாலிய அறுக்கினம்?’. ‘அப்பிடியில்லை அண்ணை. அவயளுக்கும் வாழோணும் எண்ட ஆசை இருக்குமண்ண. சாவு பற்றின பயத்தைவிட வேற எந்தப் பயமும் பெரிசில்லையண்ணை. அதான் அவையளும் வாழோணும் எண்டு நினைச்சு இஞ்சால வரப்பாக்கினம். நானும் நீங்களும் அவயளமாதிரி அங்க இருக்கேலாது எண்டு முடிவெடுத்து இஞ்ச வந்து இருக்கிறது எங்கட உரிமை. கடல் தண்ணீல பழுதான செரிலாக் கரைச்சு எட்டுமாசக் குழந்தைக்குக் குடுக்கிற சனம் உயிர்வாழ எண்டு எடுக்கிற முடிவுகூட அவேட உரிமை அண்ணை. பிறகு....’ முடிக்கமுன் இடைமறித்த அன்னார் சொன்னார், ‘தமிழனாப் பிறந்தவன் நாட்டுக்காக உயிரைக் கொடுக்கிறது அவேட கடமை’. <br />
<br />
கொஞ்ச நேரத்துக்கு எதையுமே பேசாமல் இருந்தோம். திவ்யதர்ஷிணி ‘Judges சொன்ன comments ஐ எல்லாம் improvise பண்ணி அடுத்தமுறை ஆடுங்க’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். Comments ஐ, improvise பண்ணி எப்படி ஆடுவது என்று சிந்திக்கமுயன்றேன். என் மூளைக்கெட்டிய பரப்புகளில் மட்டும்தானே சிந்திக்கலாம்? அன்னார் திடீரென்று குரலெடுத்துக் கத்தினார்... ‘இஞ்ச பாரப்பா.. ரீவி.யப் பாத்துக்கொண்டு என்ன செய்யிறாய்? ஆ... பார் பெடி என்ன செய்யுது எண்டு. பொறுப்பில்லாத நாயே’ என்று. நடுநடுங்கிக்கொண்டே அவரது துணைவி அவர்களில் மூன்று வயதுப்பிள்ளையில் கையிலிருந்த புத்தம்புதிதான, திறக்கப்படாத போத்தல் தண்ணீரைப் பிடுங்கினார். ’கண்டது நிண்டதையும் பிள்ளை எடுத்துச் சாப்பிட சனியனுக்கு ஆட்டக்காரியளைப் பாக்கிறதுதான் முக்கியமாப் போச்சு. போத்தில் தண்ணியக் குடிச்சு நாளைக்கு டையேரியா ஆக்கினா என்ன நிலமை? ஆ... முதல்ல பிள்ளைய ஒழுங்காப் பார்..........’ வசை தொடர்ந்தது. <br />
<br />
*----*----*----*<br />
2015 மே மாதம் ஒரு நாள். ரொரொன்ரோவில் 10 வயது மதிக்கக்கூடிய சிறுவன் ஒருவன் மேடையில் முழங்கிக்கொண்டிருந்தான். ‘நான் தமிழன். நாட்டுக்காக உயிரைக் கொடுப்பது என்னுடைய கடமை. அன்னார் முகத்தில் பெருமிதம் பொங்க HD Camcorder ஒன்றில் சிறுவனின் முழக்கத்தை ஆவணப்படுத்திக்கொண்டிருந்தார். அதே நாள் முரசுமோட்டையில் சுற்றாடல்கல்வி ஆசிரியை கொடுத்த வீட்டுவேலையில் ‘கடல் நீரின் பயன்கள் என்ன?’ என்ற கேள்விக்கு நிறைய யோசித்து ‘செரிலாக் கரைக்கலாம்’ என்று ஒரு எட்டுவயதுச் சிறுமி எழுதிக்கொண்டிருந்தாள். </div>Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-87908930766865361682010-11-15T19:20:00.000-05:002010-11-15T19:20:41.232-05:00தற்பாலினர் வெறுப்புக்கு (Homophobia) எதிரான கருத்துரைப்பும் கலந்துரையாடலும்<div class="paragraph editable-text" style="text-align: justify;">Gay/Lesbian/Trans-gender ற்கு எதிரான பல்வேறு வகையான கருத்துக்கள் இயல்பாக்கப்படுவதும் (Normalizing Discourses), அவர்களது தெரிவுசார் உரிமைகள் மறுக்கப்படுவதும், சமூகத்தின் அங்கத்தவர்களாக அவர்களது இருப்பு தொடர்ந்தும் ஒடுக்கப்படுவதும் தமிழ்ச்சமூகத்தில் நீண்டகாலமாக நிலவிவருகிறது. பரவலான இக்காழ்ப்புணர்வுக்கு எதிராக எமது எதிர்க்குரல்களைப் பதிவு செய்தல் அவசியமாகின்ற இந்தவேளையில்.... <br />
<br />
பொது ஊடகங்கள் சிலவும் இக்காழ்ப்புணர்வு முழுத் தமிழ்ச் சமூகத்தின் நிலைப்பாடு என்ற பிரமையை ஏற்படுத்த முயல்கின்றன. ஊடகங்கள் தம் விழுமியங்களைத் தவறுவதைச் சுட்டிக்காட்டவும், எமது தன்னிலையை சுயவிமர்சனம் செய்யவும், விளிம்புநிலையாக்கம் (Process of Marginalization) குறித்தான விவாதங்களை மேற்கொள்ளவும்....<br />
<br />
நாங்களும் நீங்களுமாய் ஓர் உரையாடலுக்கான பொதுக்களத்தில் சந்திப்போம் <br />
<br />
<br />
Where: Scarborough Civic Centre<br />
150 Borough Road<br />
(McCowan & Ellesmere) <br />
<br />
When: Friday, November 19, 2010<br />
At 6.00 PM<br />
<br />
<br />
Friends Aganinst Homophobia<br />
<span class="skype_pnh_print_container">416 725 4862</span><span class="skype_pnh_container" dir="ltr"><span class="skype_pnh_mark"> begin_of_the_skype_highlighting</span> <span class="skype_pnh_highlighting_inactive_common" dir="ltr" title="Call this phone number in Canada with Skype: +14167254862"><span class="skype_pnh_left_span"> </span><span class="skype_pnh_dropart_span" title="Skype actions"><span class="skype_pnh_dropart_flag_span" style="background-position: -739px 1px ! important;"> </span> </span><span class="skype_pnh_textarea_span"><span class="skype_pnh_text_span"> 416 725 4862</span></span><span class="skype_pnh_right_span"> </span></span> <span class="skype_pnh_mark">end_of_the_skype_highlighting</span></span> / 647 829 9230/ <span class="skype_pnh_print_container">416 841 6810</span><span class="skype_pnh_container" dir="ltr"><span class="skype_pnh_mark"> begin_of_the_skype_highlighting</span> <span class="skype_pnh_highlighting_inactive_common" dir="ltr" title="Call this phone number in Canada with Skype: +14168416810"><span class="skype_pnh_left_span"> </span><span class="skype_pnh_dropart_span" title="Skype actions"><span class="skype_pnh_dropart_flag_span" style="background-position: -739px 1px ! important;"> </span> </span><span class="skype_pnh_textarea_span"><span class="skype_pnh_text_span"> 416 841 6810</span></span><span class="skype_pnh_right_span"> </span></span> <span class="skype_pnh_mark">end_of_the_skype_highlighting</span></span><br />
email: <a href="mailto:friendsagainsthomophobia@gmail.com" target="_blank">friendsagainsthomophobia@gmail.com</a></div><div class="paragraph editable-text" style="text-align: justify;"> </div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/_db18k2mGuw4/TOHOLDeE5eI/AAAAAAAACBY/mrN0f8IAi0I/s1600/flyer__1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="496" src="http://3.bp.blogspot.com/_db18k2mGuw4/TOHOLDeE5eI/AAAAAAAACBY/mrN0f8IAi0I/s640/flyer__1.jpg" width="640" /></a></div><div class="paragraph editable-text" style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"> </div>Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-91357816179006577922010-10-31T18:06:00.000-04:002010-10-31T18:06:59.198-04:00I am a Tamil Queer<span style="color: #990000; font-size: x-small; font-style: italic; font-weight: normal; text-decoration: underline;">CTBC வானொலி விளம்பரம், அதன் பின்பான சர்ச்சைகளை முன்வைத்து</span><br />
<span style="color: #990000; font-size: x-small; font-style: italic; font-weight: normal; text-decoration: underline;"> </span><br />
"Toronto mayoral campaign ends on a hateful note" என்ற <a href="http://www.theglobeandmail.com/news/national/toronto/city-votes/city-votes-news/toronto-mayoral-campaign-ends-on-a-hateful-note/article1770805/">Globe and Mail</a> தலையங்கம் சாலப்பொருந்தும், Canadian Tamil Broadcasting Corporation எனப்படும் CTBC வானொலியில் ஒலிபரப்பான 35 செக்கன்கள் நீடிக்கும் விளம்பரம் கிளப்பிய சர்ச்சைகளை ஒரு வசனத்தில் அடக்க. ரொரொன்ரோவின் நகரபிதாவைத் தெரிவு செய்வது தொடர்பில் நடந்த தேர்தல் சம்பந்தமான நிகழ்வுகளில் ஆகக்கூடிய கசப்புணர்வையும், இலங்கைத் தமிழர்கள்பால் கனேடிய மத்தியதர வகுப்பு பொது உரையாடற் தளங்களில் வெறுப்பை உமிழ்வதற்கு அடுத்த காரணத்தையும் இந்த விளம்பரம் ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் Globe and Mail செய்தியின் பின்னூட்டல்களில் அதிகம் வரவேற்பைப் பெற்றிருக்கிற பின்னூட்டம் பின்வருமாறு அமைந்திருக்கிறது: <br />
<span></span><br />
<span style="color: #663366; font-style: italic; font-weight: bold;">This is another example of why the effects of Canada multiculturalism and immigration policies must be studied regarding how they affect gays/lesbians and women already living here. Frankly, I don't want a country ruled by superstitions imported from the third world.</span><br />
<span></span><br />
<span>மேற்படி பின்னூட்டத்தை 124 பேர் ஆதரித்திருக்கிறார்கள். 34,296,000 பேரை வெறும் 124 பேர் பிரதிநிதித்துவப் படுத்தமாட்டார்கள் என்று உதறித்தள்ளினால், “புள்ளிவிபரவியல்” என்கிற கோட்பாடு கிலுகிலுத்துப் போகும். </span>இதுபற்றி எந்தவிதமான அக்கறையுமின்றி நாங்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.<br />
<br />
<span style="color: black; font-size: medium; text-decoration: underline;"><span style="font-weight: bold;">சர்ச்சையின் பின்னணி</span></span><br />
<span>2003 ம் வருடமே தற்போதைய நகரபிதா டேவிட் மில்லர் (நவம்பர் 30 வரை அவரே) மூன்றாம் முறையாக நகரபிதாத் தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவித்திருந்த நேரத்தில் இருந்தே 2010 டிசம்பர் 1ல் நகரபிதாவாகப் பதவியேற்கப் பலர் போட்டிபோட்டார்கள். ஜனவரி 4, 2010 தொடங்கி செப்டெம்பர் 10ம் திகதி வரைக்கும் வேட்பு மனுக்கள் இந்தப் பதவிக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டன. நகரபிதா பதவிக்கு மொத்தம் 40 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்கள். அதில் 13 பேர் தம்முடைய விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். அதில் முக்கியமானவர் ரொரொன்ரோ மாநகரப் போக்குவரத்துச் சபையின் அவைத்தலைவராக இருந்த அடம் ஜியாம்ப்ரோன் முக்கியமானவர். ஆரம்பக் கணிப்புகளில் இரண்டாம் நிலையில் இருந்த இவர், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டு தன்னுடைய வேட்பு மனுவை மீளப் பெற்றுக்கொண்டார். சேரா தொம்சன் மற்றும் ரோக்கோ ரொஸ்ஸி ஆகிய இருவரும் மீளளிப்பு நாட்களின் பின்னதாக தங்களின் பிரசாரத்தை இடைநிறுத்தி போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்கள். இறுதியில் உதிரி வேட்பாளர்கள் தவிர்க்கப்பட்டு இந்த நகரபிதா தேர்தல் களம் மும்முனைப் போட்டியாக மாறியது. </span><br />
<br />
<span><a href="http://www.kiruthikan.com/4/post/2010/10/i-am-a-tamil-queer.html">தொடர்ந்து வாசிக்க...</a> </span><span style="color: #990000; font-size: x-small; font-style: italic; font-weight: normal; text-decoration: underline;"> </span>Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-4875704383227919382010-09-19T11:55:00.000-04:002010-09-19T11:55:02.320-04:00கனேடிய தமிழர் பேரவை உடைப்பும் கணனித் திருட்டும்கனேடியத் தமிழர் பேரவையின் அலுவலகம் உடைக்கப்பட்டு கணனி ஒன்று களவாடப்பட்டது தொடர்பில் பெருமளவுக்கு எங்கள் ஊடகங்கள் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. அருண்மொழிவர்மனின் பதிவொன்றின் மூலமாகவே இந்தச் செய்தி எனக்குத் தெரியவந்தது. அதுவும் கனேடியத் தமிழர் பேரவையின் பேச்சாளரான திரு டேவிட் பூபாலபிள்ளை முதலில் வைத்த பாரதூரமான குற்றச்சாட்டுகளை வைத்துப் பார்க்கும்போது இது நிச்சயமாக முதனிலை ஊடகங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய செய்தியாகவே இருந்திருக்கவேண்டியது. ஆனால் அதன் பின்னர் திரு. பூபாலபிள்ளை அடித்த குட்டிக்கரணங்களைப் பார்க்கும்போது ஊடகங்கள் புதுக்கடைத் திறப்புவிழாவுக்குப் போயிருந்தது நியாயமானதொரு செயலாகவே எனக்குத் தெரிகிறது.<br />
<br />
