Monday 4 May 2009

எளிமையாகத் தமிழ் இலக்கணம் -01

தமிழ் தமிழ் என்றும், தமிழே தலை சிறந்த மிகவும் மூத்த மொழி என்றும் நாம் அனைவரும் பல்வேறு நிலைகளில் சொல்லி வரும் போது, சில நேரங்களில் தமிழைப் பற்றிய அடிப்படை அறிவு பற்றிய கேள்விகளுக்கு நம்மால் விடை அளிக்க முடியாமல், திணறும் நிலை ஏற்படுகிறது, அந்நிலை மாற்றி, அடிப்படை தமிழ் இலக்கணம் நாம் அனைவரும் கற்றுணர்ந்த ஒரு ஆற்றலாக இருக்க வேண்டும். இந்த இழையில் தமிழை அடிப்படையில் இருந்து கற்போம், உங்கள் அய்யங்களை கேளுங்கள், நமக்குத் தெரிந்த அளவில் களைய முயல்வோம், இல்லையெனில் கற்க முயல்வோம்.

தமிழ் அரிச்சுவடி என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இதனை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகிறது. தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், உயிர்மெய் எழுத்துக்களும், ஆய்த எழுத்தும் உள்ளன. தற்காலத்தில் வழங்கும் கிரந்த எழுத்துக்கள் சில தமிழ்நெடுங்கணக்கைச் சேர்ந்ததல்ல.

மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றுடனும் உயிரெழுத்து சேரும்போது உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் ஆகும். உயிர் மெய்யெழுத்துக்கள் மொத்தம் 12x18 = 216 ஆகும். இவற்ருடன் 12 உயிர் எழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும் ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து மொத்தம் 247 தமிழ் எழுத்துக்கள். தமிழ் நெடுங்கணக்கில் சேரா கிரந்த எழுத்துக்கள் (ஜ, ஷ, ஸ, ஹ வரிசைகள்) 52ம் க்ஷ, ஸ்ரீ முதலான எழுத்துக்களும் இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பலரும் எதிர்த்தும் வருகின்றனர்.


உயிரெழுத்துக்கள்
ஒரு மொழிக்கு உயிராக அமையும் எழுத்துக்கள் உயிரெழுத்துக்கள் எனப்படுகிறது, ஆங்கிலத்தில் இதனை (VOWELS) என்று அழைக்கிறோம். அவற்றின் வரிசை கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

அ-அகரம்
ஆ-ஆகாரம்
இ-இகரம்
ஈ-ஈகாரம்
உ-உகரம்
ஊ-ஊகாரம்
எ-எகரம்
ஏ-ஏகாரம்
ஐ-ஐகாரம்
ஒ-ஒகரம்
ஓ-ஓகாரம்
ஒள-ஓலைகரம்
ஃ-அஃகேனம்


மெய்யெழுத்துக்கள்

கீழ்க்கண்ட எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் ஆகும், உயிரும், உடலும் இணைந்து வாழ்வை உருவாக்குவது போல், எழுத்துக்களில் உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் இணைந்து உயிர்மெய் எழுத்தையும் உருவாக்குகின்றன.

க் ங் ச ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் -


உயிர் மெய்யெழுத்துக்கள்

முதலாவது வரிசையில் மெய்யெழுத்துக்கள் காட்டப்பட்டுள்ளன. முதல் நிரலில் உயிரெழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்துக்குரிய நிரலும், உயிரெழுத்துக்குரிய வரிசையும் சந்திக்குமிடத்தில் அவற்றின் புணர்ச்சியினால் உருவான உயிர்மெய்யெழுத்துக் காட்டப்பட்டுள்ளது.


உயிர்மெய்யெழுத்துக்கள் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ


க் க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ


ங் ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ


ச் ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ


ஞ் ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ


ட் ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ


ண் ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ


த் த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ


ந் ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ


ப் ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ


ம் ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ


ய் ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ


ர் ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ

ல் ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ


வ் வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ


ழ் ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ


ள் ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ


ற் ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ


ன் ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ


உயிர் மெய்யெழுத்துக்களில் ஓசை வடிவங்கள்


உயிர் மெய்யெழுத்துக்களில் மூன்று வகையான ஓசை வடிவங்கள் கிடைக்கப் பெறும், அவை முறையே வல்லினம், இடையினம் மற்றும் மெல்லினம் ஆகும்.


அதாவது வன்மையாக ஒலிக்கவும், மேல் தாடையின் முற்பகுதியில் ஒட்டி உறவாடி பிறக்கும் ஓசையாம் க, ச, ட, த, ப, ற என்பவை வல்லினமாகவும்.


வன்மையும் அன்றி, மென்மையும் அன்றி ஒலிக்கவும், மேல் தாடையின் நடுப்பகுதியில் இருந்து உறவாடி பிறக்கும் ஓசையாம் ய, ர, ல, வ, ழ, ள
என்பவை இடையினமாகவும்.


மிகவும் மென்மையான ஓசையுடன், மேல் தாடையின் அடிப்பகுதியில் இருந்து உறவாடிப் பிறக்கும் ஓசையாம் ஞ, ங, ந, ண, ம, ன என்பவை மெல்லினமாகவும் அழைக்கப்படுகின்றன.

நன்றி: ஜனார்த்தனன் கந்தையா
http://www.facebook.com/topic.php?topic=10630&
uid=20995841343

No comments: