Monday 3 August 2009

வாயகரா தாத்தா-4 (18+)

ஆனந்த விகடனில் வெளியான 'வயாகரா தாத்தா சொன்ன விபரீதக் கதைகள்' என்ற தலைப்பில் வெளியான வயது வந்தவர்களுக்கான ஜோக்ஸ்சின் தொகுப்பு இது. 'A' ஜோக்ஸ் பிடிக்காதவங்க இப்பவே தெறிச்சு ஓடிடுங்க.
தாய் வீட்டுக்குப் போயிருந்த ஜிக்கிச்சா சீக்கிரமே வீடு திரும்பிட்டா. பட்டப் பகல்ல வீடு திறந்து கிடக்க உள்ளே போய்ப் பார்த்தா, ஆபீஸ்ல இருக்க வேண்டிய அவளோட புருஷன் ஜிங்குச்சா படுக்கையில் கிடந்தான். பக்கத்துல ஒரு பொண்ணும்! அலறிட்ட ஜிக்கிச்சா. தன் தாய் வீட்டுக்கே திரும்பிப்போக கோபமா கிளம்பினா. அவளை ஓடிவந்து தடுத்த ஜிங்குச்சா, பரிதாபமா மூஞ்சிய வச்சிக்கிட்டு சொன்னானாம்...

‘கண்ணு ஆபீஸுக்கு போற வழியில இவளைப் பார்த்தேன். கிழிஞ்ச ட்ரெஸ் போட்டுக்கிட்டு செருப்புகூட இல்லாம பாவமா நின்னா. சோறு தின்னு நாலு நாள் ஆச்சுன்னா. உடனே, வீட்டுக்கு கூட்டியாந்து, நீ சாப்பிட்டு பாதி வெச்சுட்டு போயிருந்த புளி சாதத்தை இவளுக்கு போட்டேன். நீ கலர் மேட்சிங் ஆகலைனு போடாமலே வெச்சிருந்த நைட்டியை இவளுக்குக் கொடுத்தேன். சைஸ் பத்தாம போச்சுனு நீ யூஸ் பண்ணாமலே வெச்சிருந்த ஸ்வெட்டர் வீணாதானே போகுதுன்னு இவளுக்குக் எடுத்துக்கொடுத்தேன். கடைசியா, லேசா பிஞ்சு போயி, சும்ம போட்டு வச்சிருந்த செருப்பையும் கொடுத்தேன்' என்றானாம்...

ஜிக்கிச்சா விக்கி விக்கி அழுது கொண்டே, ‘அதெல்லாம் சரிய்யா... இவெளோட எதுக்கு இப்படி?'னு படுக்கையை காட்டிக் கேட்டா! உடனே ஜிங்குச்சா சொன்னானாம்...

‘எல்லாத்தையும் வாங்கிட்டு கிளம்பி போன பொண்ணு, “ஐயா! தர்மம் பண்ணது இவ்வளவுதானா? உங்க சம்சாரம் யூஸ் பண்ணாத வேற ஏதாச்சும் இருக்குதா?”ன்னு கேட்டா! அதான் இப்புடி'
<---><---><---><--->

லீவுல மாமா ஊருக்குப் போயிருந்தான் சின்னப் பயல் சித்தண்ணா! அவனோட மாமா பையன் கொஞ்சம் முத்துன கட்டை. இவனையும் கூட்டிக்கிட்டு ஒரு நைட் கிளப்புக்கு போனான். அங்கே டான்ஸ் ஆடுன லேடீஸ் திடீர்னு ஒவ்வொரு ட்ரெஸ்ஸா கழட்டி, கடைசியா பிறந்த மேனிக்கு நிக்கவும்... சித்தண்ணா அலறிக்கிட்டே அந்த நைட் கிளப்பை விட்டு வெளியே ஓட ஆரம்பிச்சான். பின்னாடியே துரத்திவந்து மடக்கின மாமா பையன் ‘என்னடா ஆச்சு?'ன்னு சித்தண்ணாவ கேட்டான்.

சித்தண்ணா, ‘பெம்பளைங்க பிறந்த மேனியா இருக்கிறத பார்க்கவே கூடாதுன்னு எங்க அப்பா-அம்மா சொல்லியிருக்காங்கடா. அப்படிப் பார்த்தா நம்ம உடம்பு கல்லா மாறிப் போயிடுமாம்' அப்படினு சொல்ல... மாமா பையன் விழுந்து விழுந்து சிரிச்சுக்கிட்டே 'உங்க அப்பாம்மா சக்கையா ஏமாத்தியிருக்காங்கடா' என்றான். சித்தண்ணனோ, 'கிடையாதுடா, அவங்க உண்மைதான் சொல்லி இருக்காங்க. இப்பவே என் உடம்புல கொஞ்சம் கல்லா மாற ஆரம்பிச்சிடிச்சு' என்றானாம்.
<---><---><---><--->
நன்றி: ஆனந்த விகடன்

7 comments:

Raju said...

:)

கலையரசன் said...

ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்.. தமிழாக்கமும் நன்று!

கும்மாச்சி said...

ரெண்டு ஜோக்கும் சூப்பரப்பு.

ஆர்வா said...

ஐயோ... நான் இந்த ரெண்டு ஜோக்கையும் சத்தியமா படிக்கலை

Unknown said...

///டக்ளஸ்... said...
:)///
வாங்க டக்ளசு... நன்றி

///கலையரசன் said...
ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்.. தமிழாக்கமும் நன்று!///
கலை... தமிழாக்கம் செய்தது விகடன்.. நான் காப்பி பேஸ்ட் மட்டும்

///கும்மாச்சி said...
ரெண்டு ஜோக்கும் சூப்பரப்பு.///
கும்மாச்சி... நன்றிங்க

///கவிதை காதலன் said...
ஐயோ... நான் இந்த ரெண்டு ஜோக்கையும் சத்தியமா படிக்கலை///
கவிதை காதலன்... சத்தியமா நம்பிட்டேங்க..

துபாய் ராஜா said...

இரண்டுமே 'A' க்ளாஸ். :))

Unknown said...

///துபாய் ராஜா said...
இரண்டுமே 'A' க்ளாஸ். :))///
நன்றிங்க ராஜா