<a href="http://www.kiruthikan.com/4/post/2010/09/3.html">தொடர்ந்து படிக்க..... </a>Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-77052192598081678952010-08-15T12:15:00.001-04:002010-08-15T12:16:29.457-04:00சில சமபவங்கள், வருத்தங்கள்இரண்டு மூன்று விஷயங்களைப் பற்றிப் பேசவேண்டியிருக்கிறது. முதல் விஷயம் சமூக வலையமைப்பான facebook ல் அடிக்கடி நிகழ்வுகளுக்கான அழைப்புகள் வந்தபடி இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஏதோ ஒரு சபாவில் நிகழ்கிற அரங்கேற்றம் தொடங்கி நல்லூர்க்கந்தன் திருவிழா வரை எல்லாவற்றுக்கும் நீ வருவாயா? வரமாட்டாயா? வருவாய் அல்லது வராமல் விடுவாயா? என்று கேள்விகேட்டுக் கொல்கிறார்கள். நான் இருக்கிற நிலையில் இப்போது பனை வளர்த்துக் கள்ளுக் குடிக்க முடியாது. கொஞ்சமாவது இயல்பறிவைப் பாவித்து இப்படியான அழைப்புக்களை அனுப்பித் தொல்லை கொடுக்காமல் இருக்கலாம். அதைவிடக் கொடுமை இது தொடர்பாக அதே முகப்புப் பக்கத்தில் நடக்கிற விவாதங்கள். ஈழத்துக் கோவில்களில் எங்கேயய்யா சமத்துவமும் சமதர்மமும், சகோதரத்துவமும் கட்டிக்காக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நாள் திருவிழா ‘ஒவ்வொரு பகுதியினர்’ உபயம் ஏற்று நடாத்தப்படும் என்பதின் பின்னால் இருக்கக்கூடிய தரக்குறைவான அரசியல் தெரியவில்லை. கோவில்களுக்குள் நுழைவதற்கான ‘விதிமுறைகள்’ பற்றி எதுவுமே தெரியவில்லை. உடனே கோவிலுக்கு இன்னமாதிரி உடைகளைப் போட்டுக்கொண்டு நுழைய வேண்டாம் என்று வந்த சட்டத்தை ஏன் கண்டிக்கிறாய் என்று சண்டைக்கு வராதீர்கள். நான் பேசுவது ‘இந்தக் கோவிலுக்குள் இன்னார்தான் நுழையலாம்’ என்று இருக்கிற விதிமுறைகளைப்பற்றி. எல்லாவற்றையும் விட கோவில் என்றதும் கோபம் வர இன்னொரு காரணமும் உண்டு.கோவிலுக்குச் செய்கிறேன் என்று செய்யப்படுகிற ஆடம்பரங்களின் மீதான விசனத்துக்கு முக்கிய காரணம் ஒரு காலத்தில் நானும் சமயபாட மிரட்டல்களுக்குப் பயந்து கோவில் குளம் என்றெல்லாம் திரிந்தமையே.<br /><br />என்னுடைய அம்மாவழியால் எங்களுக்கு நெருக்கமாக இருந்த கோவில் நவிண்டில் குலனையம்பதிப் பிள்ளையார். அங்கேயும் கோவிலுக்குள் மூன்று சாதிக்கு மட்டும் அனுமதி இருந்தது. ஏனையவர்களை வெளிப்பிரகாரத்தோடு நிறுத்திவைத்து ஆதிக்கசாதிதான் கோலோச்சியது. அந்தக் கோவில் ஒரு முறை புனருத்தாரணம் செய்த போது (ஏனையவர்கள் தேவைப்பட்டார்கள், ஏனென்றால் கோவிலுக்கு மண் சுமந்தாலே அது ஆதிக்க சாதிக்கு மயிர் இழந்ததுக்கு சமம்) அதுவரை காவி மட்டுமே அடித்திருந்த கோவிற் சுவர்களுக்கு நிறங்கள் பூச முடிவுசெய்யப்பட்ட போது ஆலய மகாசபைத் தலைவராக இருந்த ‘ஆர்ட்டிஸ்ட்’ சுப்ரமணியம் வாத்தியார் குறுக்கே நின்று தடுத்தார். ‘வண்ணம் அடித்தால் உனக்கு பிள்ளையார் தெரிவாரா வண்ணம் தெரியுமா?’ என்கிற வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருந்தது. கோவில்கள் ஆடம்பரமயமாதலுக்கு எதிரான விதை அவர்மூலம் விழுந்தது என்பது உண்மை. கோவில்களின் அவசியம் பற்றி இப்போது மனதில் வருகிற கேள்விகளுக்குக்கூட அந்த விதைதான் காரணமாயிருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. மேலும் பறைவேன் என்கிற இணையத்தளத்தில் ‘<a href="http://thiviyaranchiniyan.blogspot.com/2010/08/blog-post.html">யாழ். போதனா வைத்திய சாலையும், தலை குனியவேண்டிய தர்மவான்களும்</a>’ என்கிற தலைப்பில் திவ்வியரஞ்சினியன் எழுதிய ஒரு கட்டுரை, நோர்வேக் கோவிலில் ‘தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அதற்கொரு குணமுண்டு’ என்று எங்கள் வீரவான்கள் நிகழ்த்திக் காட்டிய வேடிக்கைகள் கனடாவில் நடக்கிற ஒரு கோவில் காணி வாங்குதலுக்கான நிதி சேகரிப்பு பற்றிய விளம்பரங்கள் எல்லாவற்றையும் பார்க்கிறபோது ஆயாசமாக இருக்கிறது.<br /><br />*----*----*----*<br />பெற்றோர்-பிள்ளை உறவுச்சிக்கல்கள் பற்றிய இரண்டு சம்பவக் கோர்வைகள்<br /><br />சம்பவக்கோர்வை-1<br />மயூரன் வெளிநாட்டுக்குப் போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். என்ன வகையிலாவது வெளிநாடு போய்விடவேண்டும் என்கிற முனைப்பும், குடும்பச் சூழலும் அவனுக்கு. அந்த நேரம் அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் மூலம் ஒரு சம்பந்தம் வருகிறது. தன் பதின்மங்களில் கனடா போய் வளர்கிற ஒரு பெண்ணுக்கு அந்தப் பெண்ணின் பெற்றவர்கள் மணமகன் தேடுவதாக அந்த நண்பர் சொல்கிறார். சாத்திரமும் எல்லாப் பொருத்தமும் இருப்பதாகச் சொல்ல, மயூரனை இலங்கையில் வைத்து சங்கரி மணமுடிக்கிறாள். கனேடியக் குடிவரவு முறைகட்கு உட்பட்டு மயூரன் கனடாவுக்கு வருகிற எல்லா ஏற்பாடுகளையும் சங்கரி செய்து முடிக்கிறாள். மயூரனும் வந்து சேர்ந்து வேலைக்குப் போய்வந்து கொண்டிருக்கிறான். ஒருநாள் வேலையால் வீடுவந்தவனை ஒரு கடிதம் வரவேற்கிறது. சங்கரிதான் கடிதம் எழுதியிருக்கிறாள். தான் ஏற்கனவே ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், தன்னுடைய பெற்றோர் ‘மருந்து குடிப்போம்’ என்று மிரட்டிய காரணத்தால் மயூரனை மணம் முடித்ததாகவும், அவனுக்கு உதவி செய்யும் பொருட்டு அவன் கனடா வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகவும், இனிமேலும் மனதில் ஒருவனோடும் நிஜத்தில் மயூரனோடும் வாழ்கிற அருவருப்பான வாழ்க்கையைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், அதன் காரணமாக மயூரனை விட்டுத் தான் விலகிச் செல்வதாகவும் கடிதம் சொல்கிறது. மயூரன் இப்போதும் வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறார், இரவு நேரத் தண்ணீர் விருந்துகளில் சங்கரியின் நடத்தையை விமர்சித்தபடி.<br /><br />சம்பவக்கோர்வை-2<br />நர்மதாவின் தாயின் சகோதரிகள் கனடாவில் இருக்கிறார்கள். ‘குடும்பக் குத்துவிளக்கு’ என்கிற ஆண்சிங்கங்களின் வரையறைக்குள் அடங்கக்கூடிய பெண். நர்மதா திருமண வயதெய்தியதும் கனடாவில் மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் இனிதே நிறைவேறுகிறது. மயூரன் -சங்கரி போலவே கனடா மாப்பிள்ளை ரூபனும் நர்மதாவைக் கனடா வரவைக்கிறான். கனடாவில் வந்து இறங்கிய நர்மதாவை நேராக நர்மதாவின் சித்தி வீட்டில் விட்டுவிட்டு ரூபன் போய்விடுகிறான். ’அவருக்கு உன்னைப் பிடிக்கேலையாம். அவரிட அப்பா அம்மா சொல்லினபடியால் உன்னைக் கட்டினவராம்’ என்று சித்தி கனவுகளை உடைக்கிறாள். மூன்று மாதமாக அழுதபடி ஆங்கிலம் படிக்கிறாள் நர்மதா.<br /><br />இந்தச் சோடிகள் என்ன பிழை விட்டார்கள்? எதற்காக அவர்களின் வாழ்க்கை இப்படிச் சிதைக்கப்பட்டிருக்கிறது. சங்கரியாவது பரவாயில்லை, தன் மனதுக்குச் சரியென்று பட்டதைச் செய்திருக்கிறாள், சமூகத்தின் விச நாக்குகள் அவளின் நடத்தைக்குத் தரக்கூடிய சான்றிதழ் பற்றிய கவலைகள் இல்லாமல். அந்த வகையில் அந்தப் பெண்ணுக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள். நர்மதாவின் கதி என்ன? சாதாரண தமிழ்க் குடும்பத்தில் ஆண்களுக்குச் சேவை செய்ய மட்டும் சொல்லி வளர்க்கப்பட்ட, குடும்பவாழ்க்கை பற்றிய கனவுகளோடு விமானம் ஏறிய அந்தப் பிள்ளையின் நிலமை என்ன? ‘ஸ்பொன்சர் பண்ணிக் கனடாவில விட்டாச்சுத்தானே?’ என்று கேட்கிற ரூபனுக்கு என்ன பதில் சொல்வது. ரூபனைச் சமாதானப்படுத்தி நர்மதாவுக்கு ‘வாழ்வு’ பெற்றுத்தர நர்மதா குடும்பமும், ரூபன் குடும்பமும் முனைகிறார்கள். அது வெற்றிபெறக்கூடாது என்பதே என் விருப்பம். நிச்சயமாக அவர்களின் மணவாழ்க்கை நல்லபடியாக அமையவே அமையாது என்பதுதான் உண்மை.<br /><br />பிள்ளைகள் மீதான அக்கறை என்கிற பெயரில் பெற்றோர்கள் செய்கிற இந்த அட்டகாசங்களை என்னென்று சொல்வது? சின்னவயதில் இருந்து எல்லாமே பார்த்துப் பார்த்துச் செய்த அப்பா அம்மா இதில் மட்டுமா தீமை செய்வார்கள் என்று வாதிடலாம். ஆனால் மேற்படி இரண்டு சம்பவங்களிலும் ‘இந்தக் கலியாணம் நடக்காவிட்டால் மருந்து குடித்துச் சாவோம்’ என்று சொன்ன அதே பெற்றோர்கள், கலியாணம் குலைந்த பின்னரும் குத்துக்கல்லாட்டம் உயிரோடுதான் இருக்கிறார்கள். இப்படிப் பிள்ளைகளுக்குப் பிடிக்காத வாழ்க்கையை அமைத்துக்கொடுத்து ‘பெற்ற கடனை’ ஏன் நிறைவேற்ற வேண்டும்? இதை உண்மையான அக்கறை என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தன்னுடையதும் தன்னுடைய குடும்பத்தின் சுயலாபம் கருதி சங்கரியின் மனதில் என்ன இருக்கிறது என்பதுகூடத் தெரியாமல், சீதனம் எல்லாம் வாங்கி, நாக்கைத் தொங்கவிட்டபடி கலியாணம் கட்டிய மயூரன் ‘உவள் வேசைக்கு நல்ல பாடம் படிப்பிக்காட்டி பார்’ என்று நண்பர்களிடையே நாக்கில் நரம்பில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறான். நர்மதாவுக்கு ரூபனை வசைபாடுதற்குரிய சொற்களையே நாங்கள் உருவாக்கி வைக்கவில்லை. இதைத்தான் ‘கட்டுக்கோப்பான குடும்ப வாழ்க்கை என்று வெள்ளைக்காரன் எங்களைப் பார்த்து அதிசயிக்கிறான்’ என்று பீற்றிக்கொள்கிறோம். குலம், கோத்திரம், அந்தப் பொருத்தம், இந்தப் பொருத்தம், ஏன் யோனிப் பொருத்தம் எல்லாம் பார்த்துத் திருமணம் செய்கிற சமூகம், இற்றைவரை மனப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்து வைத்ததில்லை என்பதுதான் உண்மை. அதுவும் கணவனைப் பிரிந்து வாழ்கிற பெண்கள் மீது அவர்களின் நடத்தையைக் கேவலமாக்கி வைக்கப்படக்கூடிய அவதூறுகள் காரணமாக ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்’ என்று வாழ்கிற சகோதரிகள் எத்தனை பேர். ’என சகோதரி அனுபவிக்கிற துன்பத்தை நாளைக்கு இன்னொருவன் சகோதரிக்கு நான் கொடுக்ககூடாது’ என்பதை நித்திரைக்கு முன்னரும், நித்திரைக்குப் பின்னரும் சொல்லிக்கொள்கிறேன். எனக்குள் ‘ஒளித்திருந்திற’ குரங்கு ‘ஒழிந்து’ போகாமல், ஒரு பெண்ணின் கண் பார்த்துப் பேசமுடியாமல் இருக்கிறது.Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-37918829196278682402010-07-30T21:02:00.000-04:002010-07-30T21:07:00.442-04:00பொழுது போகாதவன் புலம்புகிறான்: 3<div style="font-family: inherit;">அனேகமாக வலையாட வருகிற தொடக்கத்தில் எல்லோருக்கும் பெரியார், சே மீதான ஈர்ப்பும் தானாகவே வந்து ஒட்டிக்கொள்வது இயல்பு. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. பெரியாரின் பல கருத்துகளில் இன்னும் ஈர்ப்பிருக்கிறது. ஆனால் அவரை முன்வைத்து அரசியல் செய்பவர்கள் பலரது கருத்துக்களைப் பார்க்கிறபோது பெரியார் மீதான ‘அப்பழுக்கற்ற புரட்சிக்காரர்’ விம்பம் சிதைவதையும் குறிப்பிட்டாகவேண்டும். பெண்ணடிமைத்தனத்தை உடைத்தல், மூட நம்பிக்கைகளை இல்லாதொழித்தல், சாதீயக் கட்டுமானங்களை தகர்த்தல் முதற்கொண்டு பல நல்ல கொள்கைகளோடு செயற்பட்ட, தனித் துதிபாடலை எதிர்த்ததாகச் சொல்லப்பட்ட பெரியாரின் பெயர், நேர்மாறு சாதீயத்துக்கும் மாற்றுக் குறையாத தனிமனிதத் துதிபாடலுக்கும் பயன்பட்டுக்கொண்டிருப்பது வருந்தத்தக்கது. பார்ப்பனர்கள் என்று பெரியார் மற்றும் பெரியாரியத்தைத் தொடர்பவர்கள், முற்போக்குவாதிகள் விளிப்பது யாரை என்று இப்போது யாராலேயும் சரியாக அடையாளங்கண்டுகொள்ள முடியவில்லை என்பது வருந்தத்தக்கது. பல ‘பெரியாரிஸ்டுகள்’ நிச்சயமாக ‘பிராமணர்’ என்கிற ஒரு சமூகத்தை மட்டுமே குறிவைத்துத் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து ஏனைய ஆதிக்க சாதி ஒடுக்குமுறையாளர்கள் பற்றிய சத்தங்கள் வருவதில்லை. பார்ப்பன எதிர்ப்பு என்றதும் ‘பூநூல்’ வந்து குந்திக்கொள்கிறது. பார்ப்பனியம் என்றால் என்ன என்று பாரி அரசு என்பவர் எழுதிய ஒரு சின்னப் பதிவை வினவு தளம் மேற்கோள்காட்டி இருந்தது. </div><div style="font-family: inherit;"><br />
</div><div style="color: black; font-family: inherit;"><i><span style="font-size: small;">“உணவு, உடை, உறைவிடம், பிறப்பு, இறப்பு, பண்பு, குணம், தொழில், பொருளாதாரம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, பண்பாடு, கல்வி, அறிவு, சிந்தனை, பாராம்பரியம், பரம்பரை, குலம், இனம், மொழி, மதம், நிறம்... இன்னபிற இப்படி எந்தவொரு காரணிக்கொண்டும் ஒரு மனிதனை உயர்ந்தவன் என்றும் இன்னொருவனை தாழ்ந்தவன்(இழிந்தவன்) என்றும் சித்தரிப்பது, பேசுவது, எழுதுவது, நடைமுறையில் கடைபிடிப்பது, பிரச்சாரம் செய்வது, கலையின் ஊடாக பதிவு செய்வது, இன்னபிற செயல்களின் வழியாக சமூகத்தில் ஏற்ற, தாழ்வுகளை உண்டு பண்ணுவதும் அதன் மூலம் சமூக உளவியலை சிதைத்து மனிதர்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர்(இழிந்தோர்) என்கிற பாகுபாட்டை உண்டாக்குவதுமான செயலே பார்ப்பானியம்! </span></i></div><div style="color: black; font-family: inherit;"><i><a href="http://draft.blogger.com/goog_412037433"><span style="font-size: small;"><br />
</span></a></i></div><div style="color: black; font-family: inherit;"><i><span style="font-size: small;">எ.கா: 1. சைவ உணவை உண்ணுபவர்கள் உயர்ந்த மனிதர்கள், அசைவ உணவை உண்ணுபவர்கள் தாழ்ந்தவர்கள்(இழிந்தவர்கள்) என்று கூறுவது. </span></i></div><div style="color: black; font-family: inherit;"><i><a href="http://draft.blogger.com/goog_412037433"><span style="font-size: small;"><br />
</span></a></i></div><div color="black" face="inherit"><i><span style="font-size: small;">2. கற்பூரத்தை கொளுத்தி, தீயில் நெய்யை ஊற்றி வழிபாடு செய்கிற செயலை உயர்ந்ததென்றும், அதை செய்பவரை உயர்ந்தோர் என்பதும்... கோயிலுக்கு ஆடு,கோழி வெட்டி வழிபாடு செய்வதை இழிந்த செயலாகவும் அதை செய்வோரை தாழ்ந்தவர் (இழிந்தவர்) என்பதுமான செயல். </span></i></div><div color="black" face="inherit"><i><a href="http://draft.blogger.com/goog_412037433"><span style="font-size: small;"><br />
