ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.
சென்ற வார நான் பார்க்கும் உலகம் மிகவும் நீண்ட ஒரு பதிவாகி விட்டதாக நினைக்கிறேன். இந்த வாரத்திலிருந்து ஒவ்வொரு பகுதியிலும் ஆகக் கூடியது இரண்டு செய்திகளை மட்டும் உள்ளடக்க முயற்சிக்கிறேன்.
சென்ற வார நான் பார்க்கும் உலகம் மிகவும் நீண்ட ஒரு பதிவாகி விட்டதாக நினைக்கிறேன். இந்த வாரத்திலிருந்து ஒவ்வொரு பகுதியிலும் ஆகக் கூடியது இரண்டு செய்திகளை மட்டும் உள்ளடக்க முயற்சிக்கிறேன்.
பிறந்தகம்
அயலுறவுத் துறை அமைச்சர் பாலித கோகண்ண மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோரின் பிரித்தானியா செல்வதற்கான விசா கோரிக்கை பிரித்தானியத் தூதரகத்தால் மறுக்கப்பட்டு இருக்கிறது. இருவருடைய கடவுச்சீட்டுகளும் அவரவர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. விசா மறுக்கப்பட்டதுக்குரிய காரணங்கள் சொல்லப்படவில்லை என்றும், அமைச்சர்களை நேரில் வந்து விசா விண்ணப்பத்தைக் கையளித்தால் மட்டுமே விசா வழங்க முடியும் என்று பிரித்தானியத் தூதரகம் சொல்லியிருக்கிறது என்றும் செய்திகள் நிலவுகின்றன. இந்த விஷயத்தில் பிரித்தானியத் தூதரகம் இராஜதந்திர நடைமுறைகளை மீறியிருப்பதாக இலங்கை அயலுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியிருக்கிறது.

புகுந்தகம்

உலகம்


அமெரிக்காவை உலுக்கிய இரட்டைக் கோபுரத் தாக்குதல்கள் அல்லது 9/11 தாக்குதல்கலின் 8வது ஆண்டு நினைவுதினம் வெள்ளிக்கிழமை அனுட்டிக்கப்பட்டது. கடும் குளிர் மற்றும் மழை மத்தியிலும் மக்கள் முன்பு இரட்டைக் கோபுரங்கள் இருந்த இடத்தில் கூடி அஞ்சலி செலுத்தினார்கள். ஜனாதிபதி ஒபாமா மற்றும் அவரது பாரியார் ஆகியோர் வெள்ளை மாளிகையில் சரியாக 8:46 க்கு வெள்ளை மாளிகை முன்றலில் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். என்னதான் அமெரிக்கர்கள் துக்கம் அனுட்டித்தாலும் அவர்களும் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு ஏறத்தாள 30 ஆண்டுகளுக்கு முன் (1973ல்) இதே நாளில் ஒரு கொடும் செயலைச் செய்தார்கள். 1973 ல் சிலி நாட்டின் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட முதலாவது மார்க்ஸிஸ்ட் சோஷலிச ஜனாதிபதியான சல்வேற்றோர் அலெண்டே (Salvatore Allende) அவர்களைப் புரட்சிக் குழுக்களின் பின்னணியில் நின்று கொன்று முடித்தது. சிலியின் ஜனநாயகத்தின் கறுப்பு தினம் என்று வர்ணிக்கப்படும் இந்த நாளிலேயே அமெரிக்காவுக்கும் ஒரு கறுப்புதினம் வந்து சேர்ந்ததுக்குப் பெயர்தான் விதி என்பதா?
வணிகம்- பொருளாதாரம்
கனேடிய வீடு விற்பனைத் துறையில் வீட்டு விலைகள் கடந்த செப்ரெம்பர் மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் முதன் முதலாக ஏறுமுகமாகச் செல்கின்றன என்று கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது. புதிய வீடுகளுக்கான விலைகள் கல்கரி, வன்கூவர், ஹமில்ற்றன் மற்றும் வின்சர் ஆகிய இடங்களில் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. வீடு விற்பனைத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் பொருளாதார ரீதியில் மகிழ்ச்சியானது என்றாலும், அரசாங்கம் பற்றி நிலவும் நிலையில்லாத் தன்மை அந்த மகிழ்ச்சியக் கொண்டாட முடியாமல் செய்திருக்கிறது.
விளையாட்டு
இலங்கை முத்தரப்புப் போட்டி இறுதியாட்டத்துக்கு இலங்கை மற்றும் இந்தியா அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன. இரு அணிகளுமே நியூசிலாந்து அணியை இலகுவாக வென்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறி இருக்கிறார்கள். முத்தரப்புப் போட்டி பற்றிய என்னுடைய கருத்துக்களைத் தனிப் பதிவாக எதிர்பாருங்கள். இதே வேளை 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியா இங்கிலாந்தை முதல் மூன்று போட்டிகளில் படுதோல்வி அடையச் செய்திருக்கிறது.

