மனதில் பட்டவை என்கிற தலைப்பில் அரசியல், பொருளாதாரம், விளையாட்டு, தொழில் நுட்பம், சினிமா என்பன பற்றிக் கலந்து கட்டி ஒரு தொடர் பதிவு எழுதி வந்தேன். சென்ற ஜூலை 2ம் திகதிக்குப் பின்னர் அந்த வகையறாப் பதிவுகளை நான் இடவில்லை. இப்போது மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆக, மறுபடியும் மனதில் பட்டவை.
அரசியல்- இலங்கை
ஜனாதிபதி மகிந்தவுக்கும், இராணுவத் தளப்தி சரத் ஃபொன்சேகவுக்கும் ஏதோ கருத்து வேறுபாடாம். அதனால் தான் பிரஜாவுரிமை பெற்றுள்ள அமெரிக்காவுக்கு ஃபொன்சேகா போகப் போகிறாராம். சரத் ஃபொன்சேகாவுக்குக் கிடைத்த புகழ் காரணமாக ராஜபக்ச சகோதரர்களிடையே அதிருப்தி நிலவி வருவதாக சில நாட்களுக்கு முன் வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து வந்த செய்திகளில் உள்ள உண்மை பொய்களைப் பற்றிக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். என்னதான் அறிவு பூர்வமான சிந்தனை, அங்குள்ள மக்களின் நிலவரம், திடீர் அக்கறை போன்ற தலைப்புகளில் எனக்கு அறிவுரை சொல்லவும், திட்டவும் பலபேர் வருவார்கள் என்றாலும் மனதில் அதிஷா சமீபத்தில் எழுதிய 'அடிச்சுக்கிட்டு' என்று தொடங்கி ‘சாவுங்கடா' என்று முடியும் தலைப்பு வருவதைத் தடுக்க முடியவில்லை.


அரசியல்- உலகம்
ஐந்து வருடங்கள் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தால் தானாகவே பிரஜாவுரிமை வழங்கும் சட்ட மூலத்தை பிரித்தானிய அரசு கைவிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் பிரித்தானியாவில் தற்காலிக குடியேற்றவாசிகள் பிரித்தானியப் பிரஜைகளாவதற்கு அவர்களின் தொழில், திறமை மற்றும் தகுதி அடிப்படையிலான ஒரு புள்ளி வழங்கும் முறையில் தேவையான புள்ளிகளைப் பெற்றாக வேண்டும்.
ஐக்கிய அமெரிக்காவுக்கு அகதியாகச் சென்று குடியேறிய முதல் இலங்கையரான ராஜா ரட்ணம் என்பவர் தமது 75வது வயதில் காலமாகியிருக்கிறார். இவர் தனது 19வது வயதில் (1953ம் வருடம்) அமெரிக்காவில் குடியேறி, 10 வருடம் அமெரிக்க ராணுவத்திலும் பணியாற்றி, இலங்கையர்களுக்கான முதல் உணவு விடுதியையும் ஸ்தாபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அமெரிக்காவுக்கு அகதியாகச் சென்று குடியேறிய முதல் இலங்கையரான ராஜா ரட்ணம் என்பவர் தமது 75வது வயதில் காலமாகியிருக்கிறார். இவர் தனது 19வது வயதில் (1953ம் வருடம்) அமெரிக்காவில் குடியேறி, 10 வருடம் அமெரிக்க ராணுவத்திலும் பணியாற்றி, இலங்கையர்களுக்கான முதல் உணவு விடுதியையும் ஸ்தாபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம்

விளையாட்டு

போதை மருந்து சட்ட திட்டம் பற்றிய இந்திய அணிக்கும், ஐ.சி.சி.க்குமான பனிப்போர் கவலையளிப்பதாக உள்ளது. கிரிக்கெட் ஆட்டக்கரர்களை வித்தியாசமாக நடத்துங்கள் என்று யுவராஜ் கேட்டிருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் மற்ற விளையாட்டுக்களையும், வீரர்களையும் கொச்சைப்படுத்துவது போல் தோன்றினாலும், இந்தியக் கிரிக்கெட்டர்கள் விஷயத்தில் இது யதார்த்தமான உண்மை. இது பற்றிய எனது பதிவு இங்கே. இதற்கிடையில் வளர்ந்து வரும் வீரர்களுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் தொடரை இந்தியா ஜெயித்திருக்கிறது. அது பற்றிய விபரம் இங்கே.
ஒரு வருத்தம்
அடிக்கடி இதைப் பற்றி எழுதவேண்டும் என நினைப்பேன். குடிவருபவர்களுக்கு இயலுமானளவு நல்ல வசதி செய்து கொடுக்கக்கூடிய கனடாவின் தெருக்களிலும் பிச்சைக்காரர்களைக் காண்கிறேன். 11ம் வகுப்பில் படித்த வளர்ந்த நாடுகளின் பட்டியலில் கனடாவும் இருந்தது. அப்படியானால் நான் படித்தது பொய்யா? எல்லா நாடுகளிலும் வறுமை இன்றைக்கும் இருக்கிறது என்பது வருத்தமான உண்மை.
ஒரு அடப்பாவிகளா!!! தருணம்
மொண்ட்ரியால் நகரத்திலே தன்னுடைய ஏழு வயது மகனை, பாதுகாப்புக்கான சீட்-பெல்ட் அணியாமல், பின்னே மனைவியையும், மகளையும் ஏற்றியபடி வாகனம் ஓட்ட விட்டுப் படம் பிடித்து, பெருமையாக You Tubeல் விட்டிருக்கிறார் ஒரு தகப்பன். இப்போ போலீசார் பிடித்துக்கொண்டு விட்டார்கள். அந்தத் தகப்பனை கிரிமினல் சட்டக் கோவையில் தண்டிக்க வேண்டும் என்று சிலரும், இல்லை சாலை விதிகளுக்கான சட்டக்கோவையின் கீழ் தண்டித்தால் போதும் என்று சிலரும் வாதாடுகிறார்கள். கடந்த சில நாட்களாக மீடியாவுக்கு நல்ல தீனி போட்ட சம்பவமாக இது அமைந்தது. வீடியோவைக் கீழே காண்க. இதைத் தான் நம்ம பதிவர்கள் சொந்த செலவுல சூனியம் வைக்கிறது என்பார்கள்..
4 comments:
// எல்லா நாடுகளிலும் வறுமை இன்றைக்கும் இருக்கிறது என்பது வருத்தமான உண்மை.//
வறுமையும் மூட நம்பிக்கையும் உலகை பிடித்துள்ள
பெரு நோய்கள்..!
உண்மைதான் வெங்கட்
பொன்னர் யூஎன்பியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர். மகிந்தர் அன்ட் சகோதரர்கள் நாட்டை சுருட்டிவிட்டு ஓடிவிடுவார்கள் இன்னும் சில நாளில் அதுவரை அட்டகாசம் தொடரும்.
நல்லா சொன்னீங்க அனானி
Post a Comment