</span></a></i></div><div color="black" face="inherit"><i><span style="font-size: small;">3. ஒரு மொழியை(சமஸ்கிருதம்)யும், அதிலுள்ள சில நூல்களை கற்றோரை மட்டுமே கடவுளுக்கு நெருக்கமான உயர்ந்தோராக கொள்வதும், இன்னொரு மொழி (தமிழ்) பேசுவோரை தாழ்ந்தவராகவும் கொள்வதுமான செயல். (நா.கண்ணன் என்கிற பதிவர் வடமொழியை இறைதன்மையுள்ள மொழி என்கிறார்... இறைதன்மையுள்ள மொழி ஏன் இறந்துபோனது?) </span></i></div><div style="color: black; font-family: inherit;"><i><a href="http://draft.blogger.com/goog_412037433"><span style="font-size: small;"><br />
</span></a></i></div><div style="color: black; font-family: inherit;"><i><span style="font-size: small;">குறிப்பு : இங்கே குறிப்பிட்ட செயல்கள் மட்டுமல்ல... எதுவொன்று ஒருவனை உயர்ந்தவனாகவும், இன்னொருவனை தாழ்ந்தவனாகவும் சித்தரிக்கிறதோ அதெல்லாம் பார்ப்பானியமே! அதை செய்வோர் பார்ப்பானியவாதிகளே!”</span></i> </div><div style="font-family: inherit;"><br />
</div><div style="font-family: inherit;">ஆனால், பார்ப்பனிய எதிர்ப்புப் பேசும் அத்தனை பேருமே பிராமணர்களை மட்டுமே குறிவைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது கண்கூடு. இல்லையென்றால் எங்கெல்லாம் இது பற்றிய பேச்சு எழுகிறதோ அங்கெல்லாம் பூநூலும், ‘பெயர்களும்’ வந்து குந்திக்கொள்ளாது. இத்தனைக்கும் மேற்படி விளக்கத்தை மேற்கோள்காட்டிய வினவுகூட எப்போதும் பார்ப்பனியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதி என்கிற புரிதல் வரும்வண்ணமே கட்டுரைகளை எழுதிவருவது குறிப்பிடத்தக்கது. அப்படிப் பார்க்கப்போனால் நான் பிறந்து வளர்ந்த ஊர் பார்ப்பன ஆதிக்கம் இல்லாத ஊர் என்றுதான் நான் சண்டை போடவேண்டும். ஏனெனில் பிராமணர்களுக்கு வெள்ளாளர்கள் அளவுக்கு செல்வாக்கு இருந்ததில்லை. காரணம் வெள்ளாளர்களில் அனேகம்பேர் நிலப்பிரபுக்களாக இருந்தார்கள். ஆனால் வெள்ளாளர்கள் மட்டும்தான் பார்ப்பனர்களாக இருந்தார்கள் என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. செல்வம் அருளானந்தம் தேவகாந்தனுடனான ஒரு பேட்டியில் பின்வருமாறு குறிப்பிடுவார்</div><div style="font-family: inherit;"><br />
</div><div style="color: #20124d; font-family: inherit;"><a href="http://padamkadal.blogspot.com/2010/03/01.html"><i>“எங்கள் ஊரைச்சுற்றி வெள்ளாம் ஆக்கள், கரையாம் ஆட்கள் பள் ஆக்கள், பறையாம் ஆக்கள் என எல்லோரும் கத்தோலிக்க ஆக்களாக இருப்பார்கள். இந்தப் பறையாம்; ஆக்களை வெள்ளாம் ஆக்களும் ஒதுக்குவாங்கள், கரையாம் ஆக்களும் ஒதுக்குவார்கள். அதைவிட மோசம் பள் ஆக்களும் அவர்களை ஒதுக்குவார்கள்”</i></a> </div><div style="font-family: inherit;"><br />
</div><div style="font-family: inherit;">மேற்படி செல்வம் வாழ்ந்த ஊரில், பாரி அரசு சொன்ன வரைவிலக்கணப்படி, ஒதுக்கப்பட்ட பறையர்களின் பார்வையில், வெள்ளாளர்கள், கரையார்கள் மற்றும் பள்ளர்கள் யாவருமே ‘பார்ப்பனர்கள்’ என்கிற வகைக்குள் வரவேண்டியவர்கள் என்பது என் கருத்து. </div><div style="font-family: inherit;"><br />
</div><div style="font-family: inherit;">ஆனால், இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சாதி மறுப்பு, தலித் உரிமைகளைப் பேசிவருகிற சிலர்கூட பார்ப்பனர் என்றால் பிராமணர்கள் என்கிற ரீதியில்தான் பேசி வருகிறார்கள். வடலி வெளியீடான ‘கொலை நிலம்: தியாகு-ஷோபாசக்தி முரண் அரசியல் உரையாடல்கள்’ என்கிற புத்தகத்தில் சோபாசக்தி குறிப்பிட்டதாக கீழ்வருகிற வசனம் வருகிறது. ’</div><div style="font-family: inherit;"><br />
</div><div style="font-family: inherit;"><i>‘அய்ரோப்பாவில் புலிகள் இந்துக் கோயில்களை நடத்துவதும் அங்கே பார்ப்பனர்கள் தேவ பாசையில் மந்திரம் சொல்லிக் கொழுப்பதும் சோசலிசத்தை நோக்கியதா அல்லது சாதியத்தை நோக்கியதா?’</i> (பக்கம் 65, பந்தி 1, வரிகள் 8,9,10,11).</div><div style="font-family: inherit;"><br />
</div><div style="font-family: inherit;">இங்கே ஷோபாசக்தியால் பார்ப்பனர் என்கிற சொல்லாடல் பிராமணரைக் குறித்தே பயன்பட்டிருக்கிறது. இலங்கையில் பிறந்த சாதாரணமான தமிழ்க் குடிமகன் ஒருவரிடம் ஒரு பிராமணனைக் காட்டி ‘உவன் ஒரு பார்ப்பான். உவனால்தான் எல்லாப் பிரச்சினையும். உவனை அடி’ என்று சொன்னால், நிச்சயம் அவ்வாறு சொல்பவர் விநோதமானவராகப் பார்க்கப்படுவார். காரணம், ஈழத்தில் பிராமணர்களாலான அடக்குமுறை மிக மிகக் குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அதேயளவுக்கு வெள்ளாள அடக்குமுறை இருந்துவந்திருக்கிறது. என்னுடைய கேள்வி, பாரி. அரசு சொல்கிற வரையறைக்குட்பட்டுப் பார்ப்பனியத்தைப் பார்த்தால் யாழ்ப்பாணத்து வெள்ளாளனும், பசும்பொன் தேவனும் ‘பார்ப்பனர்’ என்கிற வகைக்குள் அடக்கப்பட்டே அவர்கள் மீதான விமர்சனங்கள் வரவேண்டும். எனக்குத் தேவர்களைப் பற்றித் தெரியாது. ஆனால் வெள்ளாளரைத் தெரியும். அவர்கள் பூநூல் போடுவது சாவு வீட்டுச் சடங்கு, அந்தியோட்டி சபண்டீகரக் கிரியைகள் மற்றும் திவசங்களின்போது. அதுவும் பிராமணர்கள் கொடுக்கும் பூநூல் போட்டுத்தான் சடங்குகள் செய்வார்கள். பிராமணர் பூநூல் போடுவதுக்கும் சடங்குகளில் பூநூல் போடுவதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. வெள்ளாளர்களுக்கு ‘தேவ பாசை’ தெரியாது, மாமிசம் நன்றாகவே புசிப்பார்கள். பொதுவெளியில் வைக்கப்படுகிற பார்ப்பன விம்பத்துக்கும் இவர்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை. ஆகவே ஈழத்துச் சாதியம் பற்றிப் பேசுகிறவர்கள் ‘பார்ப்பனர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசித்தாகவேண்டும். பார்ப்பனர்கள் என்றதும் ‘பூநூல், தேவபாசை’ இரண்டும் மனதுக்கு வரும்படியாக ஒரு விம்பத்தைப் பொதுப்புத்தியில் சமைத்திருக்கிறார்கள் இன்றைய சாதி மறுப்பாளர்கள். ஆக, ஈழத்துச் சாதியம் பற்றிப் பேசும்போது பார்ப்பனர்கள் என்று பொதுப்படையாகப் பேசுவதில் சிக்கல்கள் இரண்டு:</div><ol style="font-family: inherit;"><li>பெரும்பாலும் கோயிலை ஒட்டியிருக்கிற வீடுகளில், கோயிலுக்கு அர்ச்சனைக்காக வருகிற பொருட்கள், திவசக் காணிக்கைகள், குரு தட்சிணை என்று மிகவும் கஷ்ட ஜீவனம் நடத்துகிற ஈழத்துப் பிராமணர்கள் மீது தவறான விம்பம் கட்டமைக்கப்பட்டுவிடும். (பணக்காரக் கோவில் அர்ச்சகர்களை இதற்குள் உள்ளடக்க வேண்டாம்)</li>
<li>வெள்ளாளர்களின் சாதீய அடக்குமுறை பற்றிய உண்மைகள் உறங்கிவிடும்</li>
</ol><div style="font-family: inherit;">ஆகவே ‘பார்ப்பான்’ என்கிற சொல்லாடலைக் கேள்விக்குள்ளாக்கி அதற்குரிய சரியான வரையறையைச் சமைக்கவேண்டிய கட்டாயம் சாதி மறுப்பாளர்களுக்கு இருக்கிறது. பார்ப்பான் என்றால் பிராமணன் என்று தொடர்ந்து பொதுப்புத்தியில் பதிந்து போய்விடுவதால், பிராமணர்கள் மீதான வன்மம் வளர்ப்பதும் ஒரு வகையில் சாதீயம் என்று சொன்னால், நான் பிராமணர்களுக்கு வக்காலத்து வாங்குவதாய் சொல்லுவார்கள் இன்றைய சாதி மறுப்பாளர்கள். ஆனால் அவர்களே அறியாமல், பிராமணர்கள் மீது பழியைப் போட்டு மற்ற ஆதிக்க சாதிகளின் அடக்குமுறைகளை மறைக்கிற வரலாற்றுத் தவறை அவர்கள் செய்துகொண்டிருப்பது கண்டனத்துக்குரியது. செல்வம் அருளானந்தம் வாழ்ந்த கத்தோலிக்கக் கிராமத்தில் எந்தப் பிராமணனும் செல்வாக்கோடு இருந்திருக்கவில்லை.</div><div style="font-family: inherit;">*----*----*----*</div><div style="font-family: inherit;"><br />
</div><div style="font-family: inherit;">இதே விடயம் சம்பந்தமாகப் பெரியாரது தீவிர சாதி மறுப்பாளராக நான் பார்த்த விம்பத்தை தன்னையறியாமல் தமிழ் ஓவியா உடைத்தபோது வலித்தது. அவர் எழுதிய ‘நமக்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன வேறுபாடு ?’ என்கிற பதிவில் கீழ்க்கண்ட வசனம் பெரியார் சொன்னதாக மேற்கோள் காட்டப்படுகிறது:</div><div style="font-family: inherit;"><br />
</div><div style="color: black; font-family: inherit;"><a href="http://thamizhoviya.blogspot.com/2010/07/blog-post_4217.html"><i>‘ஒரு பார்ப்பான் அவன் எவ்வளவு கீழ்மகனாக இருந்தாலும், மானமற்ற ஈனத்தொழில் புரிகிறவனாக இருந்தாலும் அவன்கூட ஒருக்காலமும் தன்னுடைய இனத்துக்கு, அதன் நலத்துக்கு, சவுகரியத்துக்கு, விரோதமான காரியம் செய்யமாட்டான். தன்னுடைய இனத்தை விட்டுக் கொடுக்க மாட்டான். காட்டிக் கொடுக்க மாட்டான்.’</i></a> </div><div style="font-family: inherit;"><br />
</div><div style="font-family: inherit;">பெரியார் என்ன சொல்ல வருகிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடிந்தாலும், “கீழ்மகனாக இருந்தாலும்”, “மானமற்ற ஈனத்தொழில் புரிகிறவனாக இருந்தாலும்” என்கிற வார்த்தைகளைப் பெரியார் சொன்னார் என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. தொழில் ரீதியாக மக்களைப் பிரித்து வைத்து வருணாசிரமம் சொன்னதென்று சொல்லிச் செய்யப்படுகிற அநியாயங்களைத் தட்டிக்கேட்கிறேன் என்று சொல்லிப் போராடிய ஒருவரின் வாயிலிருந்து ‘கீழ்மகன்’ ‘மானம்கெட்ட ஈனத்தொழில்’ என்கிற வார்த்தைகள் எல்லாம் எப்படி வந்தன? எப்படி ஒரு தொழிலை ‘ஈனத் தொழில்’ என்று சொல்லலாம். ஈனத் தொழில் என்று சொல்லப்படுகிற விபசாரத்தைக்கூட (விபசாரிகளிடம் போகிற கனவான்களை விடுங்கள். அவர்கள் ஈனர்கள் அல்லர்) தொழிலாகப் பார்த்து வரவு செலவுக் கணக்கெல்லாம் கேட்டவர் என்றுதானே பெரியாரைப் பற்றிச் சொல்லித் தந்தீர்கள் பெரியாரியர்களே??? </div><div style="font-family: inherit;"><br />
</div><div style="font-family: inherit;">தமிழ் ஓவியா ஒரு தீவிர தனிமனிதத் துதிபாடி என்பது பலருக்குத் தெரிந்ததே. கி.வீரமணியைத் தமிழினத் தலைவராகச் சித்தரித்துப் பரப்புரையாற்றும் ஒரு தொண்டர் என்பதும் தெரியும். ஒருவேளை ‘தன் தன்னிகரில்லாத் தலைவன் வீரமணியை’ உயர்த்தவென்றே பெரியார் சொல்லாத வார்த்தைகளையும் சேர்த்துச் சொல்கிறாரோ என்று அடிமனம் சமாதானப்பட முயன்றது. ஆனால் “30.08.1953 இல் ஆம்பூர் முகமதலி மைதானத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: “விடுதலை” 08.09.1953” என்று வலுவான ஆதாரத்தையும் காட்டி அந்த எண்ணத்திலும் மண்போடுகிறார் தமிழ் ஓவியா . அப்படியானால் பெரியார் போராடியது தன் சாதியை விட உயர் சாதியென சமூகத்தில் நிலை நிறுத்தப்பட்ட ‘பிராமணர்களுக்கு’ எதிராக மட்டுமா? ஒட்டுமொத்த சாதீயக் கட்டமைப்புகளுக்கு எதிராக இல்லையா? ‘கீழ்மகன்’ ‘மானம்கெட்ட ஈனத்தொழில்’ போன்ற வார்த்தைகள் பார்ப்பனியம் பற்றிய முழுப்பிரக்ஞை உள்ள ஒருவரிடமிருந்து எப்படி வந்திருக்க முடியும்? இது ஒருவகையில் நேர்மாறு சாதீயம் இல்லையா? போன்ற சந்தேகங்கள் வந்து விழத்தானே செய்கிறது. நல்லவேளை, பசும்பொன் முத்துராமலிங்கம் உட்பட பலரையும் கண்டித்திருக்கிறார். அதனால் முழுவதுமாகப் பெரியாரை மறுதலிக்காமல் இருக்கமுடிகிறது.</div><div style="font-family: inherit;"><br />
</div><div style="font-family: inherit;">வருணாசிரம விதிமுறைகள் சித்தரித்த ‘ஈனத் தொழில்களை’க் கேள்விக்குள்ளாக்கிய பெரியார் எப்படி அந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்? பெரியார் காலத்தில் பார்ப்பன ஆதிக்கம் அல்லது பிராமண ஆதிக்கம் பயங்கரமாக இருந்தது அதனால் அவர்களைப் பெரியார் திட்டியதில் தவறேயில்லை என்று சொல்லிச் சப்பைக்கட்டெல்லாம் கட்டவேண்டாம். என்னுடைய கேள்வி பெரியார் யாரைத் திட்டினார் என்பதல்ல. ‘மானம் கெட்ட ஈனத் தொழில்’ என்று எதைச் சொல்கிறார்? உடனே சொல்வீர்கள் ‘பார்ப்பனர் அல்லது பிராமணர்’ செய்கிற தொழில்களைத்தான் பெரியார் ஈனத்தொழில் என்றார் என்று. ‘பார்ப்பான் முதலில் எங்கள் தொழில்களை ஈனத் தொழில் என்றான், அதனால் அவனது தொழில்களை ஈனத் தொழில் என்றோம். பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தம், கண்ணுக்குக் கண்’ என்ற வீரவசனம் எல்லாம் வேண்டாம். மேற்படி வார்த்தைகளைப் பெரியாரே சொல்லியிருந்தாலும், அவர் மீது என்ன அபிமானம் இருந்தாலும், அந்த வார்த்தைகள் தவறென்ற பிரக்ஞை இல்லாமல் அந்த வார்த்தைகளைக் கொண்டாடுவதை என்னென்று சொல்லலாம்? நேர்மாறு சாதீயம் என்பதைத் தவிர!</div><div style="font-family: inherit;"><br />
</div><div style="font-family: inherit;">*----*----*----*</div><div style="font-family: inherit;">பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி- அன்றைக்குப் பெரியார் சொன்னது. இன்றைய பெரியாரியர்களைக் பார்த்தால் இன்னொன்றையும் சேர்த்திருப்பார் பெரியார்; பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி, பார்ப்பானையும் பெரியாரியனையும் கண்டால் பெரியாரியன் நின்ற இடத்தில் புல்பூண்டு முளைக்காமல் ஏதாவது குண்டு போடு என்று. </div>Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-66425569714379794782010-07-24T07:19:00.000-04:002010-07-24T07:22:58.436-04:00பொழுது போகாதவன் புலம்புகிறான்: 2பேராசிரியர் சிவத்தம்பியின் இந்த உரைக்கும் (நன்றி: இரமணி)<br />