சினிமா

அடப்பாவிகளா தகவல்
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்கள்ளுக்கில் காமத்துக்கு உண்டு- குறள் 1281
இதை எங்கே பயன்படுத்தி இருக்கிறார்கள் தெரியுமா? ஒரு செக்ஸ் வலைப்பூவில். ‘நம்ம ஊர் ரெக்கார்ட் டான்ஸ்' என்று கிடைத்த ஒரு சுட்டியைத் தொடர இந்த வலைப்பூவில் கொண்டு சேர்த்தது. வள்ளுவரை எங்கெல்லாம் பயன்படுத்துகிறார்கள் பாருங்கள்.
அதைவிடுங்கள, ரெக்கார்ட் டான்ஸ் எப்படி இருந்தது என்கிறீர்களா?? விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ‘ரெக்கார்ட் டான்ஸ் கூடவே கூடாது' என்று ஒரு கூட்டம் வாதிட்டபோது எனக்கு விபரீதம் புரியவில்லை. நான் ஏதோ சும்மா பாட்டுக்கு ஆடுவதுதானே இதுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று நினைத்தேன். மேற்படி வலைப்பூவில் இருந்த அந்த நடனங்கள் ஒரு அம்மன் கோவில் திருவிழாவில் ஆடப்பட்டவை. ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக உடலுறவு கொள்வதைத் தவிர எல்லாம் செய்தார்கள் மேடையில்.
அதைவிடுங்கள, ரெக்கார்ட் டான்ஸ் எப்படி இருந்தது என்கிறீர்களா?? விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ‘ரெக்கார்ட் டான்ஸ் கூடவே கூடாது' என்று ஒரு கூட்டம் வாதிட்டபோது எனக்கு விபரீதம் புரியவில்லை. நான் ஏதோ சும்மா பாட்டுக்கு ஆடுவதுதானே இதுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று நினைத்தேன். மேற்படி வலைப்பூவில் இருந்த அந்த நடனங்கள் ஒரு அம்மன் கோவில் திருவிழாவில் ஆடப்பட்டவை. ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக உடலுறவு கொள்வதைத் தவிர எல்லாம் செய்தார்கள் மேடையில்.
8 comments:
அழகான தொகுப்பு. நன்றி கிருத்திகன்!
நன்றி பாலா
உங்களின் மெய் சொல்லப் போறேனை வாரா வாரம் வாசிக்கிறேன். நன்றாக இருக்கிறது.
நான் பார்த்த உலகம் என்று இருக்க வேண்டும் கீத்! பொருள் மாறுகிறது பாருங்கள்...
அருமையான தொகுப்பு!!
கீத் உன்னைப்போல் ஒருவனில் அந்த வீடீயோக் காட்சி வராது என நினைக்கின்றேன் அதனை அல்பம் போல் செய்திருக்கிறார்கள். மனுஷ்யபுத்திரன் வரிகள் அருமை.
அந்த ரொக்கோர்ட் டான்ஸ் நானும் பார்த்தேன், கோயிலில் வைத்து இதெல்லாம் செய்வது சரியில்லை
நன்றி அருண்மொழிவர்மன் அண்ணா
நான் பார்க்கும் உலகத்தில் என்னைத் தாக்கியவையைப் பதிகிறேன் கலை... பொருள் ஓ.கே போலத் தெரிகிறது
வந்தியண்ணா..
அது உன்னைப் போல் ஒருவனுக்கு ஒரு Promotional Video.. படத்தில் வராது.. இந்தப் பாணியை முதலில் அறிமுகம் செய்தது (தமிழில்) சசிக்குமார் என்று நினைக்கிறேன். (தேநீரில் சினேகிதம்).. என்ன சசி எடுத்த அளவுக்குக்கூட இது இல்லை.. இது ஸ்ருதியின் ஐடியா போல இருக்கிறது.. அவ்வளவு அமெச்சூர்த்தனமான வீடியோ.
அந்த ரெக்கோர்ட் டான்ஸ் பாத்த பிறகு ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்' பாட்டை இப்பிடியும் பாக்கலாமா என்று தோன்றியது
Post a Comment