<br />
<object height="385" width="480"><param name="movie" value="http://www.youtube.com/v/adu-A6qspk8&hl=en_US&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/adu-A6qspk8&hl=en_US&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object><br />
<br />
இந்தக் <a href="http://wwfocus.blogspot.com/2010/05/blog-post.html">கவிதைக்கும்</a><br />
<br />
<div style="color: purple;">அன்றலர்ந்த ஆச்சா மரம் போல வீழ்ந்தானோ அவன்!</div><div style="color: purple;">போச்சா, உள்ளிழு மூச்சு விடுவெளிமுன்னே</div><div style="color: purple;">வீச்சாய்ச் செல்களம் மாறி</div><div style="color: purple;">ஒளிந்திருந்தம்பெய்வான் பாதம்</div><div style="color: purple;">இன்றே போய் நன்றே புக்கிப்</div><span style="color: purple;">புலம் தொழுது வாழ் புல்லர். </span> <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/_kgjG5LwxBcA/S-tfIOaL-JI/AAAAAAAAAF0/kH1ozB-Ovyo/s1600/SoldOut1.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_kgjG5LwxBcA/S-tfIOaL-JI/AAAAAAAAAF0/kH1ozB-Ovyo/s320/SoldOut1.gif" width="315" /></a></div><br />
<div style="color: purple;">மல்லாக்காய் வீழ்ந்து மாண்டான் மாநிலவேந்தன்</div><div style="color: purple;">இராவணன் இல்லாத்தலையையும் முள்கோலிக் கொய்து</div><div style="color: purple;">தம்படி செப்படிவித்தை செல்லுபடியாக்கும்</div><div style="color: purple;">பொல்லாவிபீஷணர் சுருக்குவால்களிலே</div><div style="color: purple;">வல்லான் என்னான் கல்லாலனைக் கொல்</div><div style="color: purple;">தர்மம் எல்லாம் நியாயமென்றோதிப் பறக்கிறது</div><div style="color: purple;">இரவினும் பகலிலும் எல்லாப்பொழுதிலும்</div><div style="color: purple;">கிழியக் கட்டிய இரவற்பீதாம்பரம்.</div><div style="color: purple;"><br />
</div><div style="color: purple;">பெருகு தாரை உருகிச் சபித்த இராமன்கள்ளேறு</div><div style="color: purple;">ஆண்குறிதன் அடிமுடி சவரம் செய்யப் பெருகுவது,</div><div style="color: purple;">மாரீசத்தூதுவேடத்தே வெஞ்சினமாய்</div><div style="color: purple;">தம்போக்குவாழாளையும் அழுகுழவியையும்</div><div style="color: purple;">எல்லாம் சமமென்று தீயேற்றிக் கழி</div><div style="color: purple;">இலங்கா(த்)தகனத்து களிகொள் மாருதி வாலல்ல;</div><div style="color: purple;">எதிர்வீடிரவு விபீஷணர்தம் சொற்சிற்பத்துச்சிப்பம்.</div><div style="color: purple;">இழவெடுவில்லத்தே இருப்புக்காய்</div><div style="color: purple;">ஏற்றுக்கொண்ட இராமகீதங்களை,</div><div style="color: purple;">கால் சுற்றிவளைக்கடி க்ருதிகளை</div><div style="color: purple;">கருணை கொள் கசட்டுநிதிதரு</div><div style="color: purple;">வல்லோர் எல்லாம் நல்லோரென்று</div><div style="color: purple;">எனக்குப் புகட்டமுன்னே,</div><div style="color: purple;">இதைச்</div><div style="color: purple;">சொல்வேன் கேளும்:</div><div style="color: purple;"><br />
</div><div style="color: purple;"><span style="font-style: italic; word-spacing: normal;">"வாய்க்கால் சிவந்த முள்ளுக்களமேனும்</span></div><div style="color: purple;"><span style="font-style: italic; word-spacing: normal;">கால்வாய் கடந்திழியும் பனிநிலப்புலமேனும்</span></div><div style="color: purple;"><span style="font-style: italic; word-spacing: normal;">பிறழாச்சொல்நீதி பொருந்தாச் செய்கடமை</span></div><div style="color: purple;"><span style="font-style: italic; word-spacing: normal;">கொல்லப்புல்தின்ற கும்பகர்ணன் விட்ட</span></div><div style="color: purple;"><span style="font-style: italic; word-spacing: normal;">கடைசிக்குசுவெனக் கொ<s style="word-spacing: normal;">ள்</s>ல்க என்னை.</span></div><div style="color: purple;"><br />
</div><div style="color: purple;"><span style="font-style: italic; word-spacing: normal;">அவப்பொழுதே</span></div><div style="color: purple;"><span style="font-style: italic; word-spacing: normal;">மணத்திருப்பேன் </span></div><div style="color: purple;"><span style="font-style: italic; word-spacing: normal;">நும்மூக்கில்"</span></div><br />
சம்பந்தம் இல்லையென்று நான் சொல்லி நீங்கள் நம்பவா போகிறீர்கள்?<br />
<br />
அது சரி... எப்படி பேராசிரியர் என்ன பேசப்போகிறார் என்று கவி யாத்தவருக்கு முன்னமே தெரிந்தது??? பேராசிரியரின் பேச்சுக்கு சில வாரங்கள் முன்னமே விமர்சனம் செய்திருக்கிறார் கவிதையில். இதைத்தான் காலத்தை வென்ற படைப்பு என்பார்களோ???Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-46495124872437238342010-07-18T11:52:00.001-04:002010-07-18T19:50:56.994-04:00மக்கள் போராட்டம் ஒன்றின் "மகத்தான" பின்விளைவுகள்தியனன்மென் சதுக்கத்துப் படுகொலைகள் பற்றிய ஆவணப்படம். மாணவர்கள், உழைக்கும் வர்க்கம், அறிவுஜீவிகள் என <b><span style="color: red;">சாமன்ய</span></b> மக்கள் அடக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த போது..............................<br />
<br />
<object height="385" width="480"><param name="movie" value="http://www.youtube.com/p/5804EFEC9CE866DC&hl=en_US&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/p/5804EFEC9CE866DC&hl=en_US&fs=1" type="application/x-shockwave-flash" width="480" height="385" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-54238704619392977142010-07-17T11:42:00.001-04:002010-07-17T11:47:22.220-04:00பதிவுலகில் நான் அப்படிப்பட்டவன் இப்படிப்பட்டவன்...<b><span style="font-size:small;"></span><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?</span></span></span></b><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">ஆரம்பத்தில் Keith Kumarasamy பின்னர் கீத் குமாரசாமி, அடுத்து கிருத்திகன் குமாரசாமி, தொடர்ந்து Kiruthikan Kumarasamy கடைசியாக கிருத்திகன்</span></span></span><br /><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">அந்தப் பெயர்தான் உங்கள் பெயரா? இல்லை பதிவில் தோன்றும் பெயரை வைக்க என்ன காரணம்?</span></span></span></b><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">அந்தப் பெயர்கள் என் பெயர்கள் அல்ல. என் பெயர் <i style="color: red;"><b>பிரபல பதிவர் குமாரசாமி கிருத்திகன்</b></i>. என்னுடைய பதிவுகளின் ‘ஆழத்தையும்’ ‘அர்த்தத்தையும்’ புரிந்துகொண்டு படைப்புலகம் வழங்கிய சின்னப் பட்டங்கள்தான் அந்தப் பெயர்கள்.</span></span></span><br /><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">நீங்கள் தமிழ் வலைப் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?</span></span></span></b><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">சிறுவயதில் இருந்தே நான் நிறைய எழுதுவேன். 1989ம் வருடம் தங்கவேலின் நேர்சரியில் ‘<span style="font-weight: bold; font-style: italic;">அம்மா</span>’ (ammaa) எழுதியதைப் பார்த்தே ஜெயமணி ரீச்சர் சொன்னார்கள் “பிற்காலத்தில் நீ பெரிய பதிவனாக வருவாய்” என்று. அப்போது விதைக்கப்பட்ட கனவு செடியாகி, விருட்சமாகி வளர்ந்தது. மூன்றாம் வகுப்பில் தேன்மதி ரீச்சர் “what is your name?" என்று கேட்க “my name is Famous Blogger Kumarasamy Kiruthikan" என்று சொன்னேனாம். வீட்டில்கூட என்னை ‘பிரபல பதிவர் குமாரசாமி கிருத்திகன்’ என்றே அழைத்தார்கள். <i style="color: red;">I eat pathivulagam, I drink pathivulagam, I sleep pathivulagam, I shit pathivulagam</i>. அதோடு சின்ன வயதிலேயே என்னிடம் எதிர்ப்புக் குணம் நிறைய இருந்தது. அய்யோ பெருமாளே.. ஏன் ஜனங்களுக்கு இவ்வளவு அலட்சியம். யாருக்கும் ஒழுக்கமில்லை, யாருக்கும் பொறுப்பில்லை, யாருமே rulesஐ follow பண்ணுவதில்லை என்று விசனப்பட்டபடியே இருந்தேன். ஆகவே என் மக்களை, என் நாட்டை, ஏன் இந்த உலகத்தையே உய்விக்க, நான் பதிவுலகு வருவது தவிர வேறு எந்த option அவர்களுக்கு இருக்கவில்லை. பதிவுலகத்துக்கு வருவது நான் எடுத்த முடிவில்லை. மக்களாக எடுத்த முடிவு. </span></span></span><br /><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">உங்கள் வலைப்பதிவைப் பிரபலமடையவைக்க என்னவெல்லாம் செய்தீர்கள்?</span></span></span></b><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">இதற்குப் பதில் சொல்ல ஒரு வலைப்பதிவு காணுமா தெரியவில்லை. நான் எழுதிய படைப்புகள் எல்லாமே காலத்தால் அழியாதவை. ஏனென்றால் அவற்றை நான் தமிழ்மணம் மூலம் pdf கோப்புகளாக்கி ஐந்தாறு கணனி வன்தட்டுக்களில் சேமித்து வைத்திருக்கிறேன். அட, தமிழ் மணம் pdf என்றதும்தான் ஞாபகம் வருகிறது. திரட்டிகளில் என் பதிவை இணைத்ததன் காரணமாகவே நான் ‘மிகப் பிரபல பதிவர்’ ஆனேன். ஏன் என்னை ஒரு ஜந்து போல் பார்க்கிறீர்கள்? நான் சொல்கிற பொய் தெரிந்துவிட்டதா? அட. வலு கெட்டிக்காரர் நீங்கள். திரட்டிகளில் இணைந்தேன் பிரபலமானேன் என்பதெல்லாம் சுத்தப் பொய். பிரபலமாவதற்கு வேறுசில பிரபலமான வழிமுறைகள் இருக்கின்றன. விளக்குகிறேன் வாருங்கள்.</span></span></span><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;"><br /></span></span></span><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">பிரபல பதிவர்களைத் தேடிப்பிடித்தல்</span></span></span></b><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">எதிர்காலப் பிரபல பதிவரான நீங்கள் நிகழ்காலப் பிரபல பதிவர்களைத் தேடிப் பிடித்து அவர்களைப் பின் தொடரவேண்டும். அவர்களுக்கு ‘அக்கா, அண்ணா’ என்றெல்லாம் விளித்துப் பின்னூட்டம் இடவேண்டும். அதுவும் யாராவது ஒரு so called பிரபல பதிவர் பின்னூட்டம் போட்டால் ‘<a href="http://kiruthikan.blogspot.com/2009/06/blog-post_06.html">ஜென்ம சாபல்யம் அடைந்தேனே</a>’ என்று பணியத் தெரிய வேண்டும் (பின்னூட்டம் படிக்கவும்). ஆகக்குறைந்தது ஒரு 300 வலைப்பதிவுகளையாவது தொடரவேண்டும். முடிந்தால் யாராவது பிரபல பதிவர்களைத் தாக்க முயலலாம். இப்படித் தாக்கும்போது அந்த வலைப் பதிவர்கள் பற்றி இன்னும் கொஞ்சம் தேடுதல் நலம். ‘சுனா தீனா’ என்ற பெயரைப் பெண்ணென்று நினைத்து ‘தோழி’ என்றெல்லாம் விளித்து ‘நானும் ரவுடிதான்’ என்று காட்டினால், வால்பையன் வந்து ‘</span></span><a href="http://kiruthikan.blogspot.com/2009/05/blog-post_28.html">முதல்ல அவரு தோழி சுகுணா கிடையாது!சுகுணா திவாகர் என்ற புனை பெயரில் எழுதும் பத்திரிக்கை நிருபர்!அவரு எழுதும் முன் ஆயிரம் முறை யோசித்திருப்பார்!</a>’ </span><span style="font-size:small;"> <span style="color: rgb(68, 68, 68);">என்று மூக்குடைப்பார். கவனமாக இருக்க வேண்டும். </span></span><br /><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">பின்னூட்ட மாயம்</span></span></span></b><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">வலைப் பதிவுகளைத் தொடரத் தொடங்கியதும், தொடர்கிற வலைப் பதிவர்களைப் புகழ்ந்து, குழைந்து பின்னூட்டம் இடவேண்டும். உதாரணமாக ஒரு சினிமா விமர்சனத்துக்கு <i style="color: rgb(53, 28, 117);"><b>‘இன்னும் படம் பார்க்கவில்லை. அருமையான விமர்சனம்’</b></i> என்கிற </span></span></span><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">Template</span></span></span><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;"> பின்னூட்டம் மிக அவசியம். படத்தையே இன்னும் பார்க்கவில்லை, அதற்குள் எப்படி விமர்சனம் அருமையா இல்லையா என்று சொல்வது என்றெல்லாம் அறிவுபூர்வமாகச் சிந்தித்தால் நீங்கள் பிரபலமாகமுடியாது. அதே போல் நீங்கள் தொடரும் பதிவர்களுக்கு வலையுலகத்தில் ஏதாவது பிரச்சினை என்றாலோ, இல்லை வலையுலகத்தில் ஏதாவது ஒரு பொதுப் பிரச்சினை என்றாலோ வலியப் போய் கருத்துச் சொல்லவேண்டும். கருத்துகளில் காட்டமான வார்த்தைப் பிரயோகம் இருந்தால் மட்டுமே போதும். ‘பருத்தித்துறை வீதியில் கொடிகாமச் சந்தி கடந்ததும் கோப்பாய் வருகிறது’ போன்ற பிழைகளையெல்லாம் கவனிக்காமல் எதிராளியைத் தாக்குவதிலேயே குறியாக இருக்கவேண்டும். ’நான் தான் பர்ஸ்டா’ 'me the first' போன்ற அர்த்தம் மிகுந்த பின்னூட்டங்கள் தீராத் தேடலும், அதன் மூலம் கிடைக்கிற ஆழ்ந்த அறிவும் உங்களைத் தொடமுடியாத உயரத்துக்குக் கொண்டுபோகலாம்.</span></span></span><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;"><br /></span></span></span><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">சினிமா விமர்சனம்</span></span></span></b><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">நிறைய சினிமா விமர்சனம் படித்து, அவரது பதிவில் கொஞ்சம், இவரது பதிவில் கொஞ்சம் என்று திருடி, படம் பார்க்காமலே ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதத் தெரியவேண்டும். முக்கியமாக 2004ல் வந்த ஒரு ஆங்கிலப் படத்தைச் சுட்டு 1996ல் தமிழில் படம் எடுத்தார்கள் என்று ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை வைத்தேயாகவேண்டும். ஆங்கிலப் படங்களின் பெயர்களை எங்கேயாவது தேடிப்பார்த்து விக்கிபீடியாவில் கதைச் சுருக்கம் வாசிக்கப் பழகிக்கொள்ளல் நலம். கேபிள் சங்கரின் வலைப் பதிவுகளை வாசித்து சினிமாவின் technical terms கொஞ்சம் உருவிக்கொள்ளலாம். தொடர்ந்து சினிமாப் பதிவுகளில் காரசாரமாக விமர்சித்து புகழ் பெறலாம்.</span></span></span><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;"><br /></span></span></span></b><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">சுயத்தை இழத்தல்</span></span></span></b><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">உங்களுடைய அடையாளங்களைத் துறந்து எழுதப் பழகவேண்டும். உங்கள் வழக்கில் இல்லாத சொற்களை எழுதப் பழகவேண்டும்.<span style="color: rgb(68, 68, 68);"> (</span></span></span></span><span style="color: rgb(68, 68, 68);">'டவுன்', '‘ஆல் சிலோன் டூர்', 'வேன்', 'ஆர்மி', 'செம பசி''ரொம்பவே', 'பூரா ரொம்பவே செக்ஸியாக குஜிலிங்க சிரிச்சது (அட, ஃபோட்டோல தாங்க). பின்னர் யாராவது கேள்வி கேட்டால் அதை நியாயப்படுத்தத் தெரியவேண்டும். வாசிக்கிற ஒரு சாராருக்கு ஒரு நடையிலும், இன்னொரு சாராருக்கு இன்னொரு நடையிலும் எழுதத் தெரிந்திருத்தல் உத்தமம். ’என்னுடைய வாசகர்களுக்குத் தானே நான் எழுதமுடியும்?’ ‘இப்போது அங்கே இப்படித்தான் பேசுகிறார்கள். உங்களுக்கு என்ன தெரியும்?’ என்றெல்லாம் கேள்விகேட்டு வாயை அடைக்கவேண்டும். அப்படிக் கேள்விகேட்டால் பின்பக்கம் புண்ணாகும். அதுபற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது.</span><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;"> ’மாட்டாய்ங்க, வருவாய்ங்க, போவாய்ங்க, மக்கா போன்ற வட்டாரவழக்குச் சொற்கள் இருப்பது அவசியம். (ஆஷ்-அபி ஜோடி ச்சோ க்யூட்). உதாரணம் கேட்பீர்களேயாயின் <a href="http://kiruthikan.blogspot.com/">இந்த வலைப் பதிவில்</a> சனிக்கிழமை ஆவணி 8, 2009 க்கு முன்னான அனைத்துப் பதிவுகளையும் வாசித்துப் பார்க்கலாம். (ஆள் நல்ல யாவாரி)</span></span></span><br /><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">மொக்கை</span></span></span></b><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">மொக்கை என்ற பெயரில் ஏதாவது புலம்பத் தெரிய வேண்டும். அருமையான உதாரணம்.... ஹி ஹி.. இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பது. (அதையும் சொல்லித்தான் தெரியோணுமே? என்ன சனமடா இது)</span></span></span><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;"><br /></span></span></span></b><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">நானும் றவுடி</span></span></span></b><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">வலையுலகச் சண்டைகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தல் மிக மிக அவசியம். பார்ப்பான், நர்சிம், மூர்த்தி, போலி, முல்லை, சுந்தர் மூக்கு, பர்தா, ரோசாவசந்த் போன்ற சில வரலாறுகளை இந்தப் பதிவை வாசிக்கிற புதிய பதிவர்கள் வாசிப்பது நலம். அப்படியென்றால்தான் இன்னொரு சண்டையில் கருத்துக் குருத்துச் சொல்லலாம். கமல்ஹாசன், மணிரத்னம் படங்கள் வருகிற காலங்களில் மிகவும் விழிப்பாக இருந்தால் உங்களை றவுடியாக நிலைநிறுத்திக்கொள்ளலாம். எந்த வலைச் சண்டைபற்றியும் துணிந்து பதிவிடுங்கள், திட்டு வாங்கியோ பாராட்டு வாங்கியோ பிரபலமாகலாம். </span></span></span><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;"><br /></span></span></span><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;"><b>Template இடுகைகள் மற்றும் விருதுகள்</b></span></span></span><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">‘பதிவர் அருண்மொழிவர்மன் எழுதிய அ ஆ இ ஈ உ ஊ இடுகையில் இருக்கிற ‘ம்’ என்ற எழுத்து என்னை எழுதத் தூண்டியது’ என்றோ, அல்லது ‘அன்பு அண்ணன் வந்தியத்தேவனின் அழைப்பை ஏற்று’ என்றோ ஆரம்பிக்கிற இடுகைகளை எழுதத் தெரியவேண்டும். (சுதனையும், வந்தியைம் போட்ட சண்டைக்கு வரமாட்டினம் எண்ட நம்பிக்கை) ஏனென்றால், அதற்கு ஒரு வலுவான காரணமிருக்கிறது. ஓமோம், வலுவான காரணமிருக்கிறது. (நன்றி: மெ.மு.). கண்ட கண்ட பேரில் விருதுகளை உருவாக்கி ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி விருது கொடுத்துக்கொள்ள வேண்டும். விருது பெறும்போதெல்லாம் ‘<a href="http://kiruthikan.blogspot.com/2009/07/blog-post_14.html">கத்துக்குட்டிக்கெல்லாம் விருது தந்த இன்னாருக்கு நன்றி’, ‘என்னைக் கௌரவப் படுத்திய அன்னாருக்கு நன்றி’</a> என்றெல்லாம் அவைக்கடங்க வேண்டும். விருதுகள் அத்தனையும் உங்கள் வலைப்பூவின் sidebar ஐ அலங்கரிக்கவேண்டும். (சுள்ளான் கொடுத்தது, கொக்கா C கொடுத்தது, அவர் தந்தது, இவரிட்ட வாங்கினது). இத்தனைக்கும் ஒரு விருதை நிறுவ Google images Microsoft paint இரண்டுமே போதுமானது. </span></span></span><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;"><br /></span></span></span><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">முதுகு சொறிதல், திரட்டிகள், ஓட்டு & கள்ள ஓட்டு, Hits Counter</span></span></span></b><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">ஒரு குழுமம் சேர்ப்பது நீங்கள் பிரபலமாக மிக அவசியம். அந்தக் குழுமம் மட்டுமே உங்களுக்கு ஓட்டுப் போட்டு திரட்டிகளில் முன்னுக்குக் கொண்டுவர அயராது உழைக்கும். முக்கியமாக தமிழ் மணத்தில் பல கள்ளப் பெயர்களில் கள்ள ஓட்டு போடத் தெரிந்திருந்தல் நீங்கள் எழுதுகிற எல்லா இடுகையும் ‘வாசகர் பரிந்துரையில்’ இடம்பெறும். அடுத்து ‘30,000 ஹிட்டுக்களை அள்ளிக்கொடுத்த், 300,000 ஹிட்டுக்களைக் கொட்டிக்கொடுத்த’ போன்ற வசனங்கள் எழுதத் தெரியவேண்டும். அப்படியென்றால்தான் வாசிக்கிறவன் எல்லாம் ‘இவன் பெரிய ஆள்’ என்று நம்புவான். ‘முலைக்கு வேலை’ என்று தேடி வந்தவனை ‘மூளைக்கு வேலை’ பக்கத்துக்கு கூகிளாண்டவர் அனுப்ப, அவன் தேடிய முலை இது இல்லை என்று அவன் 10-15 seconds மட்டுமே உலாவிவிட்டுப் போய்விடுவான். இதெல்லாம் hits counterல் one more visit தான். இந்த மாயைகளெல்லாம் யாருக்கும் தெரியப்போவதில்லை. ஆகவே இந்த hits பற்றிப் பீற்றிக்கொண்டாலும் உங்களைப் பிரபல பதிவராகக் காட்டிக்கொள்ளலாம். </span></span></span><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;"><br /></span></span></span><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">இப்பிடியே எழுதிக்கொண்டிருந்தால் பதிவு முடிஞ்சமாதிரித்தான். அதாலை நீங்களும் பிரபலமாவதற்குரிய <strike>குறுக்கு வழிகளை</strike>, வழிகளை உங்கள் தேடல் மூலம் கண்டறியுமாறு கேட்டுக்கொண்டு (உ-ம்: யாரும் அழைக்காமலே தொடர்பதிவு எழுதுதல்).....</span></span></span><br /><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;"> </span></span></span><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">வலைப்பதிவு மூலம் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்ததுண்டா?</span></span></span></b><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">யாரைப் பார்த்து என்ன கேள்வி. இவ்வளவு நேரமும் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன். நிறைய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறேன். அவை யாரைக் காயப்படுத்தியதோ இல்லையோ என் குடும்பத்தைக் காயப்படுத்தி இருக்கின்றன. (மே.ப. வசனம் இந்தப் பதிவின் mood இலிருந்து மொத்தமும் விலகியது. நான் எழுதிய ஒரு பதிவுக்கு ‘கொப்பன் (கெட்டவார்த்தை) குமாரசாமி கள்ள உறுதி எழுதிற மாதிரி நீ மெய்யெண்டு புலம்புறாய் என்ற தன் பெயர் வெளியே சொல்லாக் கோழைகளின் பின்னூட்டம் காயப்படுத்தியது. என் கருத்தும் பெற்றவன் கருத்தும் ஒன்றில்லையே). Back to original mood.... முக்கால்வாசிப்பேர் நாங்கள் சொந்தக் கதைதான் எழுதுவோம். கூடப் படித்த நண்பனை சாதி காட்டிக் கொன்று போட்டுவிட்டு, சாதியை உடைக்க வசனம் பேசுவோம். Treadmill, Snooker, Cricket, Football, ARR Music, Slum dog Millionaire, Clooney, Star Movies, Star Sports, Coke, Pepsi குடிக்கிற வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, ‘யாழ்ப்பாணத்தில் சாதி இல்லை’ என்போம். எங்கள் வீட்டுப் பெண்களை நாங்களே அடக்கிவிட்டு, ‘ஆணாதிக்க எதிர்ப்புப் பதிவு’ எழுதுவோம். ‘பெண்களை அடிமைப் படுத்தியதில் ஆண்களுக்குப் பெரும் பங்கு உண்டு’ என்பதை ஒரு ஆண் ஒப்புக்கொண்டு தன்னைச் சுய விமர்சனம் செய்ய முயன்றால் ‘பெண் விடுதலையில் ஆணுக்கென்ன அக்கறை. இது பெண்களை இன்னும் கோழையாக்கும் முயற்சி’ என்று கண்டிப்போம். மொத்தத்தில் ஒருத்தன் திருந்தினாலும் பிழை, திருந்தாவிட்டாலும் பிழை என்று உளறிக்கொட்டிக்கொண்டே...................... இருப்போம். இதெல்லாம் சொந்த அனுபவங்களைப் பகிர்தலும், பகிர்தலால் வருகிற வினைகளும்.</span></span></span><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;"><br /></span></span></span><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">பொழுதுபோக்குக்காக பதிவு எழுதுகிறீர்களா? சம்பாதிப்பதற்கா?</span></span></span></b><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">சம்பாதிக்கத்தான். பெயர், புகழ் எல்லாம் சம்பாதிக்கத்தான். எப்படியாவது ஒரு நாளைக்கு பெரிய ‘இலக்கியவாதி’ ஆகி பணம் சம்பாதிக்கத்தான். (<strike>வேலை வெட்டி இல்லாமல் பொழுது போகாமல் திண்டது தினவெடுக்கத்தானே இருந்ததாலதானே வலையுலகுக்கே வந்தேன், அது தெரியாமல் கேள்வியைப் பார்</strike>)</span></span></span><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;"><br /></span></span></span></b><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">மொத்தம் எத்தனை வலைப்பதிவுக்கு நீங்கள் சொந்தக்காரர்?</span></span></span></b><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">இரண்டுக்கு மேல் வைத்திருக்க வசதியில்லை. ஒரே ஒரு blogger id தான் இருக்கிறது. கண்டபடி திட்டிப் பின்னூட்டம் போட பல id களை எப்படி வேறு வேறு IP முகவரிகளைப் பயன்படுத்தி உருவாக்குவது என்றே தெரியவில்லை. ஒரு வலைப் பதிவில் நான் எழுதுவதையே சில சமயம் படிக்க முடிவதில்லை. இதுக்குள்ள எத்தனை வலைப்பதிவு என்று கேள்வி வேற....</span></span></span><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;"><br /></span></span></span><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">மற்றப் பதிவர்கள்மீது கோபம் அல்லது பொறாமை உண்டா? ஆம் என்றால், யாரந்தப் பதிவர்?</span></span></span></b><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;"><strike>யார்மீதும் எனக்குப் பொறாமை இல்லை. ஒவ்வொருவரையும் போல் எழுதவேண்டும் என்ற ஒரு ஆர்வம் மட்டும் இருக்கிறது</strike>.............. நோ நோ.. யார்மீதும் எனக்குப் பொறாமை இல்லை. என்மீதுதான் எல்லாரும் பொறாமை கொண்டே அலைகிறார்கள். என்னுடைய பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்க சதி நடந்துகொண்டே இருக்கிறது. யாரும் என் பதிவுகளுக்கு ஓட்டுப் போடுவதில்லை, யாருக்கும் பொறுப்பில்லை, யாருக்கும் ஒழுக்கமில்லை, யாருக்கும் அறிவேயில்லை. அதனால் எல்லாப் பதிவரிலும் கடும் கோபம். </span></span></span><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;"><br /></span></span></span></b><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">உங்களை முதலில் தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? என்ன பாராட்டினார்?</span></span></span></b><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">என்னைப் பாராட்டாத ஆளே கிடையாது. என்னுடைய பல கட்டுரைகளைப் படித்துவிட்டு எர்னெஸ்டோ சே குவேரா பல தடவை தொடர்புகொண்டு பாராட்டியிருக்கிறார். தாஸ்தயேவ்ஸ்கிக்கும், மிஷெல் பூக்கோவுக்கும், நீட்ஷேயுக்கும் என்னுடைய எழுத்துக்கள் என்றால் உயிர். யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, பெரியார் போன்றோர் என்னை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். இதைவிட என்ன வேண்டும் எனக்கு? (<strike>இந்தப் பெயர்களைத் தேடித்தந்த கூகிளாண்டவருக்கு நன்றி. என்னையெல்லாம் யார் பாராட்டினான்? அந்தளவுக்கு நான் கூட்டம் சேர்க்கவில்லை. சேர்த்த கொஞ்சப் பேரும் சும்மா ஒப்புக்குச் சப்பாணியாப் பாராட்டுறாங்களே ஒழிய ஒரு மசுத்துக்கும் பிரயோசனமில்லை. என்னால் தண்ணியும் வாங்கிக் கொடுக்கமுடியாது. பிறகு?</strike>) (<a href="http://tinypaste.com/2df6d">நான் பாராட்டினேனே</a> என்று இரமணி சொல்வது கேட்கிறது).</span></span></span><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;"><br /></span></span></span><br /><b><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">பதிவுலகத்துக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?</span></span></span></b><br /><span style="font-size:small;"><span class="Apple-style-span" style="color: rgb(71, 71, 71);font-family:Arial,Verdana;" ><span class="Apple-style-span" style="line-height: 20px;">என்னத்தைச் சொல்ல. எல்லாரும் நல்லா இருங்கோ என்னைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கோ.. நல்லா முதுகு சொறியுங்கோ.. ஏலுமானளவுக்கு எதிர்க்கருத்து மட்டுமே சொல்லுங்கோ..... அவ்வளவுதான். </span></span></span>Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com38tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-7432958590749856652010-07-12T20:27:00.002-04:002010-07-12T21:33:05.250-04:00பொழுது போகாதவன் புலம்புகிறான்ஏதிலிகள் அமைப்பின் சுடரில் இருள் நிகழ்வு பல நல்ல அனுபவங்களையும் நண்பர்களையும் தரவல்லது. சென்ற சனி கூட நிறையப் பேசினார்கள். கேட்டுக்கொண்டிருந்தேன். மெக்சிக்கோ தேசத்து ஏதிலி ஒருவர், பன்னாட்டு நிறுவனங்கள், மெக்சிக்கோ அரசின் ஆதரவுடன் தங்கள் பூர்வீக நிலங்களைச் சூறையாடுவது பற்றிச் சொன்னார். கனடாவில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளைத் துரத்தி நிர்மாணிக்கப்பட்ட ஒரு நகரத்தின் மண்டபம் ஒன்றில் இன்னொரு பூர்வீகக் குடி மக்களின் நிலைபற்றி உச்சுக்கொட்டுகிறோம் என்கிற முரண்நகையை இளங்கோவிடம் சொன்னேன். ‘அதுவும் ஸ்காபுறோ உண்மையிலேயே பூர்வீகக்குடிகள் நிரம்ப வாழ்ந்த இடம்’ என்றார் இளங்கோ. அவரின் தகவலை எங்கே உறுதிப்படுத்தலாம் என்றெல்லாம் நான் தேடிக்கொண்டிருக்கப்போவதில்லை. சந்தேகப்படுபவர்கள் <a href="http://djthamilan.blogspot.com/">அவரிடமே</a> கேட்டுக்கொள்ளலாம். அந்த மெக்சிக்கோ தேசத்து நண்பர் சொன்ன மாநிலத்தின் பெயர் சரியாகப் புரியவில்லை. Oaxaca வாகத்தான் இருக்கவேண்டும். Chiapas தமக்குப் பக்கத்து மாநிலம் என்று சொன்னதாக ஞாபகம், கோணேஸ் Chiapas பற்றிக்கேட்டபோது. அங்கே நடக்கிற பிரச்சினை என்ன என மேலும் அறிய கூகிளாண்டவரைக் கேட்டேன். ஓரளவு நெருங்கியதாக <a href="http://www.pacificfreepress.com/news/1/6431-mexicos-gaza.html">Mexico's Gaza</a> என்ற இணைப்பை மட்டுமே தந்தார். கூகிளாண்டவரின் கொடுமையைப் பற்றி ட்விட்டரில் (கீச்சு என்றா அழைப்பர் இதை. இரமணிதான் சொல்லவேண்டும்) புலம்புகையில் அருண்மொழிவர்மன் “<span class="status-body"><span class="status-content"><span class="entry-content">அம்படாது கீத் அனுமதிக்கப்பட்ட மக்கள் பிரச்சனைகளே கூகிளில் கூட இடம்பெறும்” என்றார். அதுவும் சரிதான். வழமைபோலவே தன் வாசிப்புகள் பற்றிய கட்டுரை ஒன்றுக்கான <a href="http://solvathellamunmai.blogspot.com/2010/07/blog-post.html">இணைப்பும் </a>தந்தார். அவரது கட்டுரையின் மூலவிடயங்கள் மூன்றில் ஒன்றான மூன்றாம் பாலினர் பற்றிய பகுதியில் சு. சமுத்திரம் எழுதிய “வாடா மல்லி” பற்றிச் சொல்லியிருந்தார். அந்த நாவல் ஆ.வி. யில் (இல்லை குமுதத்திலா?) தொடராக வந்த போது ‘ஒளித்திருந்து” வாசித்த ஞாபகம் இருக்கிறது, இப்போது சுதந்திரமான மறுவாசிப்புச் செய்யவேண்டும் என்றேன். கனடாவில் “வாடா மல்லி” எங்கே கிடைக்கும் தெரியவில்லை. அகிலனைத் தொல்லைப்படுத்தி இந்தியாவிலிருந்துதான் வாங்க வேண்டுமோ? ரொரன்ரோ பொது நூலகத்தில் சமுத்திரத்தின் ஒன்பது புத்தகங்கள் இருக்கின்றன. அவரின் முக்கியமான படைப்பான வாடாமல்லி இல்லை. என்ன செய்வது, பொது நூலகத்துக்கு நாங்கள்தானே புத்தகம் தேர்வு செய்கிறோம். என் உறவு ஒருவரும் புத்தகம் போடுகிறார். அடுத்த கோடைகாலத்திலிருந்து அநேகமாக வாடாமல்லி பொது நூலகத்தில் கிடைக்கலாம்.</span></span></span><br /><span class="status-body"><span class="status-content"><span class="entry-content">*---*----*----*</span></span></span><br /><br /><span class="status-body"><span class="status-content"><span class="entry-content">இந்த தேசத்திலே புலம் பெயர்ந்த தமிழர்கள் கோடை காலங்களில் நடத்தும் ‘கிராம ஒன்றுகூடல்கள்’ பற்றிய விமர்சனம் எனக்கு எப்போதுமே இருந்ததுண்டு. இவற்றை ஒழுங்கு செய்வது அந்தந்த ‘ஊர்ச்சங்கங்கள்’. நான் அவற்றைச் சாதிச்சங்கங்கள் என்றே பெயரிட்டு அழைக்க விரும்புகிறேன். ஒவ்வொரு ஊரிலும் யார் ஆதிக்கசாதியாக இருந்தார்களோ அவர்கள்தான் இங்கே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது கண்கூடு. நேரடியாக இல்லாவிட்டாலும் ‘அவரவர் உணவு அவரவர்க்கு’ போன்ற சில விசமத்தனங்கள் மூலம் சாதிப் பெருமை கொடிகட்டிப் பறக்கிறது என்பதுதான் உண்மை. சில நாட்கள் முன்பு இந்தியா சென்றுவந்த ‘காலம்’ செல்வம் அருளானந்தத்திடம் சில நண்பர்கள் கனடாவில் சாதி கொடிகட்டிப் பறக்கிறதாம் என்று கேட்டார்களாம். உண்மை நிலவரம் என்ன என்று ஏதிலிகள் கூட்டத்தில் செல்வம் கேள்வி எழுப்பினார். ‘கொடிகட்டிப் பறக்கிறது’ என்று ஒருவரைத்தவிர மற்றபேர் ஒப்புக்கொண்டோம். அந்த ஒருவர் மட்டும் ‘காங்கேசன்துறை ஊர்ச்சங்கத்தில்’ சாதி இல்லை. அதுதான் நான் பார்த்த சங்கம். அதனால் மற்ற இடங்களிலும் சாதி இல்லை என்று வாதிட்டார். தென்னாபிரிக்காவில் நூற்றாண்டுகளுக்கு முன்னர் குடியேறிய இந்தியக் குடிகளிடம் சாதி இல்லை என்று வாதிட்டார். நல்லவேளை கயானாவையும் உதாரணமாகக் காட்டி, “மொட்டைத்தலையும், முழங்காலும் ஒன்றே” என்று பிரகடனம் மட்டும் செய்யாமல் போனார். நண்பர் ஒருவர் எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊர் ஒன்றுகூடல் ஒன்றுக்கு இன்னொரு நண்பரின் அழைப்பின் பேரில் போயிருந்தபோது ஏதோ ஒரு போட்டியில் இரண்டாவதாக வந்த ஆதிக்க சாதிப் பிள்ளைக்குத் தகப்பன் அடித்தாராம் ‘வேற்றுச் சாதிப் பிள்ளை முதலாவதாய் வர நீ இரண்டாவதாய் வந்தாய்’ என்று. நாங்கள் யார், “ஆதியிலும் புலையனல்ல, சாதியிலும் புலையனல்ல.. சவுதியில புலையனானேன்’ என்று கூத்துக்கட்டிய இனமல்லவா? மறப்போமா கோவணத்துப் பெருமைகளை?</span></span></span><br /><span class="status-body"><span class="status-content"><span class="entry-content">*----*----*----*</span></span></span><br /><br /><span class="status-body"><span class="status-content"><span class="entry-content">IIFA விழாப் புறக்கணிப்பு பற்றிய இணையச் சண்டை ஒன்றில் நானும் வாயைக் கொடுத்து சூத்தைப் புண்ணாக்கிக்கொண்டேன். இன்னமும் மனதில் பட்டதைத் தெளிவாகச் சொல்கிற வித்தை வரவில்லை என்னிடம். தலைகீழாய் நின்று யோசித்தும் IIFA விழாவின் வெற்றியால் இலங்கைத் தமிழன், அட தமிழன் என்ன தமிழன், ஒரு சாதாரண இலங்கைப் பிரசைக்கு பொருளாதார ரீதியாக என்ன நன்மை கிடைத்திருக்கும்? இல்லை அந்த விழா தோற்ற காரணத்தால் மேற்படி இலங்கைப் பிரசைகளுக்கு பொருளாதார ரீதியாக என்ன இழப்பு? மண்ணாங்கட்டி.... 30 வருசமாக சண்டையிலை கிழியாத சட்டையா IIFA க் காற்றில் கிழியப்போகுது? அதே பிரச்சினையில் நான் எழுப்பிய இன்னொரு கேள்வி, அசினுக்குத் தடை பிசினுக்குத் தடை என்றெல்லாம் போராட்டம் நடத்துகிற சீமான் போன்றவர்கள், இலங்கை மற்றும் இலங்கை சம்பந்தப் பட்ட இடங்களிலிருந்து தமிழ்த்திரைக்கு வருகிற பெருந்தொகைப் பணத்தைப் புறக்கணிக்கத் தயாரா? ‘தம்பி’ சூர்யாவுக்காக கொள்கை தளர்த்தியவராயிற்றே நம்மவர்?</span></span></span><br /><span class="status-body"><span class="status-content"><span class="entry-content"><br /></span></span></span><span class="status-body"><span class="status-content"><span class="entry-content">சீமானை முழுமையாகத் திட்டக்கூட விட மாட்டேன் என்கிறார் இந்தக் கருணாநிதி. வழமை போலவே சீமான் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ சொல்ல ‘வன்முறையையும் பிரிவினையையும் தூண்டுகிறான்’ என்று உள்ளே போட்டுவிட்டார்கள். “</span></span></span>தமிழக மீனவர்கள் கேட்பாரின்றி கொல்லப்படும் சூழ்நிலை உருவானால் தமிழகத்தில் ஒரு சிங்களவர் கூட நடமாட முடியாது” என்பதுதான் சீமான் சொன்ன கருத்து. சீமானின் இந்த உணர்ச்சிவசப்பட்ட நிலை முட்டாள்தனமானது என்றாலும், இதுவே வன்முறையையும் பிரிவினையையும் தூண்டும் என்றால், சத்தியராஜ் பேசிய பேச்சுக்கு (ஒகேனக்கால் பிரச்சினை) அவரைத் தூக்கிலல்லவா போட்டிருக்கவேண்டும். என்ன சத்தியராஜ் பாராட்டு விழாக்களில் கருணாநிதிக்கு நன்றாகப் பின்பக்கம் கழுவிவிடுவார். சீமான் அதைச் செய்வதில்லை.<br />*----*----*----*<br /><br />சந்தேகம் ஒன்று<br /><br />நிலவு பெத்த மகளும், நிலவின் அத்தை மகனும் காதல் செய்தல் Incest இல்லையா?<br />*----*----*----*Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-88001112221678201132010-06-20T17:30:00.002-04:002010-07-01T11:23:37.827-04:00வேருலகு (அ) முதுகு சொறிதல்சம்மாட்டியார் வாய்களிலே<br />சதைகளை நாம் தீத்தி வைத்தோம்<br />முள்ளை மட்டும் நாங்களுண்டோம்<br />முதுகெலும்பு வளைத்துழைத்தோம்<br />கைகளிலே முள்ளுக்காயம்<br />காலையிலே பள்ளிக்கூடம்<br />கணக்கு வாத்தி கம்பெடுத்தால்<br />கண்ணீரிலும் வெடுக்கு நாறும்...<br /><br />இந்த வார்த்தைகள் மெலிஞ்சி முத்தனுடையவை. அவர் எழுதிய கூத்தில் வருபவை. மட்டமான ஒலிப்பதிவு காரணமாக சரியாக விளங்கப்பட முடியாமல் அவரது வாயால் மீண்டும் சொல்லப்பட்டவை. அப்படியும் ‘கணக்கு வாத்தி கம்பெடுத்தால் கண்ணீரிலும் வெடுக்கு நாறும்’ என்கிற வரிகள் தவிர மற்றவை படியாமல் போக அவருக்கு மடல் அனுப்பிப் பெறப்பட்டவை. ‘வெள்ளாளச் செருக்கேறிய’ மனங்களைக் கொஞ்சம் குத்திப்பார்ப்பவை. இதற்கு முன் சிலாகித்த வரிகள் பலவற்றை ஒளிமங்கிப் போக வைத்தவை. இப்படியான வலிமிக்க வரிகளைத் தரக்கூடிய மெலிஞ்சிமுத்தன் என்கிற விஜயநாதன் இயூஜின் மசனெட்டின் நான்காவது நூல் (நான் வாசித்த முதல் நூல்), ‘வேருலகு’.<br /><br /><span style="font-weight: bold;">மெலிஞ்சி முத்தன்</span><br />மே.ப. நபர் 20.10.1975 யாழ் மாவட்டம் மெலிஞ்சி முனையில் (எங்கிருக்கிறது அந்த இடம்?) பிறந்தார். மெலிஞ்சியில் பிறந்த காரணத்தால் மெலிஞ்சி முத்தன் என்று பெயர் வந்ததா அல்லது ‘மெலிந்த உருவத்தில் முத்தல் கதைகள் பேசுவதால்’ வந்ததா என்பது பற்றிய ஆய்வுகள் எமக்குத் தேவையற்றவை. ‘சிதையும் என்னுள்’, ’என் தேசக் கரையோரம்’, ’முட்களின் இடுக்கில்’ என்று ஏலவே மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டபின் சமீபத்தில் கனடாவில் வெளிவிட்ட இவரது ’குறுநாவல்’தான் ‘வேருலகு’. (<a href="http://padamkadal.blogspot.com/2010/02/blog-post_08.html">இதைக் குறுநாவல் என்று அழைப்பதை விட, ‘கனவுகளின் தொகுப்பு’ என்று அழைப்பதையே மெலிஞ்சி விரும்புவதாக இளங்கோ சொல்கிறார்</a>). முதல் இரண்டு தொகுப்புகளும் ஈழத்திலும், மூன்றாவது தொகுப்பு பிரான்சிலும் வெளிவந்ததாகவும் அதே இளங்கோ சொல்லியிருக்கிறார். மெலிஞ்சி புழங்கும் வட்டத்துக்குள் நான் புதிது என்பதாலும், இளங்கோ அந்த வட்டத்தில் ஒரு... ஒரு.... என்ன சொல்லலாம், <span style="font-weight: bold;">மூத்த அங்கத்தவர்</span> என்பதாலும் மெலிஞ்சி பற்றிய சில தகவல்களை இளங்கோவிடமிருந்து உருவுவதென்பது இலகுவானதும், நம்பகமானதாயுமிருக்கிறது. மெலிஞ்சி முத்தனின் ’வேருலகு’ (உயிர்மை வெளியீடு) பற்றிய என்னுடைய பகிர்வுகளே கீழே.<br /><br /><span style="font-weight: bold;">வேருலகு</span><br />வேருலகில் மெலிஞ்சி என்ன சொல்லியிருக்கிறார் என்கிற சுருக்கமெல்லாம் நான் இங்கே எழுதிக்கொண்டிருக்கப் போவதில்லை. இதை ஒரு திறனாய்வு என்றுகூடச் சொல்லமுடியாது. ஏனென்றால் திறனாய்வுசெய்வதற்கு நான் ஒன்றும் இலக்கியவாதி அல்ல. சாதாரண வாசகன். மெலிஞ்சியின் வேருலகில் சஞ்சரிக்கிற சில பாத்திரங்கள், கனவுகள் போல் நடந்த சம்பவங்களைப் பற்றியே பார்க்கப்போகிறோம். புத்தகத்தை வாங்கி வாசிப்பதன் மூலமே மெலிஞ்சி முத்தன் என்கிற படைப்பாளியின் வீரியத்தை உணர்ந்துகொள்ள முடியும்.<br /><br />ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து பரிஸ் விமான நிலையத்திலிருந்து ஸ்பெயினூடாக மெக்சிக்கோ போகிற நோக்கத்துடன் வருகிற, கடற்கரை வீதி, கெட்டில், யாழ்ப்பாணம், இலங்கை என்ற முகவரியுடைய சூசை மரியதாசனின் பயணத்தில் ஏற்படுகிற இடர்களுடன் ஆரம்பிக்கிறது வேருலகு. இங்கேயே ஒரு வாசகன் (ஈழத்தைச் சேர்ந்தவனாக இருக்கும் பட்சத்தில்) கனவுகளின் தொகுப்போடு ஒன்ற ஆரம்பிக்கிறான். காரணம், ஈழத்தில் இருந்து இப்படி எத்தனையோ சூசை மரியதாசன்கள் பெயர்ந்திருக்கிறார்கள். அதுவும் ஐரோப்பிய நாடுகளில் ‘கறுப்பாடுகளாக’ப் பிடிக்கப்படுகிற சூசை மரியதாசன்களுக்கு நடத்தப்படுகிற விதத்தை ‘அனுபவப்பட்டவர்கள்’ சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘அங்கேயா இங்கேயா’ என்று தெரியாத நிலை, பணத்துக்கான அல்லாட்டம், இன்னொருவரின் வதிவிட அட்டையில் (அடையாளம் தொலைத்து) வேலை செய்வது, பசி, அகதிக் கோரிக்கை வழக்குகள், அவற்றின் தோல்விகள், கள்ளமாக அடுத்த நாட்டுக்குப் பயணம், ஒதுக்கித் தள்ள நினைக்கிற சொந்தங்கள், கைகொடுக்கிற மூன்றாமவன் எனப் பலவிடயங்கள் நேரடி அனுபவமாகவும், நண்பர்களின் கதைகளாயும் ஏற்கனவே மனதின் முக்கால்வாசி இடத்தை அடைத்து இருந்த காரணத்தால் ஒரு கட்டத்தில் அந்த சூசை மரியதாசனாக இந்த வாசகனும் மாறிப்போகிறான். கதைக்களம் அரிப்புத்துறைக்கு மாறும்போதும் கதைசொல்லியுடன் வாசகனை ஓரளவுக்காவது பொருந்திப்போக வைத்திருக்கிறார் மெலிஞ்சி.<br /><br />இத்தனைக்கும் அரிப்புத்துறை என்றொரு ஊர் இலங்கையில் இருக்கிறதா என்று இணையத்தில் தேடிப்பார்க்குமளவுக்குத்தான் என் சந்ததியில் இலங்கையின் நிலப் பிரதேசம் பற்றிய அறிவு இருக்கிறது. விக்கிபீடியா சொல்கிற தகவல் சரியாக இருப்பின் மேற்படி அரிப்புத்துறை என்பது மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் இருக்கிற ஒரு ஊர். நானாட்டான் என்ற இன்னொரு பிரதேச செயலர் பிரிவு இந்த முசலி பிரதேச செயலர் பிரிவுக்கு வடக்கே இருக்கிறதாம். அந்தப் பிரிவில் நானாட்டான் என்ற பெயருடைய ஊரும் இருக்கிறதாம். மெலிஞ்சியின் வேருலகிலும் இந்த நானாட்டான் வருகிறது. ஆகவே விக்கிபீடியா சொல்லும் அரிப்புத்துறையும் மெலிஞ்சி சொல்கிற அரிப்புத்துறையும் ஒன்றாக இருக்கலாம் என்கிற முடிவுக்கு வரக்கூடியதாய் இருக்கிறது. கதை விரிகிற பிரதேசம் உண்மையா அல்லது புனைவா என்றே தெரியாத, அந்தப் பிரதேச வழக்குகள், வாழ்வியல் பற்றி எதுவும் அறியாத ஒரு வாசகனை கதைக்குள் இழுத்துவைத்திருப்பதுதான் மெலிஞ்சியின் முன் இருந்த பெரும் சவாலாக நான் கருதுகிறேன். சம்மனசு, உலுவிந்தம் பழம் போன்ற சொற்களால் மெலின்ஞ்சியின் எழுத்திலிருந்து அந்நியப்பட்டுப்போகாமல் என்னை ஈர்த்து வைத்திருந்தது அவரது கதாபாத்திரங்களும், அவரது கனவுகளுமே. மெலிஞ்சியின் வார்த்தைகளில் சொல்வதானால் அரிப்புத்துறை அவரது கனவுகளை இறக்கிவைப்பதற்குப் பொருத்தமாயிருந்த ஒரு நிலம் மட்டுமே. மற்றபடி எந்த ஒரு ஊரையோ, குழுவையோ தனிப்பட்ட மனிதனையோ அவர் சுட்டவில்லை அல்லது சுட்ட விரும்பவில்லை. ஊர்காவற் துறை தொட்டு அரிப்புத்துறைவரை மெலிஞ்சி கண்ட ஈழத்து வாழ்க்கையின் ஒரு சில படிமங்களைத் தொட்டுச் சென்றிருக்கிறார்.<br /><br />மெலிஞ்சி சொல்கிற பொன்னுக் கிழவி என்னைப் பாதித்தாள். அவளது பனங்கூடல் கொட்டில் பாதித்தது. எனக்கு எங்கள் வீட்டின் பின்னால் இருந்த பனங்கூடல் கடந்து இன்னொரு பனங்காணிக்குள் கொட்டில் போட்டு, பின்னர் குடிசையாக்கிக் குடியிருந்த நடுவிலம்மா வந்து போனார். நடுவிலம்மாவுக்கு சந்தியாகுக் கிழவர் போல புருசன் இருந்ததாக ஞாபகமில்லை. ஆனால் ஆடுகள் கொஞ்சம் வளர்த்ததாக ஞாபகம். ஒரு நாய் வளர்த்தார். அந்த நாய்க்காக அக்காக்களின் பாவாடைகளுக்குள் ஒளித்த ஞாபகம் இருக்கிறது. பொன்னுக்கிழவிக்குப் பூச்சியாடு மாதிரி, நடுவிலம்மாவுக்கு அவரது மகள். நடுவிலம்மாவின் அந்தக் காணியும், கிணறும், குடிலும் மறக்கவே மறக்காது. கல்வீடுகளிலிருந்து கொஞ்சம் தனியனாக இருந்த வீடு அது. நடுவிலம்மா செத்த பிறகொருகாலத்தில், எனக்குப் பதினொரு வயதிருக்கும்போது பிள்ளையார் கோவில் திருவிழாவின் இடையில் துரைராசர் படிப்பிக்க வந்ததும், அவர் போன பின் கோபமாக அம்மாவுடன் அடம்பிடித்து மறுபடி கோவிலில் அப்பாவிடம் கொண்டுபோய் விடக் கேட்டதும், போகிற வழியில் நடுவிலம்மாவின் குடில் கடந்தபோது எதையோ ஓங்கி அடிப்பது போல் கேட்ட நடுவிலம்மாவின் மருமகனின் முக்கல் ஒலிக்கும், ‘விடுங்கோப்பா நோகுது’ என்று நடுவிலம்மாவின் மகளின் முனகலுக்கும் காலம் கடந்து அர்த்தம் தெரிந்ததும், முதலில் ‘ச்சேய்’ என்றதும் பிறகு அவர்களின் ‘சுதந்திரம்’ கண்டு வியந்ததும், அந்த கூட அந்தப் பனங்கூடல் குடில் மீதான ஈர்ப்புக்கான ஒரு காரணமாய் இருக்கலாமோ என்னவோ. நடுவிலம்மா தவிர்த்து ஆடுகளுடனும், மாடுகளுடனும் ஏன் மிளகாய்ச் செடிகளுடனும் பேசுகிற எத்தனையோ கிழவிகளைக் கண்டிருக்கிறேன். அவர்களின் முகங்களையெல்லாம் பொன்னுக்கிழவியுடன் பொருத்திப்பார்க்க முயன்றது ஒரு புதுவித அனுபவம்.<br /><br />மெலிஞ்சியின் வேருலகப் பாத்திரங்களில் இன்னொன்று சசியக்கா. இவள் கண்மணி மாமியின் மகள். கண்மணி மாமி குடும்பத்துடன் சில புரட்சிக்கார இளைஞர்கள் நெருங்கிப் பழகுகிறார்கள். அவர்களில் ஒரே ஒரு இளைஞன் மட்டும் ‘சேமலையண்ணன்’ என்கிற பெயரால் அடையாளப்படுத்தப்படுகிறான். அந்த இளைஞர்களுக்கு கால்களில் சிரங்கு இருக்கிறது. “கண்மணி மாமி வீட்டில் சசியக்காவுக்கே முதலில் சிரங்கு தொற்றிக்கொண்டது” என்கிற ஒரு வசனத்திலேயே சேமலைக்கும் சசிக்கும் காதல் என்பதை ஊகிக்ககூடியதாய் இருந்தும் அவர்கள் நெருங்கியிருக்கும் காட்சிகள் சில பற்றி மெலிஞ்சி விவரிக்கும்போது கொஞ்சம் ஆயாசமாயிருக்கிறது. அதுவும் அவர்களின் முத்தக் காட்சி பற்றிய வர்ணனையெல்லாம் எதற்கு என்று எண்ணும்போது “அன்றைய இரவு நான் கண்ட கனவு வித்தியாசமாய் இருந்தது” என்று சொல்லி அதன்பின் மெலிஞ்சி சொல்கிற சில விஷயங்கள் சிலருக்கு ஜீரணிக்க முடியாதவையாய் இருக்கலாம். அப்படி ஜீரணிக்க முடியாதவர்களும் மெலிஞ்சி சொல்கிற அந்த அனுபவங்களை எங்கோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு கணத்தில் கடந்திருப்பார்கள் என்றே சொல்லலாம்.<br /><br />ஆட்டுத்திருடன் சிமியோன், அவனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை, அதன் பின்விளைவுகள், கண்மணி மாமியின் காணாமல் போன உள்பாவாடை, சிப்பாயின் தலையை வெட்டி வேலிமட்டையில் கொழுவும் உலுந்தை, கக்கா இருக்கும்போது பாம்புகளை வரந்த, பாம்பு கடித்துச் செத்துப்போன அத்தாம்புள்ள, அல்லி பற்றிய அமானுஷ்யக் கதைகள், கண்மணி மாமியின் இளைய மகள் சின்னன், சீத்தைத் துணிக்காடு, பூச்சியாடு.................................................. சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும் ஈழத்துத் தமிழ்ப்படைப்பளி ஒருவனிடமிருந்து வந்திருக்ககூடிய ஒரு நல்ல படைப்புக்கு நான் செய்யக்கூடிய சிறிய மரியாதை, அந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் என்கிற சிபாரிசு மட்டுமே, மெலிஞ்சியின் புத்தகக் காசுகூட இன்னும் கொடுக்கவில்லை என்ற உறுத்தலுடன்.<br /><br />*----*----*----*<br /><br />என்னதான் வேருலகைச் சிலாகித்தாலும் மெலிஞ்சியின் அந்தக் கூத்து வரிகள் அந்த மெல்லிய பாம்பு மனிதனிடம் இன்னும் நிறைய இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அஜந்தனாய், காந்தனாய், பெயர்களே தெரியாத அந்தக் கற்கோவளத்து உதைபந்தாட்ட வீரர்களாய் மாறி மெலிஞ்சி யாழ்ப்பாணத்து வெள்ளாளச் செருக்கை எட்டி உதைக்கிறார்,<br /><br />சம்மாட்டியார் வாய்களிலே<br />சதைகளை நாம் தீத்தி வைத்தோம்<br />முள்ளை மட்டும் நாங்களுண்டோம்<br />முதுகெலும்பு வளைத்துழைத்தோம்<br />கைகளிலே முள்ளுக்காயம்<br />காலையிலே பள்ளிக்கூடம்<br />கணக்கு வாத்தி கம்பெடுத்தால்<br />கண்ணீரிலும் வெடுக்கு நாறும்... என்கிற வரிகளூடாக.<br /><br />பி.கு: சக மனிதனின் திறமைகளைச் சிலாகிப்பதுக்கு இன்னொரு பெயர் முதுகு சொறிதல் என்றால்..... நான் மெலிஞ்சிக்கு சொறிந்துதான் விட்டிருக்கிறேன்.Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-778302168259465512010-05-17T19:35:00.003-04:002010-05-17T20:00:59.025-04:00இந்தியா ஒளிர்கிறது<a href="http://erodethamizhan.blogspot.com/">ஈரோடு தமிழன் (வீரமணி மணி)</a> என்பவரின் வலைப்பூவில் சிக்கியது. பகிரலாம் என்று தோன்றிய காரணத்தால் பகிர்கிறேன். இடைக்கிட வருகிற தமிழ்ப்பாட்டு ஏதோ செய்கிறது. ஈரோடு தமிழன் ‘சாதிக்கொடுமைகள் இந்தியாவில் இல்லை என்று மறுப்பவர்களுக்கு’ என்று தலைப்பிட்டு இந்தக் காணொளிப் பட்டியலை இணைத்திருந்தார். இதேபோல் எங்கள் ஊரிலும் யாராவது செய்யவேண்டும். தோலுரிக்கப்பட நான் தயார். தோலுரிக்க யாராவது இருக்கிறீர்களா?<br /><br /><object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/p/72F413CDA03180C2&hl=en_GB&fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/p/72F413CDA03180C2&hl=en_GB&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object>Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-9134500535943661612010-05-16T11:13:00.000-04:002010-05-16T11:14:47.603-04:00கணிதம் படும் பாடு... (சிரிக்க)<object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/Rg5KGJigJYA&hl=en_GB&fs=1&color1=0xcc2550&color2=0xe87a9f"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/Rg5KGJigJYA&hl=en_GB&fs=1&color1=0xcc2550&color2=0xe87a9f" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object>Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-45046643437230722682010-04-28T17:25:00.002-04:002010-04-28T18:10:27.907-04:00பேரைக் கேட்டாலே...ரஜினியின் சிவாஜியில் வரும் ‘பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல’ என்கிற வசனத்தை நான் கிண்டலடிப்பதுண்டு. அதெப்படி பேரைக் கேட்டால் அதிர முடியும்? என்ன தூங்கிக்கொண்டிருப்பவன் காதுக்குள் ஒலிபெருக்கி வைத்தா சொல்வார்கள் என்றெல்லாம் கேட்பதுண்டு. இந்த வசனத்தை எழுதினாரே என்று சுஜாதாவில் கொஞ்சம் கோபமும் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட பேரைக் கேட்டால் அதிர்வது மட்டுமில்லை, ‘என்ரை அய்யோ’ என்று வாகனம் ஓட்டியபடியே வாய்விட்டுக் கத்துகிறேன். என்ன மூடிய வாகனத்துக்குள் கத்துவதால் என்னை யாரும் பைத்தியம் என்று நினைத்துவிட முடியாது. அந்தப் பெயர் King (தமிழ்ப்படுத்தவும்) இப்ராகிம்.<br /><br />காலை வேளைகளில் வேலைக்குப் போகும்போது கனேடியப் பல்கலாசார வானொலி (CMR) கேட்டபடி போவதுண்டு. அடிக்கடி ஏதாவது சுவாரஷ்யமான தலைப்புகளில் நேயர்களை தொலைபேசச் சொல்லி உரையாடுவார்கள். ஏப்ரல் முட்டாள்கள் தினத்து அனுபவங்களைக் கேட்டு அதிலேயே ஏப்ரல் முட்டாள்களாக ஆக்கப்பட்ட (ஆக்கியவன் நானே) அறிவிப்பாளர்களும் உண்டு. இடையிடையே ‘இன்றைய பொருளாதார நெருக்கடி உங்கள் வாழ்க்கையை எப்படிப் பாதித்திருக்கிறது?’ ‘தொழிற்சாலைகளில் நியாயமான சம்பளங்கள் வழங்கப்படுகின்றனவா?’ ‘மரண தண்டனை சரியா தவறா’ போன்ற சில தலைப்புகளில் வாய்ப்புமளித்து அவை தொடர்பான புள்ளிவிபரங்களையும் சொல்வார்கள். சில சமயங்களில் ‘ஏப்ரல் முட்டாள் அனுபவங்கள்’ ‘பாட்டுக்கு மெட்டா மெட்டுக்குப் பாட்டா?’ என்கிறமாதிரியான சுவாரஷ்யமான தலைப்புகளும் வருவதுண்டு. இந்த நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 20-30 நிமிடம் மட்டுமே ஒதுக்கப்படுவதால் பங்குபெறுபவர்களை ஓரளவுக்காவது கொடுத்த விஷயத்தை வெட்டொன்று துண்டிரண்டாகப் பேசச் சொல்லிக் கேட்பார்கள். இந்த நிகழ்ச்சியைத்தான் மேற்சொன்ன King இப்ராகிம் ரணகளப்படுத்துகிறார். நான் காருக்குள் கத்துவதுமாதிரி ஒரு நாளைக்கு அறிவிப்பாளர்கள் கத்துவார்கள். King இன் அழைப்புகளைத் துண்டிக்க அவர்கள் படும்பாடு பெரும்பாடு.<br /><br />ஒரு நிகழ்ச்சி. ‘உங்களுக்கு வருமான வரித் திணைக்களத்திலிருந்து மீள் கொடுப்பனவு (Refund) கிடைத்தால் என்ன செய்வீர்கள்?’ இதுதான் அன்றைய வாதப்பொருள். அதாவது வருடாந்தத் தனிநபர் வருமான வரி அறிக்கையை அரசத் திணைக்களத்திடம் சமர்ப்பித்தால், அந்த வருடத்தில் வருமானத்தின் அடிப்படையில் நீங்கள் கூடுதலான வரியைச் செலுத்தியிருந்தால் அந்தளவு பணமும் மீளளிக்கப்படும். அப்படி மீளளிக்கப்படுகிற பணத்தை என்ன செய்வீர்கள் என்பதை சுருக்கமாகச் சொல்லுங்கள் என்பதுதான் கேள்வி. ‘வாகனக் கடனுக்குச் செலுத்துவேன், கடனட்டை நிலுவையைச் செலுத்துவேன், பிள்ளைகளுக்கு பொருட்கள் வாங்கிக் கொடுப்பேன், சேமிப்பேன்’ இப்படியான சுலபமான பதில்களுக்குரிய கேள்வி. அழைத்தார் King. காதால் ரத்தம் வழியுமளவுக்கு ‘நாங்கள் இதற்கு ஆறேழு மாதமாகத் திட்டமிடவேண்டும். எப்படிக் கூடுதலான வரியைப் பெறலாம் என்று ஒரு வருடத்துக்கு முன்னர் திட்டமிடவேண்டும்’ என்று ஆரம்பித்து காதால் ரத்தம் ஒழுக ஒழுக கதைத்தார் மனிதர். நல்லவேளை ‘யாருடைய உதவியோடு வருமான வரிப் பத்திரங்களைத் தயார் செய்ய வேண்டும் என்று நாங்கள் அம்மாவின் வயிற்றில் இருக்கும்போதே முடிவு செய்யவேண்டும். போன ஜென்மத்திலேயே என்ன திகதி இந்தப் பத்திரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்யவேண்டும்’ என்றெல்லாம் சொல்ல முன் அறிவிப்பாளர்கள் பெரும்பாடுபட்டு அழைப்பைத் துண்டித்தார்கள்.<br /><br />அதே போல் இன்னொருநாள். ‘வீட்டுக் கடன் பற்றிய சட்டங்களில் புதிதாக அரசாங்கம் கொண்டுவந்த இறுக்கமான நடைமுறைகளால் வீடு வாங்குவது தொடர்பான உங்கள் திட்டங்களில் ஏதாவது மாற்றங்கள் ஏதாவது இருக்கின்றனவா?’ என்கிற தொனியில் உரையாடல் நடந்தது. மீண்டும் வந்தார் மன்னாதி மன்னர். ‘முதலில் நாங்கள் எங்களுடைய மக்கள் கூடி வாழ்கிற இடங்களாகவும், வர்த்தக நிலையங்கள் உள்ள இடங்களாகவும் பார்த்து வீடு வாங்கவேண்டும். அப்படி இல்லாமல் வீடு வாங்கினால் அதை விற்க முடியாது. இப்படியாகத் திட்டமிட்டே வீடு வாங்கியதால்தான் நான் நல்ல நிலையில் இருக்கிறேன்’ என்று ஆரம்பித்தார். கேள்வி வீட்டுக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக உங்களது வீடு வாங்கும் திட்டத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதே. ‘ஒரு இரண்டு மாதம் தள்ளிப் போட்டிருக்கிறோம், சட்டம் அமலுக்கு வர முன்னரே கடனைப் பெற்றுக்கொள்வது நல்லது’ போன்ற பதில்கள் இருக்கத்தக்கதாக எங்கே எப்படி என்ன மாதிரி வீடு வாங்கவேண்டும் என்ற ஆராய்ச்சி முடிவுகளைச் சொல்கிற மனிதனை என்ன செய்யமுடியும்?<br /><br />இது தனியே ஒரு King இப்ராகிம் பற்றிய பதிவு அல்ல. எமது சமூகத்தில் எத்தனையோ King இப்ராகிம்கள் இருக்கிறார்கள். ஒரு முறை இதே வானொலியில் ‘இலங்கைத் தேர்தல் நிலவரம்’ பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது இன்னொரு King வந்து ‘இந்த நிகழ்ச்சி இப்போது தேவையான நிகழ்ச்சி. இதை ஒழுங்கு செய்த வானொலி நிறுவன இயக்குனருக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அறிவிப்பாளர்களுக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பிக்கும் ஆய்வாளருக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கருத்துத் தெரிவித்த நேயர்களுக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வானொலி கண்டுபிடித்த மார்க்கோனிக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று நன்றியுரையாற்றத் தொடங்க அறிவிப்பாளர் ஓரளவுக்குச் சமாளித்து பேசவந்த விஷயத்தைப் பேசவைத்தார். இது நம்மவரிடையே இருக்ககூடிய பிரச்சினைகளில் முக்கியமானதொன்று.<br /><br />காத்திரமான நிகழ்ச்சிகளை இலத்திரனியல் ஊடகங்கள் தருவதில்லை என்ற குற்றச்சாட்டை நானே எழுப்பியிருக்கிறேன். ஆனால் அவர்களிலும் முழுமையாகத் தவறில்லை. உணர்ச்சிப் பிழம்புகளும், உயர்வு நவிற்சிகளும் (மைக் செட் காரரோடு சேர்த்து பதினொரு பேர்- சுஜாதா) மட்டுமே நிரம்பிய ஒரு சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட நேர எல்லைக்குள் பயனுள்ள விடயங்களைப் பேசவைத்து ஒரு நிகழ்ச்சி செய்வதைவிட பேசாமல் தொலைக் காட்சி நாடகங்களையும் படங்களையும் போட்டு மக்களைத் தாக்காட்டிவிடலாம் என்ற ஒரு நிலைப்பாட்டை அவர்கள் எடுத்ததில் தவறில்லையோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. ‘உன்வீட்டுக்கு எதிர்வீட்டுக்கு என்ன வழி?’ என்று கேட்டால் ‘எங்கள் வீட்டிலிருந்து கிழக்கு நோக்கிப் போய் வருகிற 133 பஸ் வண்டியில் ஏறி வடக்கே ஐந்து கிலோமீற்றர் போய் அங்குள்ள தரிப்பில் இறங்கி, ரோட்டைக் கடந்து மற்றப் பக்கம் வந்து மீண்டும் பஸ் பிடித்து நீங்கள் முதலில் ஏறிய தரிப்பில் இறங்கி எங்கள் வீட்டுக்கு சரியாக 10 மீற்றர் குறுக்கே நடந்தால் எங்கள் வீட்டுக்கு எதிர்வீடு வரும்’ என்று சொல்கிற King இப்ராகிம்கள் கொஞ்சம் யோசித்தால் நல்லது.<br /><br />பி.கு: CMR நேயர்கள் யாராவது இதை வாசித்து உங்களுக்கும் Kingஐத் தெரியும் பட்சத்தில் அவருக்குச் சொல்லுங்கள், இனிமேலும் இப்படி விசரடிக்க வேண்டாம் என்று.Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-87228205650894095022010-04-14T19:37:00.002-04:002010-04-14T19:40:58.057-04:00ரசித்ததுஇணையத்தில் மேய்ந்தபோது சிக்கியது. நன்றாயிருந்தது பகிர்கிறேன். கிரிக்கெட் பைத்தியமாக நான் இருப்பதால் பிடித்திருக்கலாம். உங்களுக்கும் பிடிக்கும்....<br /><br /><br /> <object width="540" height="440"><param name="movie" value="http://www.youtube.com/p/5C70CD2A3DD34B75&hl=fr_FR&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/p/5C70CD2A3DD34B75&hl=fr_FR&fs=1" type="application/x-shockwave-flash" width="540" height="440" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object><br /><br /><br /><br /><br /><br /><embed src="'http://www.tubeoli.com/player/player.swf'" height="'600'" width="'540'" bgcolor="'273443'" allowscriptaccess="'always'" allowfullscreen="'true'" flashvars="'file="http://gdata.youtube.com/feeds/api/playlists/5C70CD2A3DD34B75?v="2&skin="http://www.tubeoli.com/player/skins/stylish&backcolor="273443&frontcolor="EEEEE8&lightcolor="EEEEE8&screencolor="273443&channel="rpsyxtihbqkoqzb" plugins="ltas&playlist="bottom&playlistsize="180&autostart="false&repeat="list&logo="http%3A%2F%2Fwww.tubeoli.com%2Fimages%2Flogo.gif&stretching="fill'/"></embed><br /><br /><br /><br />Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-27650342893846324712010-03-24T19:30:00.007-04:002010-03-24T20:18:23.543-04:00பிரவுணி, டெவில் மற்றும் சீக்கோக்கள்<div style="text-align: justify;">சீக்கோக்களை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். யாழ்ப்பாணத்து வீதிகள் பலவற்றில் இவர்களின் ராச்சியம்தான் நடக்கும். பல நிறங்களில், பல பருமன்களில் போகிற வருபவர்கள் எல்லோரையும் மிரட்டுவதில் சீக்கோக்களுக்கு நிகர் சீக்கோக்கள்தான். ஆனால் நித்தனும் சிறிமாவோ பண்டீரிநிக்காவும் சீக்கோக்களுக்குப் பயப்பட மாட்டார்கள். சைக்கிளில் போகும்போது நிம்மதியாக நித்திரை கொண்டுகொண்டிருக்கும் சீக்கோக்களை ஓங்கி உதைப்பார்கள். அடுத்த நாள் அதே வீதியில் போனால் உதை வாங்கிய சீக்கோக்கள் ஞாபகம் வைத்துக் கலைக்கும். சைக்கிளில் எம்பி மிதித்து ஓடி சடாரென பிரேக் பிடிக்க சீக்கோக்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடும் பாருங்கள், அந்த வேகத்துக்கு யாருமே ஈடுகொடுக்க முடியாது. இப்போது சிந்தித்துப் பாருங்கள், சீக்கோக்களை உங்களுக்குத் நிச்சயம் தெரியும்தானே.<br /></div><div style="text-align: justify;"><br />எனக்கு சீக்கோ என்கிற பெயரை நித்தன்தான் சொல்லித்தந்தான். அதற்குமுன் ‘நாய்கள்' என்கிற பெயரிலேயே அவர்களை அழைத்துவந்தேன் (இப்போது doggy). நித்தனோடு சேர்ந்த பின் சீக்கோக்களுக்கு நானும் சிம்ம சொப்பனம்தான். அவர்களை உதைக்காவிட்டாலும் ‘ஊய்' என்று சத்தமிட்டு மிரட்டி, சைக்கிளைக் கலைக்கவைத்து, பிரேக் போட்டு வாலைச் சுருட்டி ஓடவைப்பதில் ஒரு த்ரில் இருந்தது. அந்தக் கொடுமைக்கு எல்லாம் சேர்த்து கனடாவில் வைத்து ஒரு சீக்கோ இடது முழங்கைக்கு சற்று அருகிலும், முன்தொடையிலும், பிட்டத்திலும் கடித்து கடுக்கக் கடுக்க ஊசி போடவைத்தது என்பது வேறுகதை. ஆனாலும் இன்றைக்கும் சீக்கோக்கள் மீதான வெறுப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. கல்லால் அடிக்க, காரால் ஏற்ற ஆசையிருக்கிறது. ஆனால் சீக்கோக்களை வளர்ப்பவர்கள் மில்லியன் கணக்கில் என்னிடம் நட்டஈடு கோரலாம் என்று பயப்படுத்துகிறார்கள்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_db18k2mGuw4/S6qqEfUJeqI/AAAAAAAAB_I/WfgIEl2ynXE/s1600/DSC00664_thumb.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 244px; height: 184px;" src="http://3.bp.blogspot.com/_db18k2mGuw4/S6qqEfUJeqI/AAAAAAAAB_I/WfgIEl2ynXE/s400/DSC00664_thumb.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5452357292987611810" border="0" /></a><br />நான் ஒன்றும் சின்னவயதில் இருந்தே சீக்கோக்களை வெறுத்ததில்லை. எங்கள் வீட்டில் மெல்லிய மண்ணிறத்தில் கழுத்தில் சின்னதான ஒரு வெள்ளைப் பொட்டுடன் ஒரு சீக்கோவும், கொழுத்துப் போன அழுக்கு மண்ணிறத்தில் ஒரு வயதான சீக்கோவும் இருந்தன. வயதான சீக்கோ ஆணோ, பெண்ணோ என்றெல்லாம் ஞாபகம் இல்லை. அந்த சீக்கோவுடன் எனக்குப் பெரியளவு பரிச்சயம் ஏற்படமுன்னமே அது செத்தும்போனது. மற்ற சீக்கோ நல்ல வீரன். வைரமுத்துப் பெரியப்பா கொண்டுவந்து தந்த சீக்கோ அது என்று அப்பா சொல்லுவார். நல்ல இளைஞன். தெருவில் மற்ற சீக்கோக்களை உறுமி அடக்கும் ரவுடி சீக்கோ அது. அதுக்கு ‘பிரவுணி' என்றும் ‘ராஜா' என்றும் பெயர்கள் வழங்கியதாக ஞாபகம். ஒரு நாள் பிரவுணி (எ) ராஜா (எ) மண்ணிற சீக்கோ அக்கா அரிசியைக் கடித்துவிட்டது. ஏலவே யாரும் நொண்டி நடந்தால் பிடிக்காது இந்த சீக்கோவுக்கு. அக்கா அரிசி பாவம். ‘அக்கா அரிசி, அக்கா அரிசி' என்று பிச்சை புகுந்து வாழ்கிற அவருக்கு கால் புண்ணுக்கு மருந்துபோடவோ காலுக்கு செருப்பு போடவோ வழியில்லை. நொண்டி நடந்தவரை சீக்கோ பதம்பார்த்துவிட்டான்.<br /><br />அக்கா அரிசியை சின்னத்துரை கடைக்குப் பக்கத்தில் இருந்த நேர்சக்காவிடம் கூட்டிச் சென்று மருந்துச் செலவை அப்பா ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே இரண்டொருவரை பதம் பார்க்க சீக்கோ முயன்று கடைசியில் அக்கா அரிசியைப் பதம் பார்த்த காரணத்தால் சீக்கோவைக் கட்டிப்போடுவது என்று முடிவாயிற்று. அன்றிலிருந்து சீக்கோ கட்டிப்போட்டப்பட்டான்.<br /><br />ஒரு நாள் மதியவேளை சீக்கோ அலறிக்கொண்டிருந்தான். அவனது கழுத்துப்பட்டியில் இருந்த ஒரு கம்பி கழுத்துக்குள் போய்விட அதிலிருந்து மீளும் முயற்சியில் சீக்கோவின் கழுத்தில் பெரிய காயம். இரத்தம் கொட்டியது. அப்பா ஒருவாறு அவிழ்த்து விட்டதும் ஓரிடமும் போகாமல் ஓடோடி வந்து வீட்டு வாசலில் படுத்து உருண்டு புரண்டு அழுதான் பிரவுணி (எ) ராஜா (எ) மண்ணிற சீக்கோ. (பிற்காலத்தில் அல்சர் கான்சராக்கிய வைரமுத்துப் பெரியப்பாவும் வயிற்றுவலியால் அப்படித் துடித்ததாக ஞாபகம்). எனக்கு வயிற்றுக்குள் ஏதோ செய்தது. கழுத்தில் ஏதோ ஒரு அவஸ்தை தோன்றியது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு சீக்கோ பழையமாதிரி உற்சாகமாக இல்லை. காயம் மாறிய பின்னரும் அவனது பழைய உற்சாகத்தைக் காணவில்லை. கொஞ்ச நாளில் சீக்கோ இறந்துபோனான். எங்கள் வீட்டு வளவின் தென்கிழக்கு மூலையில் ஒரு தென்னமர அடியில் சின்னக் கிட்டிணி தோண்டிய கிடங்கில் சீக்கோவைப் புதைத்தார்கள்.<br /><br />அவனுக்குப் பிறகு வீட்டில் நிரந்தரமாய் ஒரு சீக்கோ வந்தது எனக்கு பத்து வயதிருக்கும்போது. பக்கத்தில் இருந்த ‘அண்ணன்'மார் விட்டுப்போன பெண் சீக்கோ ஒன்றின் பிள்ளைகளில் நான் தெரிந்தெடுத்த சீக்கோ அவன். ‘மயாவி', ‘மாயவி' என்றெல்லாம் வாசித்து கடைசியில் 'மாயாவி' என்று மனதில் பதிந்த முகமூடி வீரர் மாயாவியின் சீக்கோவின் பெயரான ‘டெவில்' என்று பெயர் வைத்து அவனை வளர்த்தேன். கமலாம்மா அடிக்கடி சொல்லுவார்கள், 'எறும்பு போட்ட பால் குடிச்சா நல்ல வீரமா வளரும்' என்று. அம்மாக்குத் தெரியாமல் கறந்த பசும்பாலில கொஞ்சமாக கமலாம்மா அல்லது ஆசையம்மாவிடம் வாங்கி, எறும்பு பிடித்துப் போட்டு டெவிலை வளர்த்தேன். அவனும் என்னோடேயே வளர்ந்தான்.<br /><br />பக்கத்தில் ‘அண்ணண்மார்' இருந்ததால் யாழ்ப்பாணத்தில் பிரச்சினை வரும்போதெல்லாம் அப்பா பிறந்த வீட்டில் போய் நிற்போம். அப்படி நாங்கள் போகிற நாட்களில் டெவிலை ஏனோ மறந்துபோய்விட்டேன். டெவிலுக்கும் குண்டுச்சத்தமும், புக்காரா, சுப்ப சொனிக் சத்தமும் அடிவயிற்றைக் கலக்கும் என்று புத்திக்கு உறைக்கவில்லை. பிரச்சினை கொஞ்சம் ஓய்ந்து வீட்டுக்குப் போனால் டெவிலைக் காணவில்லை. அவன் பக்கத்துவீட்டு அன்ரி வீட்டில் நிரந்தரமாகிவிட்டான். எறும்புப் பாலை மறந்து மிஞ்சிய சோறைச் சாப்பிடப் பழகிவிட்டான். அவர்கள் வீட்டுக்கு நான் போனால் ஓடிவந்து வாலை ஆட்டினாலும் எங்கள் வீட்டுக்குக் கூப்பிட்டுப் பார்த்தால் வரவே மாட்டேன் என்றுவிட்டான். மற்ற சீக்கோக்களிடம் கடிபட்டு ரத்தம் ஒழுக வந்தவனை ‘வீட்ட வாடா. உனக்கு எறும்புப் பால் தந்து வீரமாக்கிறன்' என்று சொல்லியும் வரமாட்டேன் என்றுவிட்டான். காலம் போகப்போக என்னைக் கண்டாலும் குரைக்கவும் பழகிக்கொண்டான். நானும் சீக்கோக்களை வெறுக்கப் பழகிக்கொண்டேன். தெருச் சீக்கோக்கள் கடித்துச் செத்த டெவிலின் மரணம் சின்னச் சலனத்தோடு என்னைக் கடந்துபோயிற்று.<br /></div>Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com0